search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
    X

    கராத்தே போட்டியில் மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை

    கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

    • தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருமங்கலம் மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • கொடைக்கானலில் 6-வது தேசிய அளவிலான ஓப்பன்கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

    திருமங்கலம்

    கொடைக்கானலில் 6-வது தேசிய அளவிலான ஓப்பன்கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் திருமங்கலம் உலக ஷோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் 22 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கட்டா மற்றும் குமிட்டே பிரிவுகளில் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். நந்தினி, டயானா, மனீஷா, கிருஷ்ணகிஷோர், கோகுல்பதி, கருத்திக் ஆகியோர் தங்கப்பதக்கமும், தாரணி, சஞ்சுஷிரி, தரண்கார்த்திக், பாலபிரணவ், தங்கேஸ்வரன், சூரியபிரகாஷ் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கராத்தே சம்மேளத்தின் தமிழ்நாடு பிரிவு மாநில பிரதிநிதி பால்பாண்டி, கராத்தே மாஸ்டர்கள் நவாஷ், சுபாஷ், விக்னேஷன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×