search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Literature"

    • தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
    • சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.

    "தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

    "மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.

    1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.

    • 51 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம் உள்ளிட்ட 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கலை விழாவை வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன.

    இதில் நுண்கலை, இசை, கருவி இசை, தோற்கருவி, துளை காற்று கருவி, தந்திக் கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம் உள்ளிட்ட 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    விழாவில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 51 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை வேதாரண்யம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், வேதாரண்யம் வட்டாட்சியர் ஜெயசீலன், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன், பள்ளி துணை ஆய்வாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் வயோதிகம் காரணமாக காலமானார். #VSNaipaul
    லண்டன்:

    கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபாலின் முழுப்பெயர் சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால் என்பதாகும். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவார். 

    பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ள நைபால், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்’ என்ற புத்தகத்துக்காக அந்தாண்டு நோபல் பரிசு நைபாலுக்கு வழங்கப்பட்டது.

    இந்தியாவில் இருந்து கரீபியன் நாட்டில் குடியேறிவர்களை பற்றி இந்த புத்தகம் பேசியது. இந்நிலையில், 85 வயதான அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். நைபாலின் மறைவுக்கு சர்வதேச அளவிலான பல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    ‘கலை, இலக்கியங்கள் மூலம் நமது பண்பாட்டை காக்க முடியும்’ என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
    சென்னை:

    பொற்றாமரை கலை-இலக்கிய அரங்கத்தின் 14-வது ஆண்டு தொடக்க விழா சென்னை, தியாகராயநகரில் நேற்று நடந்தது. விழாவுக்கு பொற்றாமரை தலைவரும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தலைமை தாங்கினார். சின்மயா மிஷன் பூஜ்யசுவாமி மித்ரானந்தா ஆசியுரை வழங்கினார்.

    விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோருக்கு ‘நல்ல புரவலர்கள்’, பிரேமா நந்தகுமார், சுகி சிவம் ஆகியோருக்கு ‘நல்லறிஞர்கள்’, பின்னணி பாடகி வாணி ஜெயராம், சி.வி.சந்திரமோகன் ஆகியோருக்கு ‘நற்கலைஞர்கள்’ என்னும் கவுரவத்துடன் இந்த ஆண்டுக்கான ‘பொற்றாமரை விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் கே.பாண்டியராஜன், இல.கணேசன் இருவரும் இணைந்து விருதுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் வாணிஜெயராம் கலந்துகொள்ள இயலாததால் அவருக்கு பதிலாக வக்கீல் சுமதி விருதை பெற்றுக்கொண்டார்.

    விழாவில் இல.கணேசன் பேசியதாவது:-


    இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள நமது நாட்டின் அடித்தளமாக அமைந்துள்ள பாரம்பரிய பண்பாட்டின் வெளிப்பாடாக விளங்குபவை கலை, இலக்கியங்கள்.

    எனவே கலை, இலக்கியங்கள் மூலம் நமது பண்பாட்டினைக் காக்க முடியும். இதனை முன்னெடுத்து செல்பவர்களை அடையாளம் கண்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைப்பதற்காக பொற்றாமரை அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் நம் நாட்டின் மீது பூசப்படும் சாம்பலும் விலகிவிடும்.

    இலக்கியம், கலை, பண்பாடு போன்றவை வளர்ந்தால் ஒரு சமுதாயம் தானாகவே வளர்ச்சி கண்டுவிடும். இதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் பொற்றாமரை. கடந்த 13 ஆண்டுகளாக மாதம் ஒரு கூட்டம் நடத்தி அதில் நம்முடைய மொழி, கலாசாரம், பண்பாடு, இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தலைசிறந்த பேச்சாளர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் தற்போது 13 ஆண்டுகளை நிறைவு செய்து 14-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நல்ல புரவலர்கள், நல்லறிஞர்கள், நற்கலைஞர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சுதா சேஷய்யன் பேசினார். உன்னிகிருஷ்ணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. தேசிய சிந்தனையுள்ள இலக்கிய ஆர்வலர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
    வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
    தர்மபுரி:

    ராமாயண ரகசியம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு தர்மபுரி டி.என்.சி. விஜய் மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெ.பி.நாகராஜன், தொழில் அதிபர் டி.என்.சி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சஞ்சீவராயன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இதிகாசங்கள் நமது வாழ்க்கையை செழுமைப்படுத்துகின்றன. இந்திய மண் பெருமைப்படும் வகையில் நமக்கு ராமாயணமும், மகாபாரதமும் கிடைத்து உள்ளன. ராமாயணம் இதயம் போன்றது. மகாபாராதம் மூளையை போன்றது. உலகத்தில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் படித்த பின்னர் கம்பராமாயணத்தை படித்தால் கம்பனின் படைப்பாற்றல் குறித்து தெரியவரும். கம்ப ராமாயணத்தில் திருக்குறள் சார்ந்த 700 கருத்துக்களை காணமுடிகிறது. வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆன்மிகத்தில் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர். 
    தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார். #NobelPrizeforLiterature #LarsHeikensten #NobelPrizepostponed

    ஸ்டாக்ஹோம்:

    உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்தது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இலக்கிய படைப்புகளுக்கான நோபல் பரிசு தேர்வுக்குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர். 



    இந்நிலையில், 2018-ம் ஆண்டு மட்டுமின்றி 2019-ம் ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன், "தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை", என்று தெரிவித்துள்ளார். #NobelPrizeforLiterature #LarsHeikensten #NobelPrizepostponed
    ×