என் மலர்
நீங்கள் தேடியது "சாகித்ய அகாடமி"
- தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
புதுடெல்லி:
தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாகித்ய அகாடமி–யின் 2025-ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லி சாகித்ய அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
தமிழில் ''ஒற்றை சிறகு ஓவியா'' என்ற நாவலுக்காக பால புரஸ்கார் விருதை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றார்.
மேலும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
- இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் 'ஒற்றைச் சிறகு ஓவியா' நூலுக்காக சாகித்ய அகாடமி-யின் பால புரஸ்கார் விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என @tnschoolsedu-இன் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் 'கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்" சிறுகதைத் தொகுப்புக்காக #YuvaPuraskar பெறத் தேர்வாகி இருக்கும் திரு. லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களை தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினை பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது #DravidianModel அரசின் சார்பில் வாழ்த்துகிறேன் என அறிக்கையில் கூறினார்.
- தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.
- காளையார் கோவில் போரை முன் வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் இந்த நாவலை எழுதி உள்ளார்.
இந்நிலையில் எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை எனும் வரலாற்றுப் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மு.ராஜேந்திரனுக்கு என் பாராட்டுகள். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே. நல்லதம்பிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ஆதனின் பொம்மை என்ற நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
- திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
தமிழக நூலுக்கான சாகித்ய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆதனின் பொம்மை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதய சங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலின் மூலம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிய முடியும்.
இதேபோல், திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராம் தங்கம் கூறுகையில், விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல விருதுகள் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
- தேவிபாரதி என்ற புனைப்பெயரில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் எழுதிவருகிறார்.
- கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.
2023-ம் ஆண்டுக்கான 24 மொழிகளில் சிறந்த புத்தககங்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த நாவலாக 'நீர்வழிப் படூஉம்' தேர்வு செய்யப்பட்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
தேவிபாரதி என்ற புனைப்பெயரில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் எழுதிவருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இவருடைய மூன்றாம் நாவல்தான் 'நீர்வழிப் படூஉம்'. இந்நாவல், குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைப் பற்றி பேசும் நாவலாகும்.
சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தேவி பாரதியின் மகள் நந்தினி கூறியுள்ளார்.
- யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர்.
- தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கே லோகேஷ் ரகுராமன் சாகித்ய விருது பெறுகிறார்.
தமிழில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'தன்வியின் பிறந்தநாள்' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர்.
2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வெளியான தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கே லோகேஷ் ரகுராமன் சாகித்ய விருது பெறுகிறார்.
- இலட்ச ரூபாய் நிதியுடன் சாகித்திய அகாதெமி விருதானது மதிப்புமிக்க விழா ஒன்றில் வழங்கப்படுகின்றது.
- 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டது.
சாகித்திய அகாதெமி அமைப்பின் செயலாளர் ஸ்ரீனிவாசராவ் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சாகித்திய அகாதெமி, 1955 ஆம் ஆண்டு முதற்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் அங்கிகரிக்கப்பட்டுள்ள 24 இந்திய மொழிகளுக்கு சாகித்திய அகாதெமி விருது' வழங்கி வருகிறது.
அங்கிகரிக்கப்பட்ட அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளின் இந்திய எழுத்தாளர்கள் எழுதிய மிகச் சிறந்த புத்தகங்களுக்கு அகாதெமியின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அகாதெமியின் இலட்சனை பதித்த கேடயம், ஒரு இலட்ச ரூபாய் நிதியுடன் கூடிய இந்த விருதானது மதிப்புமிக்க விழா ஒன்றில் வழங்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதுக்காக இந்திய எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் நலன் விரும்பிகள், பதிப்பாளர் ஆகியோரிடமிருந்து புத்தகங்களைச் சாகித்திய அகாதெமி வருவிக்கிறது. 2019, 2020, 2021 2022 2023 ஆகிய ஆண்டுகளில் முதன்முதலில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் (அதாவது, ஜனவரி 1, 2019 முதல் 31 டிசம்பர் 2023 வரை) 2025 ஆம் ஆண்டுக்கான விருதிற்குப் பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பப் படிவத்துடன் பரிந்துரைக்கப்படும் புத்தகத்தின் ஒரு படியை இணைத்து 28 பிப்ரவரி 2025 க்குள் அகாதெமி அலுவகத்திற்கு அனுப்ப வேண்டும். விருது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, www.sahitya-akademi.gov.in என்ற இணையதளத்தில் உள்ள சாகித்திய அகாதெமி விருதுக்கான விதிகளைப் பாக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும்.
பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதை நூலான 'எனது ஆண்கள்' நூலை தமிழில் மொழி பெயர்த்த பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலாவிற்கு எனது பாராட்டுகள்.
கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.






