என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால புரஸ்கார் விருது"

    • தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
    • இந்த விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.

    புதுடெல்லி:

    தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சாகித்ய அகாடமி–யின் 2025-ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லி சாகித்ய அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.

    தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.

    தமிழில் ''ஒற்றை சிறகு ஓவியா'' என்ற நாவலுக்காக பால புரஸ்கார் விருதை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றார்.

    மேலும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.

    • இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் 'ஒற்றைச் சிறகு ஓவியா' நூலுக்காக சாகித்ய அகாடமி-யின் பால புரஸ்கார் விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என @tnschoolsedu-இன் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

    அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் 'கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்" சிறுகதைத் தொகுப்புக்காக #YuvaPuraskar பெறத் தேர்வாகி இருக்கும் திரு. லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களை தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினை பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது #DravidianModel அரசின் சார்பில் வாழ்த்துகிறேன் என அறிக்கையில் கூறினார்.

    • தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
    • விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது.

    தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), துணிச்சல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிக்ழ்ச்சியில் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

    விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர்.
    • தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கே லோகேஷ் ரகுராமன் சாகித்ய விருது பெறுகிறார்.

    தமிழில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில், 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'தன்வியின் பிறந்தநாள்' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர்.

    2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வெளியான தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கே லோகேஷ் ரகுராமன் சாகித்ய விருது பெறுகிறார்.

    ×