என் மலர்
நீங்கள் தேடியது "Royal Swedish Academy of Sciences"
- 5 துறைகளிலும் சாதனை புரிந்தவர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகிறது
- மூவரும் குவான்டம் டாட்ஸ் துறையில் வெற்றிகரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மருத்துவ மற்றும் பவுதிக துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியலுக்கான ராயல் சுவீடிஷ் அகாடமி இது குறித்து அறிவித்திருப்பதாவது:
நேனோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான "குவான்டம் டாட்ஸ்" துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு நுகர்வோர் மின்னணு துறையிலும் மருத்துவ துறையிலும் பல்வேறு புரட்சிகள் ஏற்பட வழி வகுத்த அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைகழகத்தை சேர்ந்த அமெரிக்கரான மவுங்கி பவெண்டி (Moungi Bawendi), அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த லூயி ப்ரு (Louis Brus) மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் (Alexey Ekimov) ஆகிய மூவருக்கும் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அகாடமி அறிவித்திருக்கிறது.
இந்த மூவரின் பெயர்களை வேதியியல் துறையில் நோபல் பரிசை பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் ஜோஹன் அக்விஸ்ட் (Johan Aqvist) உறுதிப்படுத்தினார்.
வழக்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பரிசுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், இம்முறை இன்று காலை சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலமாக இந்த மூவரின் பெயர்கள் முன்னரே கசிந்தது சர்ச்சையை உருவாக்கியது.
- தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
- சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.
"தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.
"மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.
1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.






