என் மலர்
நீங்கள் தேடியது "Sweden"
- இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
- அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.
வாஷிங்டன்:
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.
இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவீடன் நாட்டில் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, கிரீன் கட்சி கூட்டணியின் சிறுபான்மை ஆட்சி நடக்கிறது.
அங்கு செப்டம்பர் 10-ந் தேதி (நேற்று) நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயக கட்சி, சுவீடன் ஜனநாயக கட்சி, மிதவாத கட்சி இடையே முக்கிய போட்டி உள்ளது. அகதிகள் குடியேற்றப்பிரச்சினை முக்கிய பிரச்சினையாக பிரசாரத்தில் இடம் பிடித்தது.

சுவீடன் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும் ஆபத்தானது என பிரதமர் ஸ்டீபன் லோப்வென் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தை மறுத்து சுவீடன் ஜனநாயக கட்சி தலைவர் ஜிம்மி ஆகெஸ்ஸான் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஆரம்பத்தில் மந்தமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு பின்னர் விறுவிறுப்பு அடைந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.
பிரதமர் ஸ்டீபன் லோப்வென் மனைவி உல்லாவுடன் வந்து ஸ்டாக்ஹோமில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.
இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆளும் சமூக ஜனநாயக கட்சி கூட்டணி, பிற கட்சிகளை விட கூடுதல் இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்க வைக்கிற வாய்ப்புகள் இருப்பதாக அவை தெரிவிக்கின்றன. #Sweeden #ParliamentElection
சமரா:
உலககோப்பை கால்பந்து போட்டியில் 3-வது மற்றும் 4-வது கால்இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.
சமரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவீடன் ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியா (1-0), மெக்சிகோவை (3-0) வென்று ஜெர்மனியிடம் (1-2) தோற்று, கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் துனிசியா (2-1), பனாமா (6-1) அணிகளை வென்று பெல்ஜியத்திடம் தோற்று (0-1) இருந்தது. 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டிஷூட்டில் தான் வென்றது.
1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி சுவீடனின் அதிரடியை சமாளிப்பது சவாலானது. அந்த அணி பின்களத்தில் வலுவாக இருக்கிறது.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து- 8, சுவீடன்-7-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து அணியில் ஹாரிகேன் முதுகெலும்பாக இருக்கிறார். ஸ்டெர்லிங், லிங்கார்டு போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர். சுவீடன் அணியில் கிரண்விஸ்ட், போர்ஸ்பெர்க், பெர்த் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.
ரஷியா ‘லீக்’ ஆட்டத்தில் சவுதி அரேபியா (5-1), எகிப்து (3-1) அணிகளை தொடர்ந்து உருகுவேயிடம் 0-3 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.
குரோஷியா அணி தோல்வி அடையவில்லை. 2-0 என்ற கணக்கில் நைஜீரியாவையும், 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவையும், 2-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கை பெனால்டிஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
குரோஷியா அணி பலம் பொருந்தியவை என்பதால் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். இதேபோல கோல்கீப்பர் அகிள்பீவ் முதுகெலும்பாக இருக்கிறார். குரோஷியா அணியில் மோட்ரிச், மென்டிச், ரகட்டிச் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகள் மோதிய போட்டியில் குரோஷியா 1 ஆட்டத்தில் வென்றது. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது. #WorldCup2018



உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது.
4 முறை உலக கோப்பையை வென்ற அந்த அணி தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மெக்சிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.
ஜெர்மனி அணி 2-வது ஆட்டத்தில் சுவீடனை இன்று சந்திக்கிறது. இரவு 11.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஜெர்மனிக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் ஜெர்மனி வீரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள்.
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
சுவீடன் அணி ‘டிரா’ செய்யும் நோக்கில் விளையாடுவார்கள். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. சுவீடன் வெற்றி பெற்றால் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ஜெர்மனி 15-ல், சுவீடன் 12-ல், வெற்றி பெற்றுள்ளன. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. கடைசியாக 2013-ல் மோதிய ஆட்டத்தில் ஜெர்மனி 5-3 என்ற கணக்கில் வென்று இருந்தது.
இதே பிரிவில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மெக்சிகோ- தென்கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் மெக்சிகோ வென்று 2-வது சுற்றில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது. கொரியா தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
மெக்சிகோ தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இருந்தது. தென்கொரியாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் மெக்சிகோ 6 முறையும், தென்கொரியா 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது.
‘ஜி’ பிரிவில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- துனிசியா அணிகள் மோதுகின்றன.
பெல்ஜியம் தொடக்க ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது. இதனால் அந்த அணி துனிசியாவை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.
துனிசியா தொடக்க ஆட்டத்தில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. இன்றும் தோல்வி அடைந்தால் அந்த அணி வெளியேற்றப்படும்.
இரு அணிகளும் 3 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டிரா’ ஆனது. #Fifa2018 #WorldCup2018