என் மலர்
நீங்கள் தேடியது "உடலுறவு"
- இந்த செய்தியைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தனர்.
- உடலுறவு போட்டி தொடர்பான கோரிக்கையானது ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
எப்போதுமே வினோதமான செய்திகள் வேகமாக பரவுவதுடன் கடும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது. ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் ட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன. இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
ஆனால் ஸ்வீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.
அதாவது, ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
'ஸ்வீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- உக்ரைனுடன் நடந்து வரும் போரினால் 6 லட்சம் ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
- ரஷியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை.
1999 ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. உக்ரைனுடன் நடந்து வரும் போரினால் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அந்நாட்டில் மக்கள்தொகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷியாவில் மக்கள்தொகை சரிந்து வரும் நிலையில் பாலியல் விவகாரங்கள் தொடர்பாக, பாலியல் அமைச்சகத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
குழந்தை பிறப்பை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தம்பதிகள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வசதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணையம் மற்றும் மின்சாரத்தை முடக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
- நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார்.
- ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும்.
பிரபல பாடகி சின்மயி எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவிற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த எக்ஸ் பதிவில், "நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார். நேற்று இரவில் பிளிங்கிட்டில் மட்டும். 1.2 லட்சம் மற்ற இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சந்தையில் 1 கோடி ஆணுறை பாக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கும். இந்த தலைமுறையில் கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அதிர்ஷ்டம் ஆகும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ் பதிவை சின்மயி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு கன்னிப் பெண்கள் வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆடு, நாய் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்வதற்கு ஆணுறைகளை வாங்கும் வரையில், ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும். மேலும் உங்கள் சகோதரர்கள் மற்றும் ஆண் நண்பர்களிடம் திருமணம் வரை உடலுறவு கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
Blinkit CEO posted that 1.2 lakh packets of condoms were delivered last night. Just for last night and just for Blinkit. Other e-commerce sites and market sales would be as high as 10 million. Good luck finding a virgin girl to marry in this generation.
— ︎ ︎venom (@venom1s) January 1, 2025
- சத்தீஸ்கரில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் அவருடைய மனைவி கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜக்தல்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.
இது குறித்து கணவன் சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில் 2013-ம் ஆண்டு ஐ.பி.சி. பிரிவு 375-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரின் செயலை குற்றமாக கருத முடியாது. மனைவி குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் போது கணவன் செய்யும் எந்த ஒரு பாலியல் செயலும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. சம்மதம் இனி முக்கியமில்லை.
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமில்லை.இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.