என் மலர்
நீங்கள் தேடியது "La Ganesan"
- இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இல.கணேசன் காலமானார்.
மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசன் வீட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு வைக்கப்பட்டு இருந்த இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், இல.கணேசன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இல.கணேசன் காலமானார். அந்நேரம் 'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற தொடர் பிரசார சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு இருந்தார். அதனால் இல.கணேசனின் மறைவுக்கு வரமுடியாத காரணத்தினால் இன்று இல.கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
- 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
- இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவர் தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் தனது வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
இல கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி எக்ஸ்-இல் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், "நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களின் மறைவால் வேதனை அடைந்தேன். தேச சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
தமிழ்நாடு முழுவதும் பிஜேபி-யின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார்.
- நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
- துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
அடுத்த மாதம் நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான இல.கணேசன் மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் மந்திரி பதவி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் டெல்லியில் மோடி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
முறைப்படி மத்திய மந்திரி சபை பதவி ஏற்றுள்ளது. இது முழுமையான மந்திரி சபை அல்ல. மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில், திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இதுபற்றி பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது:-

தமிழகத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு 50 சதவீத வெற்றி வாய்ப்புள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை,
அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ என்று சர்ச்சையை கிளப்பிய கமல் இந்து என்பது இந்துக்கள் பெயர் அல்ல என்று மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர்கூறி இருப்பதாவது:-
ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.
முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளதாவது:-
கமல் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
விஷ்ணுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் ‘இமயம் தொடங்கி இந்து மகா சமுத்திரம் வரை பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பு இந்துஸ்தானம்’ என்று விவரிக்கிறது. இந்துஸ்தான் என்பது மட்டுமல்ல. இந்த நாட்டின் எல்லையையும் குறிப்பிடுகிறது. இது ஆண்டவனால் உருவாக்கப்பட்ட தேசம்.
நம்நாட்டில் இருக்கும் மதங்களை சனாதன தர்மம் என்போம். நம் நாட்டில் தோன்றிய எல்லா மதங்களுக்கு இடையேயும் ஒரு ஒற்றுமை உண்டு.
ஆனால், பின்நாளில் அந்நிய மண்ணில் தோன்றி இங்கு வந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் அடிப்படை கூறுகள் வேறுபட்டவை.
அந்த இரு மதங்களும் வந்ததால் நம் நாட்டில் தோன்றிய மதங்களை இந்துஸ்தான மதங்கள் என்று வகைப்படுத்தினார்கள். பின்னர் இந்து மதங்கள், இந்து மதம் என்று நமது சவுகரியத்துக்காக நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் இது. மாற்றான் தரவில்லை. அவன் வருவதற்கு முன்பே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட பெயர்தான் இந்து.
சங்கராச்சாரியார் தனது உதவியாளரிடம் பைலை கொடுத்து இதை வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்பது வழக்கம். திடீரென்று ஒரு நாள் இந்த பைலை ‘குடுமி’ வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்றாராம்.
அதை கேட்டதும் உதவியாளருக்கு ஆச்சரியம். என்ன இப்படி குடுமி வெங்கட்ராமன் என்று சொல்கிறாரே என்று குழம்பிபோனார். அப்புறம்தான் அவருக்கு புரிந்தது அங்கு புதிதாக இன்னொரு வெங்கட்ராமன் வேலையில் சேர்ந்து இருந்தார்.
எனவேதான் ஏற்கனவே இருந்த வெங்கட்ராமன் குடுமி வைத்திருந்ததை அடையாளப்படுத்துவதற்காக அப்படி கூறி இருக்கிறார். பல மதங்களின் வருகையால் இங்குள்ள மதங்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த நாட்டின் மதம் இந்து மதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
இந்து என்று சொல்வதற்கு இங்குள்ளவர்கள் வெட்கப்படலாம். ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்றும் ‘மோடி பிரைம் மினிஸ்டர் அப் இந்துஸ்தான்’ என்றுதான் சொல்கிறார்கள்.
இங்கிருந்து ஹஜ் புனித பயணம் செய்பவர்களையும் அங்குள்ளவர்கள் இந்து என்றே சொல்கிறார்கள். நம் தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒன்றே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இதுகுறித்து பழம்பெரும் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டரும், பா.ஜனதா மூத்த தலைவருமான இல.கணேசன் கூறியதாவது:-

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பாராட்டி இருக்கிறார். பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார். அழகிரி விவரம் தெரியாமல் பேசி இருப்பாரா என்பது சந்தேகம்.
ஆர்.எஸ்.எஸ்.ஐ. குற்றம் சாட்டுவது போல் குற்றம் சாட்டி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை புகழுவதற்காக அப்படி பேசி இருக்கலாம்.
இஸ்லாமிய சமுதாயத்தை பார்த்ததும் சில தலைவர்கள் நிலைதடுமாறுவார்கள். கமலும் அப்படி தடுமாறியதன் விளைவுதான் அவரது அர்த்தமற்ற பேச்சு.
மகாத்மா காந்தியை கொன்றவர் கோட்சேதான். அதற்கு புலனாய்வு அவசியமில்லை. சுட்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டார். அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அதை ‘இந்து’ என்ற வார்த்தையை நினைவு படுத்தினால் தான் கோட்சே நினைவுக்கு வருவாரா?
அப்படியானால் காந்தி யார்? அவரும் நல்ல இந்து தானே! கோட்சே பற்றி மட்டும் இந்து என்ற வார்த்தையை சேர்ப்பது ஏன்? இது பொருத்தமற்ற வார்த்தை. சூடான ஐஸ்கிரீம் என்பதுபோல் இந்து ஒரு போதும் பயங்கரவாதி ஆக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இல.கணேசன் எம்.பி. நாகர்கோவிலில் நேற்று பிரசாரம் செய்தார்.
முன்னதாக இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும், பயங்கரவாதத்தை அழிக்கும் வகையிலும் இருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பயங்கரவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது. கி.வீரமணி இந்து கடவுளை அவதூறாக பேசியதை மூடி மறைக்கும் வகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.
கடந்த தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை இழந்து விட்டது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
தன்னை கொல்ல சதி நடப்பதாக ராகுல் மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலினின் பேச்சுக்கள் பண்பில்லாதவை. போலித்தனமாவை. தற்போது கண்ணியம் என்பது பிரசாரத்தில் இல்லாமலே போய் விட்டது. பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை குறித்த ரஜினியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 40 தொகுதிகளையும் கைப்பற்றும். தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #LaGanesan #Rajinikanth
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீரிட்டு எழுந்ததை பார்த்தோம்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது இதுவரை சந்தித்திராத பெரிய தாக்குதல். இந்திய தேசம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருந்த இந்த நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரவேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார்.
அதன்படி இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல்களை நடத்தி விட்டு வெற்றிகரமாக திரும்பிவிட்டது. இதை யாரும் அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது.
இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடையவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தேசமே ஆர்த்தெழுந்து பதிலடிதரும் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது.

தேசிய அளவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை எடுத்துச்சொல்லி பிரசாரம் செய்து வருகிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி தனி நபருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார் என்பதை மறந்து கீழ்த்தரமான வார்த்தைகளால் ராகுல்காந்தி அர்ச்சித்து வருகிறார். இது தரமான அரசியலுக்கும், தரமற்ற அரசியலுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.
இது லோட்டசுக்கும் (தாமரை), லூட்டர்சுக்கும் (கொள்ளையர்கள்) இடையே நடக்கும் தேர்தல். காங்கிரஸ் என்றாலே ஸ்கேம் (ஊழல்) என்று அர்த்தம். மோடி என்றால் ஸ்கீம் (திட்டம்) என்று அர்த்தம். பிரதமர் மோடிக்கு தேசமே சக்தி. ராகுல்காந்திக்கு குடும்பமே சக்தியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Surgicalstrike2 #BJP #LGanesan
லஷ்மன் ஸ்ருதி சார்பில் சாமியே சரணம் அய்யப்பா என்ற தலைப்பில் 29-ம் ஆண்டு பக்தி இசை பூஜை என்ற பக்தி பாடல் இசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு இயக்குனர் கங்கை அமரன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. பொருளாளர் துரை முருகன், முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இல.கணேசன் பேசியதாவது:-

அசைக்க முடியாத இறை நம்பிக்கை இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அய்யப்பன் இசை பூஜைக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை லஷ்மன் ஸ்ருதி நிர்வாகிகள் ராமன், லஷ்மன் செய்திருந்தனர். #DuraiMurugan #LaGanesan
பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக எடுத்தாக எதிர்கட்சிகள் பாராட்டின. ஆனால் அடுத்த நாளே குறை சொல்ல தொடங்கி விட்டார்கள்.
எதிர்கட்சிகள் அப்படித்தான் செய்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம். கோஷம் கூட எழுப்பலாம். ஆனால் வன்முறையில் ஈடுபடக்கூடாது.
எனவே அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு வழங்கும் நிவாரணத் தொகையை நேரிடையாக வங்கி கணக்கில் செலுத்தினால் தான் முழு தொகையும் பயனாளிகளுக்கு கிடைக்கும். வெள்ளச் சேதங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை அளித்த பின்பு தான் அதற்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க முடியும்.
புயல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்காக மத்திய அரசிடம் தமிழக பா.ஜ.க. சார்பில் அறிக்கை கொடுக்க இருக்கிறோம்.
ரஜினி, கமல், விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் ஆட்சிக்கு வர வேண்டும்? என தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்கிறீர்கள். இடைத்தேர்தலே நடைபெறுமா? என்ற நிலையில் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கை பார்த்து பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை சேர்த்துக் கொண்டு போட்டியிட நினைப்பவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள தயங்குவது போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து தனியார் மண்டபத்தில் இல.கணேசன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. #DharmapuriBusBurning #BJP #LaGanesan
சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க கோரி கோவையில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் இன்று ஊர்வலம் நடைபெற்றது.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. இதனை பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் எம்.பி. தொடங்கி வைத்தார்.
இதில் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் ஆயிரக்கணக்கான மகளிர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சரண கோஷம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் வி.கே.கே. மேனன் சாலை, பாரதியார் சாலை வழியாக காந்திபுரம் திருவள்ளூவர் பஸ் நிலையம் முன் முடிவடைந்தது.
ஊர்வலத்தை தொடங்கி வைத்து இல. கணேசன் எம்.பி. கூறியதாவது-
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கொதித்து போய் இருக்கிற இந்து தாய்மார்களுக்கு வடிகாலாய் அமைய இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது.
கோவை உள்பட பெருநகரங்களில் இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாரம்பரியத்தை கவனத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டு உள்ளது.

மத பிரச்சனையை தூண்டும் வகையில் அவர்கள் சென்று உள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைபாடு குறித்து கேட்ட போது, இது தொடர்பாக கேரள காவல் துறை தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள முதல்-அமைச்சர் உத்தரவிட்டதால் தான் தடியடி நடத்தியதாக கூறி உள்ளார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சபரிமலை கோவிலில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் என்றார்.
ஊர்வலத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சி.ஆர். நந்தகுமார், மாநில செயலாளர் ஆர். நந்தகுமார், மாவட்ட பொது செயலாளர் ரமேஷ், துணை தலைவர் கருமுத்து தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #LaGanesan #Sabarimala






