search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cabinet"

    • கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
    • அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

    கொரோனா வைரஸ் தொற்றின்போது நாடு தழுவிய ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டார்கள்.

    இதனால் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதனோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.. இந்த நிலையில் தற்போது மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    நேற்று பிரதமர் மந்திரி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த ஐந்தாண்டுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
    • ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. அதன்பின், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன.

    இதற்கிடையே, தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி நேராக இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். இஸ்ரோ நிறுவனம் சென்ற பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து அவர், ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என அறிவித்தார்.

    இந்நிலையில், சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கிய ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாட மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.

    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 57, 613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    57,613 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்தத் திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    • அமைச்சரவைக் கூட்டத்தின் போது, டிஜிட்டல் இந்தியா திட்ட விரிவாக்கத்திற்கு பட்ஜெட் ஒதுக்கி பிரதமர் மோடி ஒப்புதல்.
    • 2.65 லட்சம் தனிநபர்கள் ஐடி துறையில் பயிற்சி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 14,903 கோடி ரூபாய் கணிசமான பட்ஜெட்டை ஒதுக்கி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சியின் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்க கட்டம் அதன் முந்தைய மறு செய்கையின் சாதனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 14,903 கோடி ரூபாய் கணிசமான பட்ஜெட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார்" என்றார்.

    இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாராட்டத்தக்க 5.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மறுதிறன் மற்றும் மேம்பாட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும் 2.65 லட்சம் தனிநபர்கள் ஐடி துறையில் பயிற்சி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ஒன்பது புதிய சூப்பர் கம்ப்யூட்டர்களின் விரிவாக்கம் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (என்சிஎம்) கட்டமைப்பிற்குள் திட்டமிடப்பட்டுள்ளது.

    திட்டத்தின் வேகத்தை வலியுறுத்தி, என்சிஎம் ஏற்கனவே 18 சூப்பர் கம்ப்யூட்டர்களை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.315 ஆக உயர்த்த முடிவானது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2023-2024 ஆண்டு கரும்பு பருவத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 10 ரூபாய் உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால், குவிண்டாலுக்கு ரூ.305 ஆக இருந்த கரும்பு விலை, ரூ.315 ஆக உயர்கிறது.

    இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது. 2014-2015 பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.210 ஆக இருந்த கரும்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை, தற்போது ரூ.315 ஆக உயர்ந்துள்ளது.

    நாட்டின் ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்க நிதி உதவி அளிக்கும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதாவை கொண்டுவர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    ஏற்கனவே உள்ள அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரிய சட்டம் நீக்கப்பட்டு, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பிரதமர் மோடி தலைமையில் 15 முதல் 25 பிரபல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய ஆட்சிமன்ற குழுவால் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வகிக்கப்படும் என தெரிவித்தார்.

    • நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 17 வகை பயிர்களின் கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
    • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

    நெல் உள்ளிட்ட 17 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தெரிவித்தார்.

    நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தி ரூ2,040 ஆக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

    எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசி பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480 உயர்த்தியும், சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385 உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், கட்சியின் முக்கிய தலைவரான சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என விமர்சிக்கும் சச்சின் பைலட், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

    எனவே, நவம்பர் 11-ம் தேதி முதல் மந்திரி அசோக் கெலாட் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள 21 அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். நாளை அமைச்சரவை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். 

    நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 12-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    தமிழகத்துக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.

    இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும்.

    இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

    மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உங்கள் கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் பெயரை தமிழகத்திலிருந்து மேலிடத்திற்கு பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்விக்கு,

    ‘இதுகுறித்து கட்சி தலைமையும், பிரதமர் மோடியும் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    மத்திய மந்திரிசபை பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.

    ஒரு மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். முதல்-அமைச்சர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.


    தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை. இது பா.ஜனதாவின் பிரிவும், பாரபட்சமான மனப்பான்மையைக் காட்டுகிறது. பா.ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாங்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம், எல்லாம் மாநிலத்தையும் பாரபட்சமின்றி நடத்துவோம், அனைத்து மாநிலங்கள் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் என்று சொன்னார்கள்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கட்சி பா.ஜனதாவின் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

    பா.ஜனதா சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்வது தான் அரசியல் நாகரீகம்.

    பா.ஜ.க.வின் அமைச்சரவையில் யார்- யார் இடம் பெற வேண்டியது என்று முடிவு செய்ய வேண்டியது பிரதமர் மோடி தான். அதைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. இது சம்பந்தமாக நாங்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

    மேலும் பா.ஜனதா மதவாதத்தை முன்வைத்தும், பாகிஸ்தான் பிரச்சனையை முன்வைத்தும், புல்வாமா தாக்குதலை முன்வைத்தும், மத பெயரால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

    காங்கிரஸ் கட்சியான நாங்கள் எல்லா மதத்தையும் அரவணைத்து செல்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன செய்வோம் என்று தேர்தல் பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரம் எடுபடவில்லை.

    மத பெயரால் பிரசாரம் செய்த பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரம் எடுபட்டது. பா.ஜனதா சொன்ன நதி நீர் இணைப்பு திட்டத்தை வரவேற்கிறேன். நதிநீர் இணைப்பு நல்லதுதான் காவிரி இணைப்பு தேவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று இல.கணேசன் தெரிவித்தார்.
    சென்னை:

    மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் டெல்லியில் மோடி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    முறைப்படி மத்திய மந்திரி சபை பதவி ஏற்றுள்ளது. இது முழுமையான மந்திரி சபை அல்ல. மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் போது உரிய நேரத்தில் அ.தி.மு.க.வையும் மந்திரி சபையில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரிகளின் இலாகாக்களின் முழு விவரத்தை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.

    இந்த அமைச்சரவையில் மோடியையும் சேர்த்து மொத்தம் 58 பேர் மத்திய மந்திரிகளாக உள்ளனர்.

    புதிய அமைச்சரவையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக 9 மந்திரிகள் பதவி கிடைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து 8 பேர் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளனர்.

    மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தலா 5 பேர் மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தலா 3 பேர், மேற்குவங்காளம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள் தலா 2 பேர் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர்.

    கோவா, தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், அருணாசலபிரதேசம், அசாம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், காஷ்மீர், டெல்லியை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் இடம் பிடித்துள்ளனர்.

    மத்திய மந்திரிகளுக்கு எந்தெந்த இலாகாக்களை ஒதுக்குவது என்பது சம்பந்தமாக இன்று காலை முதல் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் அவர் இது தொடர்பாக கருத்துகளை கேட்டு அறிந்தார்.

    இதையடுத்து இன்று மதியம் புதிய மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த முறை பிரதமருக்கு அடுத்த நிலையில் 2-வது இடத்தில் உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத்சிங் பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா இந்த தடவை முதல் முறையாக மத்திய மந்திரியாகி உள்ளார். அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரியாக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி மந்திரி ஆக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை மந்திரியாகி உள்ளார். கேரளாவை சேர்ந்த முரளிதரன் வெளியுறவுத்துறை இணை மந்திரியாகி உள்ளார்.

    மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் விவரம் வருமாறு:-



    பிரதமர் மோடி- அணுசக்தி, விண்வெளி, பொதுநலம், பென்‌ஷன், கொள்கை முடிவுகள் மற்றும் இதுவரை ஒதுக்கப்படாத அமைச்சரவை இலாகாக்கள்.

    1. ராஜ்நாத் சிங்- பாதுகாப்பு

    2. அமித்ஷா-உள்துறை

    3. நிதின் கட்காரி-சாலை போக்குவத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்.

    4. சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரம்

    5. நிர்மலா சீதாராமன்-நிதி மற்றும் கம்பெனி விவகாரம்

    6. ராம்விலாஸ் பஸ்வான்- உணவு, பொது விநியோகம், நுகர்வோர் விவகாரம்.

    7. நரேந்திர சிங் தோமர்- வேளாண், விவசாயம் நலன், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்.

    8. ரவிசங்கர் பிரசாத்- சட்டம், தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம்.

    9. ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்தும் தொழில்.

    10. தாவர் சந்த் கெலாட்- சமூக நீதி.

    11. ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை.

    12. ரமேஷ் பொக்ரியால்- மனிதவள மேம்பாடு

    13. அர்ஜூன் முண்டா- பழங்குடியினர் நலம்.

    14. ஸ்மிருதி இரானி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, டெக்ஸ்டைல்.

    15. ஹர்‌ஷவர்தன்- சுகாதாரம், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல்.

    16. பிரகாஷ் ஜவடேகர்- சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒளிபரப்பு.

    17. பியூஸ் கோயல்- ரெயில்வே, வர்த்தகம், தொழில்.

    18. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல்.

    19. முக்தார் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் நலம்

    20. பிரகலாத் ஜோஷி- பாராளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கம்.

    21. மகேந்திரநாத் பாண்டே- திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் நலம்.

    22. அரவிந்த் சாவந்த்- கனரக தொழில்.

    23. கிரிராஜ் சிங்- வன விலங்கு, பால், மீனவர் நலம்.

    24. கஜேந்திர சிங் செகாவத்- நீர் பாசனம்.

    (தனி பொறுப்பு)

    1. சந்தோஷ்குமார் கங்குவார்- தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு.

    2. ராவ் இந்திரஜித் சிங்- புள்ளியியல், அமலாக்கம் மற்றும் திட்டம்

    3. ஸ்ரீபாதயசோ நாயக்- பாதுகாப்பு, ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி

    4. டாக்டர் ஜிதேந்திர சிங்- வடகிழக்கு மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பொதுநலன், பென்‌ஷன், அணுசக்தி, விண்வெளி.

    5. கிரண் ரிஜிஜு- இளைஞர் நலம், விளையாட்டு, சிறு பான்மையினர் நலம்.

    6. பிரகலாத் சிங் படேல்- கலாச்சாரம், சுற்றுலா.

    7. ராஜ்குமார் சிங்- மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு.

    8. ஹர்தீப் சிங் பூரி- வீட்டு வசதி, விமானம், வர்த்தகம், தொழில்.

    9. மன்சுக் மாண்டவியா- கப்பல், ரசாயனம், உரம்.

    1. பஹன் சிங் குலாத்தே- ஸ்டீல்

    2. அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரம், குடும்ப நலம்.

    3. அர்ஜூன் ராம் மேக்வால்- பாராளுமன்ற விவகாரம், கனரக தொழில்.

    4. வி.கே.சிங்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.

    5. கிரி‌ஷன் பால் குர்ஜார்- சமூக நீதி.

    6. தன்வீ ராசாகேப் தடா ராவ்- உணவு, பொது விநியோகம்.

    7. கி‌ஷன் ரெட்டி- உள்துறை.

    8. புருசோத்தம் ரூபாலா- வேளாண், விவசாயிகள் நலன்.

    9. ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி.

    10. சாத்வி நிரஞ்சன் ஜோதி- ஊரக மேம்பாடு.

    11. பாபுல் சுப்ரியோ- சுற்றுச் சுழல், வனம், தட்பவெட்ப நிலை.

    12. சஞ்சீவ் பல்யான்- வன விலங்கு, பால், மீனவர்.

    13. சஞ்சய் சம்ராவ் தோட்ரே- மனிதவள மேம்பாடு, தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம்.

    14. அனுராக் தாக்குர்- நிதி, கம்பெனி விவகாரம்.

    15. சுரேஷ் அங்கடி-  ரெயில்வே.

    16. நித்யானந்த் ராய்- உள்துறை.

    17. ரத்தன்லால் கட்டாரியா- நீர்பாசனம், சமூக நீதி.

    18. முரளீதரன்- வெளியுறவுத் துறை, பாராளுமன்ற விவகாரம்.

    19. ரேணுகா சிங் சருடா- பழங்குடியினர் நலம்.

    20. சோம் பர்காஷ்- வர்த்தகம், தொழில்.

    21. ராமேஷ்வர் டெலி- உணவு பதப்படுத்தும் தொழில்.

    22. பிரதாப் சந்திர சாரங்கி- சிறு, குறு, நடுத்தர தொழில், வனவிலங்கு, பால், மீனவர் நலன்.

    23. கைலாஷ் சவுத்ரி- வேளாண், விவசாயிகள் நலன்.

    24. தேவஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.
    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஜெய்சங்கருக்கு வெளியுறவு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிலையில், மத்திய அமைச்சர்களுக்கான துறைகளின் விவரம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

    ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை 
    பியூஷ் கோயல் - ரயில்வே துறை
    சதானந்த கவுடா - ரசாயனம், உரத்துறை
    நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து துறை
    ஸ்மிருதி இரானி - மகளிர் நலத்துறை



    ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை, தகவல், மின்னணு தொழிற்துறை
    பிரகாஷ் ஜவ்டேகர்- சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒலிபரப்பு
    டாக்டர் ஹர்ஷ்வர்தன் - சுகாதாரத்துறை
    நரேந்திர சிங் தோமர் - விவசாய துறை அமைச்சர்
    முக்தார் அபாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை

    இத்துடன், மத்திய இணை மந்திரிகளுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    ×