search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital India"

    • சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
    • மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

    சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

    சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

    இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.

    இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • அமைச்சரவைக் கூட்டத்தின் போது, டிஜிட்டல் இந்தியா திட்ட விரிவாக்கத்திற்கு பட்ஜெட் ஒதுக்கி பிரதமர் மோடி ஒப்புதல்.
    • 2.65 லட்சம் தனிநபர்கள் ஐடி துறையில் பயிற்சி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 14,903 கோடி ரூபாய் கணிசமான பட்ஜெட்டை ஒதுக்கி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சியின் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்க கட்டம் அதன் முந்தைய மறு செய்கையின் சாதனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 14,903 கோடி ரூபாய் கணிசமான பட்ஜெட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார்" என்றார்.

    இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாராட்டத்தக்க 5.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மறுதிறன் மற்றும் மேம்பாட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும் 2.65 லட்சம் தனிநபர்கள் ஐடி துறையில் பயிற்சி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ஒன்பது புதிய சூப்பர் கம்ப்யூட்டர்களின் விரிவாக்கம் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (என்சிஎம்) கட்டமைப்பிற்குள் திட்டமிடப்பட்டுள்ளது.

    திட்டத்தின் வேகத்தை வலியுறுத்தி, என்சிஎம் ஏற்கனவே 18 சூப்பர் கம்ப்யூட்டர்களை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.

    • உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் டிஜிட்டல் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • ஒரு மைல்கல் நிகழ்வான ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும்போது இது மிகவும் பொருத்தமானதாகிறது.

    டெல்லியில் நடந்த 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இதில் டிஜிட்டல் நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கிய 22 அரசு நிறுவனங்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, இந்தியா, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் என கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:- உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் டிஜிட்டல் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மைல்கல் நிகழ்வான ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும்போது இது மிகவும் பொருத்தமானதாகிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியா தொடங்கி இருக்கிறது.

    இது நிர்வாகத்தையும் மாற்றும். மக்களை மையமாக கொண்ட நிர்வாகத்துக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, குறிப்பாக தொற்றுநோய்களின் போது, இது உலகின் பிற பகுதிகளுக்கும் பயனளிக்கிறது.

    இந்தியா, மென்பொருள் துறையில் தனது சக்தியை நிரூபித்திருப்பதை தொடர்ந்து, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும்.

    நாம் நடைமுறையில் உள்ள கொள்கைகளைப் பயன்படுத்தி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகளின் உலகளாவிய சக்தியாக நாட்டை நிலைநிறுத்துவதற்கு சூழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் உள்ளூர்மயமாக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்க அதைப் பயன்படுத்தும் வகையில், அரசாங்கத் தரவை ஜனநாயகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

    நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜனதாவுக்கு ஓட்டுகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். #DigitalIndia #VotingMachine #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சாய்பாயில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று ஓட்டு போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராம்பூர் மற்றும் படவுன் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக வந்த புகார்களை தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    படவுன் தொகுதியில் மாநில மந்திரி ஒருவர் அங்கு போட்டியிடும் தனது மகளுக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவந்துள்ளது.

    தேர்தல் அலுவலர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததாலும் பல இடங்களில் மின்னணு வாக் குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தான் மத்திய அரசு உறுதி அளித்த டிஜிட்டல் இந்தியாவா?

    மைன்புரி தொகுதியில் முலாயம்சிங் யாதவ் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றிபெறுவார். 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவும். மக்கள் பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலைக்கு மாறிவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகிலேஷ் யாதவ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாக உள்ளன. அல்லது யாருக்கு வாக்களித்தாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுவதுபோல் உள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை. உத்தர பிரதேசத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

    இது ரூ.50 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்படும் தேர்தல் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள குற்றவியல் அலட்சியம். இதனை நாம் நம்பலாமா? அல்லது இதைவிட பெரிய கொடுமையான நடைமுறை ஏதாவது உள்ளதா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி பிரதிநிதிகள் லக்னோவில் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வரை சந்தித்து எந்திரங்கள் கோளாறு, மந்திரி பணம் கொடுத்தது ஆகியவை குறித்து புகார் தெரிவித்தனர்.

    இதுபற்றி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி திவாரி கூறும்போது, “சமாஜ்வாடி கட்சியினர் மாநில மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா தனது மகள் சங்கமித்ரா மவுரியாவுக்கு சாதகமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு குறித்தும் புகார் கொடுத்துள்ளனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து இதுதொடர்பாக விரிவான அறிக்கை கேட்டுள்ளோம்.

    அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.  #DigitalIndia #VotingMachine #AkhileshYadav
    டிஜிட்டல் இந்தியாவில் வசிக்க இடமின்றி தார்ப்பாயில் வீடு அமைத்து குடும்பங்கள் வசிப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #digitalindia

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் யூனியனுக்குட்பட்ட காமராஜர் புரத்தில் 10-க்கும் மேற்பட்ட பளியர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே போல பழனி - கொடைக்கானல் ரோட்டிலும் இவர்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

    இவர்கள் தங்குவதற்கு வீடு இல்லை. படிப்பறிவு இல்லாத இவர்கள் தோட்ட வேலை, கூலி வேலை பார்த்து வருகின்றனர். குறைந்த வருமானத்தில் தினசரி வாழ்க்கையை ஓட்ட வேண்டியது உள்ளதால் இவர்களால் வாடகை கொடுத்து தங்குவதற்கும் வசதி இல்லை.

    இதனால் தார்ப்பாய் மற்றும் வனப்பகுதியில் கிடைக்கும் ஓலைகளை வைத்து வீடுகள் அமைத்து அதில் தங்கி வருகின்றனர். அதிக மழை பெய்யும் போதும், கடுமையான பனி பெய்யும் போதும், குடிசைக்குள் இருப்பது மிகவும் கடினமான செயலாகும்.

    பெரும்பாலான நாட்கள் இவர்களுக்கு இதே போல் அமைந்து விடுவதால் தினசரி குடும்ப செலவுக்கு மட்டும் வேலைக்கு சென்று பசியாறி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கையில், எங்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளது. ஆனால் நடப்பதற்கு சாலை வசதி இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. மின்சார வசதி கிடையாது. எங்கள் பகுதி மக்களின் குறைகள் குறித்து பல அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் வாதிகளும் வாக்கு கேட்பதற்காக மட்டும் எங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ செலவு செய்ய முடியாது. 

    மேலும் வேலைக்கும் போக முடியாது என்பதால் பல நாட்கள் பட்டினியாகவே வாழ்க்கையை கழித்து வருகிறோம். எனவே அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றித் தர வேண்டும் என்று தெரிவித்தனர். டிஜிட்டல் இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்று மத்திய அரசு பெருமிதம் கூறி வரும் நிலையில் வசிக்க இடம் இன்றி, குடிக்க தண்ணீர் இன்றி பொதுமக்கள் வாழ்க்கை நடத்தி வருவது வேதனையான வி‌ஷயம். எனவே இந்நிலை மாற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #digitalindia

    டிஜிட்டல் இந்தியா திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. #DigitalIndiaKiBaatPMKeSaath
    நெல்லை:

    நாடு முழுவதும் பொதுச்சேவை அமைப்பு மூலமாக மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் மூலமாக சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகள் குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பிரத்யேக ஸ்கிரீன் அமைக்கப்பட்டு டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    இதைப்போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களும் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டிருந்தன.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து பொதுச்சேவை மையம் மூலமாக பயன்பெற்ற பயனாளிகள் 5 பேர் மற்றும் பணபரிவர்த்தனைகளை தெரிந்து கொண்ட கிராம மக்கள் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கிராம மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் மக்கள் எந்தளவுக்கு பயன் பெற்றுள்ளனர், பொதுச் சேவை மையம் மக்களுக்கு எந்தளவு பயனுடையதாக உள்ளது என்பது பற்றி பேசினார். 15 நிமிடம் இந்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எனினும் கிராம மக்கள் யாரும் பிரதமரிடம் கான்பிரன்ஸ் மூலமாக பேசவில்லை. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுச்சேவை மைய மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத் குரியாகோஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக அவர் கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் 212 இடங்களில் பொதுச்சேவை மையங்கள் உள்ளன. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுச்சேவை மையம் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக அனைத்து சான்றிதழ்களையும் வழங்கி வருகிறோம் என்றார். #DigitalIndiaKiBaatPMKeSaath #PMModi
    கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என கூறினார். #DigitalIndiaKiBaatPMKeSaath #DigitalIndia
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் வீடியோ போன் மூலம் இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி,

    டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கிராமங்களை, இளைஞர்களுடன் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இது கடந்த நான்கு ஆண்டுகளாக தனி மனிதனின் தேவையை எளிதாக பெற உதவுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் டிஜிட்டல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல டிஜிட்டல் இந்தியா பயனாளிகள் தங்கள் அனுபவத்தை தெரிவித்துள்ளனர்.


    இந்த தொழில்நுட்பங்கள் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் பதிவு செய்யலாம், கட்டணாம் செலுத்தாலம் மற்றும் பல சேவைகளை எளிதாக செய்ய இது உதவுகிறது. இந்த சேவை அனைத்து துறைகளிலும் உள்ளது. அதற்காக பொதுசேவை மையங்களை வலுப்படுத்த வேண்டும்.

    இந்தியாவில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அதிகரித்துள்ளது. தொழில்முனைவோர்கள் அதிகரித்துள்ளனர்.

    கிராமங்களில் இண்டெர்நெட் இணைப்பு அளிக்கப்பட்டதன் மூலம் பள்ளி மாணவர்கள் படிக்க மிகவும் வசதியாக உள்ளதாக பலர் தெரிவித்தனர். மேலும், வயதானவர்கள் தங்கள் பென்ஷன் பிரச்சனைகளை டிஜிட்டல் இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக சரிசெய்ய முடியும். பொருள் மற்றும் சேவை தொகையை எளிதாக செலுத்த வர்த்தகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பிகிம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #DigitalIndiaKiBaatPMKeSaath #DigitalIndia

    ×