search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New India"

    • சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
    • மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

    சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

    சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

    இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.

    இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இது என குறிப்பிட்டார். #Modi
    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’இந்த முறை நடைபெறும் பாரளுமன்ற தேர்தல் அடுத்த பிரதமர் யார்? அடுத்த ஆட்சியை எந்த கட்சி அமைப்பது? என்பதற்கான தேர்தல் அல்ல.

    21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும்? என்பதை நிர்ணயம் செய்வதற்கான தேர்தல் இது’ என குறிப்பிட்டார்.



    இந்த வாய்ப்பை நமது நாடு 20-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருந்தது. ஆனால், ஒரே குடும்பத்திடம் ஆட்சியை ஒப்படைத்ததன் மூலம் காங்கிரஸ் நாட்டை முன்னேற்றும் வாய்ப்பை இழந்து விட்டது. காங்கிரசின் கலப்பட கூட்டணியால் நமது பாரம்பரியங்கள் சீரழிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும், பாதுகாப்பும் பலவீனமாகிப் போனது.

    இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பரம்பரை ஆட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், நாங்கள் தேசியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் மோடி தெரிவித்தார். #LSpolls #NewIndia #21stcentury #Modi #21stcenturyIndia 
    புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RSS
    புதுடெல்லி:

    கடந்த ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக 9 செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீசார் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். மேலும், டெல்லி, பரீதாபாத், கோவா, ராஞ்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வீட்டில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், இந்தியாவில் ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. அரசை எதிர்த்து பேசினால் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. புதிய இந்தியாவுக்கு நல்வரவு என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RSS
    ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாவலர்களால் சமீபத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதுதான் பிரதமர் மோடி குறிப்பிடும் நியூ இந்தியா என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Alwarmoblynching #ModisbrutalnewIndia
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பசு கடத்தியதாக ரக்பர் கான் என்ற 28 வயது வாலிபர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

    குற்றுயிராக இருந்த அந்த வாலிபரை தூக்கிச் சென்ற போலீசார், அவருக்கு முதலுதவி அளிக்க அக்கறை காட்டாமல் முதலில் பசுவை பாதுகாப்பான இடத்தில் விடுவதில் ஆர்வம் காட்டினர்.

    அந்த வாலிபரை சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆசுவாசமாக ஒரு டீக்கடையில் வாகனத்தை நிறுத்தி சற்றுநேரம் களைப்பாறி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

    காயமடைந்த 4 மணிநேரம் கழித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் ரக்பர் கானின் உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

    அல்வார் படுகொலை தொடர்பாக விசாரித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராஜஸ்தான் மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக இன்று சாடியுள்ளார்.

    ‘உயிருக்கு ஆபத்தானவரை காப்பாற்ற கொண்டு சென்ற போலீசாருக்கு கடமைக்கு இடையில் தேனீர் ஓய்வா? வெறுப்புணர்வின் மூலம் மனிதநேயம் மாற்றப்பட்டு, மக்கள் நசுக்கி சாகடிக்கப்படுவதற்கு பெயர்தான் மோடியின் காட்டுமிராண்டித்தனமான ‘நியூ இந்தியா’ என ராகுல் குறிப்பிட்டுள்ளார். #Alwarmoblynching #ModisbrutalnewIndia
    பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும், 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உருவாகும் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #karnatakaelection2018 #Modi #AmitShah
    புதுடெல்லி:

    கர்நாடகா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. 99 இடங்களை பெற்று அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உயர்ந்துள்ளது. மேலும் அக்கட்சி வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    224 இடங்களை கொண்ட கர்நாடகா சட்டசபையில், தேர்தல் நடைபெற்ற 222 இடங்களில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான மந்திர எண்ணான 112 என்ற இலக்கத்தை நெருங்க முடியவில்லை. முன்னிலை வகித்து வரும் இடங்களையும் சேர்த்து மொத்தம் 104 இடங்களில் மட்டுமே அதிகபட்சமாக பா.ஜ.க. வேட்பாளர்கள் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


    இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலுகத்தில் அக்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, ’பா.ஜ.க. இதுவரை 14 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 15-வது வெற்றியாக கர்நாடகா மாநில தேர்தல் அமையும்.

    வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டுமன்றி 2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என அவர் குறிப்பிட்டார்.

    அமித் ஷாவை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளையில் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்’ என குறிப்பிட்டார்.

    முன்னதாக பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த மோடியை, அமித் ஷா சால்வை அணிவித்து வரவேற்றார். அலுவலகத்தின் வாசலில் கூடியிருந்த பா.ஜ.க. தொண்டர்களை நோக்கி அமித் ஷாவும் மோடியும் உற்சாகத்துடன் கையசைத்தனர். #karnatakaverdict #karnatakaelection2018 #Modi #AmitShah
    ×