21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான தேர்தல் இது - மோடி பேச்சு

கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இது என குறிப்பிட்டார். #Modi
21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான தேர்தல் இது - மோடி பேச்சு
Published on

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’இந்த முறை நடைபெறும் பாரளுமன்ற தேர்தல் அடுத்த பிரதமர் யார்? அடுத்த ஆட்சியை எந்த கட்சி அமைப்பது? என்பதற்கான தேர்தல் அல்ல.

21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும்? என்பதை நிர்ணயம் செய்வதற்கான தேர்தல் இது’ என குறிப்பிட்டார்.

இந்த வாய்ப்பை நமது நாடு 20-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருந்தது. ஆனால், ஒரே குடும்பத்திடம் ஆட்சியை ஒப்படைத்ததன் மூலம் காங்கிரஸ் நாட்டை முன்னேற்றும் வாய்ப்பை இழந்து விட்டது. காங்கிரசின் கலப்பட கூட்டணியால் நமது பாரம்பரியங்கள் சீரழிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும், பாதுகாப்பும் பலவீனமாகிப் போனது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com