மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி, 2022-ல் புதிய இந்தியா உருவாகும் - அமித் ஷா நம்பிக்கை

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும், 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உருவாகும் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #karnatakaelection2018 #Modi #AmitShah
மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி, 2022-ல் புதிய இந்தியா உருவாகும் - அமித் ஷா நம்பிக்கை
Published on

புதுடெல்லி:

கர்நாடகா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. 99 இடங்களை பெற்று அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உயர்ந்துள்ளது. மேலும் அக்கட்சி வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

224 இடங்களை கொண்ட கர்நாடகா சட்டசபையில், தேர்தல் நடைபெற்ற 222 இடங்களில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான மந்திர எண்ணான 112 என்ற இலக்கத்தை நெருங்க முடியவில்லை. முன்னிலை வகித்து வரும் இடங்களையும் சேர்த்து மொத்தம் 104 இடங்களில் மட்டுமே அதிகபட்சமாக பா.ஜ.க. வேட்பாளர்கள் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டுமன்றி 2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என அவர் குறிப்பிட்டார்.

அமித் ஷாவை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளையில் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்’ என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com