search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting machine"

    • ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் அடுத்த சுற்றில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.
    • தினமும் 2 ஷிப்ட்களாக போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளது. ஜூன் 4-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கும் அறை மற்றும் ஓட்டு எண்ணும் மையத்துக்கு நாளை மாலை முதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

    நாளை மாலை முதல் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்குவார்கள். குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக ஐ.ஆர்.டி.டி. கல்லூரி வளாகத்தில் தனித்தனியே ஸ்டிராங் ரூம்களில் வைத்து சீலிடப்படும்.

    அதன்பின் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். துணை ராணுவத்தினர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையை ஒட்டி பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் அடுத்த சுற்றில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். இறுதியாக உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.

    ஜூன் 4-ந் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும். ஒரு ஷிப்ட்டுக்கு துணை ராணுவம், பட்டாலியன் மற்றும் ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 199 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தினமும் 2 ஷிப்ட்களாக போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போதமலை தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
    • இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை. கரடு முரடான பாதைகளில் தான் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச் சுமையாக தான் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கீழூரில் ஒரு வாக்குச்சாவடி மையமும், கெடமலையில் ஒரு வாக்குச் சுவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 428 ஆண் வாக்காளர்களும் 417 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் கெடமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் 159 ஆண்களும் 138 பெண்களும் வாக்களிக்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் மொத்தம் 1142 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இன்று காலை மேற்கண்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    கீழூர் வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் வடுகம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் இருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் எந்திரம், கண்ட்ரோல் யூனிட் உள்பட 5 எந்திரங்களை மண்டல அலுவலர் விஜயகுமார், உதவி மண்டல அலுவலர் ஜெயக்குமார் வாக்குச்சாவடி மைய அதிகாரி ராஜாமணி உள்பட 4 தேர்தல் அலுவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ரமேஷ், ஊராட்சி செயலாளர் பரமசிவன் உள்பட 10 பேர் வாக்கு பதிவு எந்திரங்களை நடந்தே தலைச்சுமையாக பொதுமக்கள் உதவியுடன் மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அதேபோல் கெடமலை வாக்குச்சாவடி மையத்திற்கு புதுப்பட்டி மலை அடிவாரத்திலிருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட 5 எந்திரங்களும் நடந்தே கொண்டு செல்லப்பட்டன. மண்டல அலுவலர் பழனிச்சாமி, உதவி மண்டல அலுவலர் சுரேஷ், வாக்குச்சாவடி மைய அதிகாரி பிரபாகரன் மற்றும் போலீசார் உள்பட 10 பேர் சென்றனர். 

    • வாக்குப்பதிவு இயந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக தேவை.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளா்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் களம் காணுகின்றனர். அதற்காக வாக்குப்பதிவு இயந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக தேவைப்படுகிறது. மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் தலா 3 வாக்குப்பதிவு இந்திரமும் தேவைப்படுகிறது.

    சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் 944 அமைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தேவையான 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு இந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகளும் (வி.வி.பேட்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு தேவைக்கேற்ப ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட்டபின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது.

    எனவே, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி இன்று(புதன்கிழமை) வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

    • வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
    • அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது. இதனால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள் ளது.

    இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை உள்பட 59 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 41 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    41 பேரில் 4 பேர் நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 37 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி, பகுஜன சமாஜ் கட்சி உள்பட 11 கட்சிகளை சேர்ந்தவர்களும், 26 சுயேச்சைகளும் இடம்பெற்றுள்ளனர். 37 பேர் போட்டியிடுவதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இறுதி வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெயரை கொண்ட ராஜ்குமார் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகிறார்கள். கோ.ராஜ்குமார், கோ.பா.ராஜ்குமார், எம்.ராஜ்குமார், ராஜ்குமார் ஆகிய 4 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை பெயரை கொண்ட ராமச்சந்திரன் பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகிறார்கள். ரா. ராமச்சந்திரன், எம்.ராமச்சந்திரன் ஆகியோர் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர்.

    வேட்பாளர்களின் பெயரை குழப்பும் வகையில் ஒரே பெயரை கொண்டவர்களை எதிர்க்கட்சியினர் நிறுத்தி உள்ளதாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர்.
    • அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.

    கடலூர்:

    பாராளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது.

    கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

    இதையொட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் நீண்ட நேரமாக வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் வெளியே காத்திருந்தனர்.

    இது மட்டுமின்றி தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாக்குபதிவு எந்திரத்தில் பல்வேறு சங்தேகங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்ட அறையின் பூட்ட திறக்கபட முடியாமல் இருந்து வருவதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.

    • பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது.
    • எந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.

    காஞ்சிபுரம்:

    பாராளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிலிருந்து, முதல் நிலை சரிபார்ப்பு முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலிருந்து, அலுவலர்களுக்கு பயிற்சியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் ஆகியவை, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பொது மக்களின் விழிப்புணர்வுக்காக, வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.

    • உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.
    • தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் தேர்வாவான பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர். அதன்பிறகு 12 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து கடந்த 2021 ஆகஸ்டு மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடந்தன.

    உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்ககோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது. பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் எந்திரங்கள் வைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் உள்ளாட்சித்தேர்தல் நடக்கவில்லை. இதனால், மாணவிகள் இடப்பற்றாக் குறையால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் 3 கண்டெய்னர் லாரிகளில் நேற்று இரவு ஏற்றப்பட்டன.

    அந்த லாரிகள் 2 தெலுங்கானாவுக்கும், ஒரு லாரி கர்நாடகத்துக்கும் சென்றது.

    தற்போது பாரதிதாசன் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் எடுக்கப்பட்டதால், ஏற்கெனவே இடநெருக்கடியில் சிக்கி தவித்த மாணவிகள் தற்போது மீண்டுள்ளனர்.

    அதே நேரத்தில் புதுவையில் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வாக்குபதிவு எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் புதுவையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடை பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள பாது காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு சரி பார்க்கும் எந்திரங்கள் ஆகியவைகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை கலெக்டர் ஆஷா அஜித் அங்கீகரிக் கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்கு சரிபார்க்கும் எந்தி ரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரப்பெற்றுள்ளன.

    இந்த எந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய-மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 2670 பேலட் யூனிட், 1936 கன்ட்ரோல் யூனிட் 2088 வி.வி.பேட் எந்திரங்களில் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

    இப்பணியானது வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா தேவி, தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை
    • இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் குடோனில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் ஆய்வு செய்தார்.

    முன்னதாக அனைத்து அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு, ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்களையும் கண்காணிப்பு கேமரா ஒளிப்பதிவுகளையும் கலெக்டர் பார்வையிட்டு தணிக்கை செய்தார்.

    மேலும் தேர்தல் ஆணையத் தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ.எம்.எஸ். 2.0 என்ற செயலி மூலமாக தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை மாவட்ட கிடங்கில் இருந்து நேரடியாக இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இதில் க.தேவராஜி எம். எல்.ஏ, உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தனி தாசில்தார் பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

    • இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 15 ஆண்டுகளை கடந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கக் கூடாது.
    • அந்த வகையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2007-ம் ஆண்டிற்குரிய வாக்கு பதிவு எந்திரம் 1260, கட்டுப்பாட்டு எந்திரம் 580 என மொத்தம் 1840 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.

    நாமக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 15 ஆண்டுகளை கடந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கக் கூடாது. மேலும் அவற்றை பெங்களூரில் உள்ள பாரத் கவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2007-ம் ஆண்டிற்குரிய வாக்கு பதிவு எந்திரம் 1260, கட்டுப்பாட்டு எந்திரம் 580 என மொத்தம் 1840 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. இவை அனைத்தும் நகர் புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகும்.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவு எண்களை சரி பார்க்கும் பணி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேலாளர் செல்வராசு மேற்பார்வையில் அந்த துறை ஊழியர்கள் பெல் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை இன்று கணினி வழியில் தொடங்கி வைத்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திரங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்) தேர்தல் தாசில்தார் சிவகாமி, விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கணினி நிர்வாளர் வெங்கடேஷன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் தொடர்பான வழக்கு நடந்தால், முக்கிய ஆதார ஆவணமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது வழக்கம்.
    • 234 தொகுதிகளிலும் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்டன.

    திருப்பூர் :

    தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுஓட்டுப்பதிவு எந்திரங்களை 6 மாதங்களுக்கு, சட்டசபை தொகுதி வாரியா, அனைத்து ஆவணங்களுடன் பாதுகாக்க வேண்டும். தேர்தல் தொடர்பான வழக்கு நடந்தால், முக்கிய ஆதார ஆவணமாக இவற்றை பயன்படுத்துவது வழக்கம்.

    தமிழக சட்டசபை தேர்தல் 2021 ஏப்., 6-ந் தேதியும், ஓட்டு எண்ணிக்கை, மே 2-ந் தேதியும் நடந்தது. அடுத்த 6 மாதங்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஆவணங்களுடன் பாதுகாக்கப்பட்டன. இடையே ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அந்த காலகட்டத்தை நீக்கி 2022 மே 31 வரை, கட்டுப்பாடுகள் தொடரும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்பட 234 தொகுதிகளிலும் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்டன. அவற்றை மாவட்டம் வாரியாக இருப்பு வைக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பழுதான எந்திரங்களை தனியாக பிரித்து வைத்து, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேதியில்அவற்றை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×