search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polling station"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
    • விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    • நாளை தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது
    • வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது

    நாளை தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இதனையொட்டி பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள், வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணைப்பின் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது
    • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

    சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.

    இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

    இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.

    • பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
    • வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழியர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இதையொட்டி அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இங்குள்ள 6 தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும், 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும், பாளையில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 306 வாக்குச் சாவடிகளும், ராதாபுரத்தில் 307 வாக்குச்சாவடிகளும், ஆலங்குளத்தில் 319 வாக்குச் சாவடிகளும், அம்பையில் 294 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,810 வாக்குச் சாவடிகள் உள்ளன.

    இதில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் வீதம் மொத்தம் 4,354 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2177 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் வி.வி.பேட் எந்திரங்களும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவை அனைத்தும் இன்று போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை 249 வாகனங்களில் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 1,810 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு பணியில் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 388 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 44 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்கள், 216 பேர் 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

    இதற்காக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை முழுவதுமாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 8,026 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், இன்று அவை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    இதற்காக துணை தாசில்தார் தலைமையில் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 136 வாகனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

    தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 203 பேர் என மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1,743 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதில் 106 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 14 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் சி.சி.டி.வி. கேமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழி யர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நாளை வாக்குப்பதிவையொட்டி இன்று தாலுகா அலுவலகங்களில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீசாரின் பாதுகாப்புடன் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படுகிறது.

    • வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு உட்பட்டு திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி செட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டி பாளையம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டி பாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1744 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 605 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 93 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 157 பேரும் என 3 லட்சத்து 90 ஆயிரத்து 152 பேரும், திருப்பூர் தெற்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 461 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 293 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 பேரும் உள்ளனர்.

    பெருந்துறையில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 699 பேரும், மூன்றாம் பாலின த்தவர்கள் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்கள் உள்ளனர். பவானியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 590 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 19 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 பேர் உள்ளனர். இதுபோல் அந்தியூர் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 57 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 பேர் உள்ளனர்.

    மேலும், கோபிசெட்டி பாளையத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 432 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 689 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 பேரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 1744 வாக்கு ச்சாவடிகள் உள்ளன. 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 பேர் உள்ளனர்.

    நாளை (வெள்ளி க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

    திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம் இரட்டை இலை சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் தானியக்கதிர் அரிவாள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பழனி யானை சின்னம், பா.ஜனதாவை சேர்ந்த ஏ.பி. முருகானந்தம் தாமரை சின்னம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீதா லட்சுமி ஒலிவாங்கி சின்னம், ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா கட்சியை சேர்ந்த மலர்விழி தொலைக்காட்சி பெட்டி சின்னம், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியை சேர்ந்த ஜனார்த்தனம் வைரம் சின்னம், சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன் தென்னந்தோப்பு சின்னம், கார்த்திகேயன் ட்ரக் சின்னம், சதீஷ்குமார் தலைக்கவசம் சின்னம், சுப்பிரமணி வாயு சிலிண்டர் சின்னம், செங்குட்டுவன் ஆட்டோ ரிக்ஷா சின்னம், வேலுச்சாமி கரும்பு விவ சாயி சின்னம் ஆகிய சின்னங்களில் போட்டியிடு கிறார்கள். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன. வடக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    • அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
    • மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் தொகுதி வரியாக ஒதுக்கப்பட்டு வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அதற்கு அடுத்த படியாக உள்ள அதிகாரிகளுக்கு அவற்றை ஒதுக்கீடு செய்து பிரிக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

    சென்னையில் 16 இடங்களில் உள்ள பயிற்சி சென்டரில் இந்த பணிகள் இன்று நடைபெற உள்ளது.

    தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, வாக்குப்பதிவு செய்யும் இடம் என உள்ளே வெளியே போன்ற இடங்களை குறிக்கும் போஸ்டர்கள், மெழுகு வர்த்திகள், சணல் கயிறு, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி புத்தகம், மறைவு அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பயன்படுத்தும் உறைகள் உள்பட 80 பொருட்களை பிரித்து வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

    இந்த பணியை மாநகராட்சி ஆணையரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிடுகிறார்.

    இந்த பொருட்களுடன் மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதுவரை இந்த பொருட்கள் அந்தந்த மையத்தில் தாசில்தார் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆவணங்கள் கொடுத்து ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 448 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • பணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்கு ப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்ப திவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது.

    இந்தப் பணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ராஜ கோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் என 2 நாட்கள் இந்த பணிகள் நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் டோல்ப்ரீ எண் மூலம் 21 புகாரும், சி-விஜில் செயலி மூலம் 10 புகாரும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய நிலவரப்படி, ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக ரூ.93 லட்சத்து 23 ஆயிரத்து 78 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஆவணங்கள் கொடுத்து ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 448 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்வதில்லை. அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இது தேர்தலுக்கான நேரம் என்பதால் பறக்கும்படை அதிகாரிகள் அவர்களின் பணியை செய்கிறார்கள்.

    எனவே பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேலே ரொக்கம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும். நாடாளு மன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவல ர்களுக்கான முதல் பயிற்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

    10 ஆயிரத்து 970 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சியில் அவர்களுக்கு அஞ்சல் வாக்குப்படிவம் வழங்கப்படும். அதற்குப் பின்னர் அவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். சத்தியமங்கலத்தில் குன்றி, கடம்பூர், குத்தியாலத்தூர், தாளவாடி மற்றும் பர்கூர் உள்ளிட்ட மலை கிராமங்க ளில் உள்ள வாக்குச்சாவடி களுக்கு தேர்தலுக்கு முந்தைய நாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணிய மர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஈரோடு நாடா ளுமன்ற தொகுதிகளில் பதற்றமான தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு இன்று தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
    • வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெங்களூரு வடக்கு தொகுதியில் அதிகபட்சமாக 31 லட்சத்து 74ஆயிரத்து 98 வாக்காளர்களும், உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 15லட்சத்து 72ஆயிரத்து 958 வாக்காளர்களும் உள்ளனர்.

    தேர்தலுக்காக 58ஆயிரத்து 834 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் 3.51லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடம், சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், பெங்களூரு கிராமப்புறம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மையம், சிக்கபல்லாபூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 8-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பளா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவனகரே, சிமோகா ஆகிய தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக மே 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ந் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 22-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த 3 தொகுதிகளிலும் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை எந்தெந்த பள்ளிகளில் மற்றும் சமூக நலக்கூடங்களில் அமைப்பது என்பது பற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    அதுபோல இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 5 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அமைக்கப்படும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகளையும் சென்னை மாநகர போலீசார் 3 பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். சுமூகமாக வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகள், பதட்டமான வாக்குச் சாவடிகள், மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று 3 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் போலீசார் நடத்திய ஆய்வில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டன. 157 வாக்குச் சாவடிகள் மிக மிக பதட்டமானவை என்று கண்டு பிடிக்கப்பட்டன. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சென்னை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்தது. என்றாலும் மிக பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது.

    இது தொடர்பாக தற்போது சென்னை மாநகர போலீசார் தீவிர கணக்கெடுப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் எந்தெந்த வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என்பது தெரியவரும்.

    அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அடுக்கு பாதுகாப்பு செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தது.

    இந்த தடவை வாக்கு பதிவை 70 சதவீதமாக அதிகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    • முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பம் அளித்தனர்.
    • வாக்குச்சாவடி மையங்களை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் தாலுகாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தவர்கள் பெயர் சேர்த்தனர்.

    மேலும், இறந்தவ ர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. தொடாந்து, முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பம் அளித்தனர்.

    அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றது.

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் வாக்குச்சாவடி நியமன அலுவலர் கார்த்திகேயன், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலியமூர்த்தி, கவிதா, ரவிச்சந்திரன் ராவ், பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வாக்குச்சாவடி மையங்களை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தேர்தல் துணை தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக் காக அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமாநாதபுரம் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவா டானை, திருச்சுழி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் எந்தி ரங்கள் உள்ளிட்ட மின்னனு வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குகள் எண்ணும் அறை ஆகிய வற்றை பார்வையிட்டார்.

    மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் வந்து செல்லும் பகுதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்லும் பகுதி என தனித்தனியே அமைக்கப் பட உள்ள வழித்தடங்களை யும் பார்வையிட்டார்.

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    ஆய்வின்போது பரமக்குடி சார் ஆட்சியர் அப்துல் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதி வேல்மாறன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகே சன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
    • துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறை ஆகியன திருப்பூா் எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் அமைக்கப்படவுள்ளன.இந்நிலையில் இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

    இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாநகர துணை காவல் ஆணையா் வனிதா, திருப்பூா் சாா் ஆட்சியா் (பொறுப்பு) ராம்குமாா், துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    ×