search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meeting of agents"

    • 40 தொகுதியிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்போம்.
    • தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெற்ற தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசியதாவது:-

    நடைபெறவுள்ள நாடா–ளுமன்ற தேர்தலில் நாற்ப–தும் நமதே, நாடும் நமதே என்ற அளவுக்கு அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி பயிற்சி பாசறை கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்த அனுமதி அளித்த முதல்-அமைச்சரும்,தி.மு.க. தலை வருமானமு.க.ஸ்டாலி னுக்கு நன்றி.

    மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி நடைபெற்ற இந்த இடத்தில் முகவர்க–ளுக்கு தேர்தல் என்னும் போரிலர் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் போரில் தி.மு.க. வெல்வது உறுதி.

    இவ்வாறு பேசினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

    தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதி கள் உள்பட தமிழகம், புதுச் சேரி உள்பட 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் ஒப்படைப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

    தமிழக எம்.பி.க்களின் கொள்கை ரீதியான கருத் துக்களை எதிர்கொள்ள முடியாமல் பிரதமரும், பா.ஜனதாவினரும் தடுமாறி வருகின்றனர். இந்த தேர்தலுக்குப்பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வடிவிலான வெண்கல சிலையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நினைவு பரிசாக வழங்கினர். இதில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    ×