search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    37 பேர் போட்டியிடுவதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்
    X

    37 பேர் போட்டியிடுவதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்

    • வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
    • அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது. இதனால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள் ளது.

    இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை உள்பட 59 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 41 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    41 பேரில் 4 பேர் நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 37 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி, பகுஜன சமாஜ் கட்சி உள்பட 11 கட்சிகளை சேர்ந்தவர்களும், 26 சுயேச்சைகளும் இடம்பெற்றுள்ளனர். 37 பேர் போட்டியிடுவதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இறுதி வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெயரை கொண்ட ராஜ்குமார் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகிறார்கள். கோ.ராஜ்குமார், கோ.பா.ராஜ்குமார், எம்.ராஜ்குமார், ராஜ்குமார் ஆகிய 4 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை பெயரை கொண்ட ராமச்சந்திரன் பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகிறார்கள். ரா. ராமச்சந்திரன், எம்.ராமச்சந்திரன் ஆகியோர் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர்.

    வேட்பாளர்களின் பெயரை குழப்பும் வகையில் ஒரே பெயரை கொண்டவர்களை எதிர்க்கட்சியினர் நிறுத்தி உள்ளதாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    Next Story
    ×