என் மலர்
நீங்கள் தேடியது "Seminar"
- இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து 1500 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
- பல நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த நூற்றாண்டு கொண்டாத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தலைவர்கள் டெல்லியில் இன்று(ஆகஸ்ட் 26) முதல் ஆகஸ்ட் 28 வரை 3 நாள் சிறப்பு கருத்தரங்கு நடக்க உள்ளது. 3 நாட்களும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறும்.
இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து 1500 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
விளையாட்டு, கலை, ஊடகம், நீதித்துறை, அரசியல் என பல்வேறு பின்னணியை சேர்ந்த பிரபலங்கள் இந்த கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பல நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் மீதான எதிர்மறை விமர்சனங்கள், மக்களை எப்படி தங்கள் அமைப்பை நோக்கி ஈர்ப்பது உள்ளிட்ட பல பொருண்மைகள் இந்த கருதரங்களில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவுடன் நெருங்கிய தொடர்புடைய ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த கருத்தரங்கு தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
- சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாக தாக்கல் செய்தார்கள்.
- அந்த மசோதா இந்திய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முக்கியமான முழக்கம் மாநில சுயாட்சியாகும். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், முரசொலி மாறன் என திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் மாநில சுயாட்சி முழக்கத்தைத்தான் உயர்த்தி பிடித்தார்கள்.
ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே Coordination தான் இருக்க வேண்டுமே தவிர, subordination இருக்கக் கூடாது என்பதுதான் இதற்கான தெளிவுரை. இந்த புரிதல் எல்லோருக்கும் ஏற்பட்டாக வேண்டும். அப்படி புரிந்துகொண்ட காரணத்தால் தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடனேயே 'மாநில சுயாட்சி' முழக்கத்தை கையில் எடுத்தது.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை தரும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது, இப்போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அது நடக்கும்வரை திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர், 1969-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, டெல்லிக்குச் சென்ற முதல் பயணத்திலேயே
மாநில சுயாட்சி குறித்துதான் பேசினார். அதன்படி, பின்னாளில் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார்கள். அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1974-ம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.
ராஜமன்னார் குழு அறிக்கையையும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இந்தியாவின் பல மாநில முதலமைச்சர்களிடமும் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுபோய் சேர்த்தார். மாநில சுயாட்சிக் கொள்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டினார். அதேபோல், மாநில சுயாட்சிக் கோரிக்கை என்பதையே தவறு, பிரிவினை என்று சிலர் நம்மைப் பார்த்து விமர்சித்தார்கள்.
அவர்களுக்கு பதில் சொல்வதுபோல், கலைஞர் அவர்கள் ஒரு முழக்கத்தை அறிவித்தார்கள். அது தான், "மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி" என்கின்ற முழக்கம். அந்த முழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான் முதலமைச்சர், ஒன்றிய -மாநில அரசுகளுக்கு இருக்கின்ற உறவு குறித்து ஆராய High Level committee to study union-state relations என்கின்ற உயர்நிலை குழுவினை இன்றைக்கு அமைத்துள்ளார்.
ஒன்றிய அரசு - மாநில அரசின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவருக்கே உரிய பாணியில் ஒரு உதாரணத்தை சொல்லியிருக்கின்றார். அதை நான் இங்கே நினைவுகூர விரும்புகின்றேன். "ஒரு கடிகாரத்தினுடைய முட்களில் மணிமுள் முதன்மையானது என்றாலும், நிமிடமுள் பேரளவு இயங்கினால் தான், அந்த மணிமுள் சிறிதளவு இயங்கும். அதே மாதிரி, மக்களோடு நெருக்கமாக இருக்கக்கூடிய மாநில அரசு பேரளவு இயங்க வேண்டும். மத்திய அரசு அதற்கு இணக்கமாக, அளவோடு இயங்க வேண்டும்" என்று அருமையாக சொன்னார்.
ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்றால், அதிகாரத்தை மேலும், மேலும் குவித்து வைத்துக் கொண்டு,
இந்தியா என்கின்ற கடிகாரத்தில் மணிமுள் மட்டும் இருந்தால் போதும், நிமிடமுள்ளே தேவையில்லை என்ற அளவிற்கு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு கூட, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாக தாக்கல் செய்தார்கள். மாநில முதலமைச்சர்கள் மீதோ, அமைச்சர்கள் மீதோ, ஒரு குற்றத்தைச் சுமத்தி, 30 நாட்கள் அவர்களை காவலில் வைத்து விட்டால் போதும். அந்தக் குற்றம் நிரூபிக்கப்படும் முன்பே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களாக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும் நீக்கலாம் என்ற மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
இது மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு பகிரங்க மிரட்டல். அந்த மசோதா சட்டமாவதை முதலமைச்சர் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் மாநில பட்டியலில் உள்ள அதிகாரங்களை எல்லாம் Concurrent Listக்கு மாற்றிக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, மாநிலப் பட்டியலில் உள்ள கல்வியை, கல்வி உரிமையை நம்மிடம் இருந்து பறிக்க முயற்சிக்கின்றார்கள்.
கல்வி தொடர்பாக, மாநில சட்டமன்றங்களை புறக்கணித்து விட்டு, ஒன்றிய அரசே தன்னுடைய சட்டங்களை இயற்றி வருகின்றது.
அதை எதிர்த்துதான் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் உரிமைக்குரலை எழுப்பி வருகின்றார்கள்.
அதற்கான தொடக்கமாகத்தான், மாநிலக் கல்விக்கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார். ஒன்றிய அரசினுடைய நேசனல் எஜிகேசன் பாலிசி, நியூ எஜிகேசன் பாலிசி என்.ஈ.பி யை முதலமைச்சர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தார். ஒன்றிய அமைச்சர் அந்த என்.ஈ.பி யை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாயை விடுவிக்க முடியும் என்று சொன்னார்.
ஆனால், இந்தப் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டிற்குள்ள என்னென்ன வரும். குலக்கல்வி வரும், அதாவது அப்பாவும், அம்மாவும் என்ன வேலை செய்கின்றார்களோ, அப்பாவும், தாத்தாவும் என்ன வேலை பார்க்கின்றார்களோ, அதே தொழிலை நாமும் செய்ய வேண்டி வரும் என்ற அந்தக் கொள்கையை கொண்டு வர பார்க்கின்றார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் 2,500 கோடி ரூபாய் கொடுப்போம். அதன் மூலமாக குறுக்கு வழியில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டிற்குள் நுழைக்க பார்க்கின்றார்கள்.
முதலமைச்சர் மிகத் தெளிவாக எதிர்த்து சொன்னார். என்.ஈ.பி யை ஏற்றுக் கொண்டால்தான் 2,500 கோடி ரூபாயை கொடுப்பேன் என்று சொல்கின்றீர்கள். ஆனால் ஒன்றிய அரசு நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், எந்த காலத்திலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டு செல்ல மாட்டேன் என்று எதிர்த்தார்.
இதனால் மாநில அரசுக்கு பல்வேறு வழிகளில் கடும் நெருக்கடி எற்பட்டது. வருமானவரி, சுங்கவரி, நிறுவன வரி, இப்போது GST என்று அனைத்து வளமான வரிகளையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. மாநிலங்களை நிதிக்காக கையேந்த வைக்கும் அமைப்பாக மாற்றிவிட்டார்கள்.
Delimitation என்று இப்போது கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் வேலையையும் ஒன்றிய அரசு செய்து வருகின்றது.
ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு இருக்கின்றன. ஓட்டுத்திருட்டு என்பது இந்திய ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக இன்றைக்கு இருக்கின்றது.
எதிர்த்து கேள்வி கேட்கும் மாநிலங்களுக்கு போதுமான நிதியை தர ஒன்றிய அரசு மறுக்கின்றது. இதையெல்லாம் மீறிதான், மாநில உரிமைகளை நாம் நிலைநாட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டே, தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சியில் இன்றைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக முதலமைச்சர் மாற்றிக்காட்டி இருக்கின்றார்.
இந்த கருத்தரங்கம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக நிச்சயமாக அமையும் என தெரிவித்தார்.
- எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை.
- 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்" இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* உலகளவிலான பல்கலைக்கழகங்கள் ஜே.என்.யு உடன் பணியாற்ற விரும்புகின்றனர்.
* ஜவஹர்லால் நேரு பல்கலையில் தமிழ் இருக்கையை அமைத்தவர் கலைஞர்.
* படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கம்.
* எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை.
* எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்.
* 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
* சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு வீடு வழங்க வேண்டும் என முடிவு செய்து கனவு இல்லம் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.
* சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடியில் வீடு வழங்கப்பட்டது.
* 15 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
* நூல் உரிமைத்தொகை இல்லாமல் கலைஞரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர்.
- ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.
சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்" இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
* வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர்.
* கலைஞர் இந்திய முகமாக மாறிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
* தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி.
* தனது வாழ்வையே தமிழ் சமூகத்தின் உயர்விற்காக ஒப்படைத்தவர் கலைஞர் கருணாநிதி.
* கலைஞரின் சட்டமன்ற உரைகள் சட்டமன்ற மாண்புக்கு இலக்கணம்.
* ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.
* செங்கோலை யாரும் பறித்து விடலாம் ஆனால் எனது எழுதுகோலை யாரும் பறிக்க முடியாது என கூறினார் கலைஞர் கருணாநிதி.
* 5 முறை தமிழக முதலமைச்சர், 50 ஆண்டுகள் தமிழ் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.
- கலைஞர் கருணாநிதி படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
சென்னை:
தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது 20 வயது முதல் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்தாகவும், பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்து உள்ளார்.
80 ஆண்டுகாலம் பொது வாழ்வு, 5 முறை முதலமைச்சராக ஆட்சிபுரிந்தது மட்டுமல்லாமல், 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களையும், 15 புதினங்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.
"நண்பனுக்கு", "உடன் பிறப்பே" எனும் தலைப்புகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களும் "கரிகாலன்" என்னும் பெயரில் கேள்வி பதிலும் எழுதி இருக்கிறார்.
இதைத் தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஏறத்தாழ 7 லட்சம் பக்கங்களுக்கு மேல் இருக்கும்.
பள்ளிப் பருவம் தொடங்கி அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் பாராட்டுக்குரியவை. கவித்துவமும் இலக்கியத் திறனும் கொண்ட கருணாநிதியின் படைப்பாற்றலைப் போற்றும் வண்ணம் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்த முதன்முறையாக "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்", நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடத்த உள்ளது.
தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.
விழாவில், சாகித்திய அகாடமி செயலர் முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ், வரவேற்புரையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கம் 3-ம் தளத்தில் உள்ள சிற்றரங்கில் "கவிதை" என்கிற அமர்வு நடைபெறுகிறது.
இதேபோன்று, 28-ந்தேதி (சனிக்கிழமை) 2-ம் நாள் நிகழ்வில் "நாடகம்" என்கிற அமர்வு நடை பெறுகிறது. நிறைவு விழாவில், கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.
- சாரதா கல்லூரியில் பொருளியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
நெல்லை அரியகுளம் சாரதா கல்லூரியில் செயலாளர் யதீஸ்வரி சரவணப்பிரியா அம்பா, இயக்குநர் சந்திரசேகரன் ஆகியோரின் அறிவுத்தலின்படி பொருளியல் துறையின் சார்பில் போட்டித்தேர்வுகளில் பொருளியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் கலந்து கொண்டு பொருளியல் படிப்பின் முக்கியத்துவத்தையும், இந்த துறையில் பட்டம் பெறுவதால் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பு வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கி பேசினார்.
முன்னதாக 3-ம் ஆண்டு மாணவி இந்துமதி வரவேற்று பேசினார். பொருளியல் துறை தலைவரும், துணை முதல்வருமான கலாவதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 2-ம் ஆண்டு மாணவி சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.
- லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தினம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
- கருத்தரங்கிற்கு முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தினம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சார்லஸ் வரவே ற்று பேசினார். தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் 'மாணவர்களும் தேச ஒருமைப்பாடும்' என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகளிடத்தில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் விரிவுரையாளர் நடேசன் நன்றி கூறினார்.
- பாளை திருமால்நகர் மாநகராட்சி பூங்கா நூலகத்தில் தற்சார்பு வாழ்க்கை முறை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
- கருத்தரங்கில் திருமால் நகரை சார்ந்த பெண்கள் பங்கு பெற்றனர்.
நெல்லை:
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியின் சமூக பணித்துறை சார்பில் பாளை திருமால்நகர் மாநகராட்சி பூங்கா நூலகத்தில் தற்சார்பு வாழ்க்கை முறை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக இந்திரா பொன்னையா கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்சார்பு வாழ்க்கை முறை என்பது நம் சொந்த தேவைகள் மற்றும் நம் குடும்பத்தின் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வது ஆகும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பருப்பு பொடி, சமையலுக்கு உபயோகப் படுத்தும் மசாலா பொருட்கள் இது போன்ற வைகளை நாம் வெளியே இருந்து வாங்காமல் நம் வீட்டில் செய்து உபயோகிப்பதன் மூலமாக நம் ஆரோக்கியத்தையும் நாம் பேணி காக்கலாம் என்றார்.
கருத்தரங்கில் திருமால் நகரை சார்ந்த பெண்கள் பங்கு பெற்றனர். ஏற்பாடு களை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி சமூக பணித்துறை மாணவி வரலெட்சுமி செய்திருந்தார்.
- சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
- தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஏ.எம்.நவீன அரிசி ஆலை லட்சுமி சேகர் தலைமை தாங்கினார்.பொன்னொளிர் ஏஜென்சி அருணாச்சல முத்துச்சாமி , கோவா கேட்டரிங் சுரேஷ், எஸ்.ஆர்.எஸ்.ஹார்டுவேர்ஸ் சுப்புராஜ், ரஜினி பத்திர எழுத்தாளர் ரஜினி, கிளாசிக் கம்ப்யூட்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். கே.ஆர்.பி. நவீன அரிசி ஆலை உரிமையாளர் இளங்கோ தொகுத்து வழங்கினார்.
பொன் அறிவழகன் தொடக்க உரையாற்றினார்.கோல்டன் டிரேடர்ஸ் செல்வராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார். பைம் தொழில் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகி சிவக்குமார் தொழில் ஆரம்பிப்பது குறித்து பேசினார்.நிகழ்ச்சியை ராஜாதி ராஜா நவீன அரிசியாலை ஆனந்த் ,நண்பா கேக் சங்கரபாண்டியன், ராஜாமணி திருமலை கொழுந்து, ஆனந்த், ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் கே.எஸ். சினேகா பாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சுடர் பரமசிவம் நன்றி கூறினார்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு.
- பேரணியின் போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நாகூரில் நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் சாந்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சிவா சுகந்தி மற்றும் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகம் துணைத் தலைவர் மேதின ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக தேசிய பசுமைப்படை ஆசிரியை பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசிரியர் மாதவன் நன்றியுரை ஆற்றினார். பின்னர் விழிப்புணர்வு பேரணியை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்க்காவல் படை போக்குவரத்து கமாண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வழிநடத்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியின் போது பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- தென்காசி அரசு தலைமை மருத்துவ மனையில் நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
- நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு,நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள், குறிப்பாக தென்காசி மாவட்ட மூத்த பொது நல மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என சுமார் 107 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, துணை இயக்குனர் சுகாதாரம் முரளி சங்கர், துணை இயக்குனர் (குடும்ப நலம்) ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் மருத்துவர்கள் அகத்தியன், மல்லிகா, மாரிமுத்து, கார்த்திகேயன், ராஜலட்சுமி, சாரதாதேவி நீரிழிவு நோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர். மேலும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கலந்துகொண்டார்.
கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினார். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முன்னின்று நடத்திய மருத்துவர்கள் விஜயகுமர், மல்லிகா, கார்த்திக் உள்ளிட்டோர் மற்றும் பேச்சாளர்கள், கலந்து கொண்ட மருத்து வர்கள், பணியாளர்களுக்கு நன்றி கூறினார்.
- நவம்பர் புரட்சி தினத்தை ஒட்டி நூற்றாண்டு மண்டபத்தில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி கம்யூனிஸ்ட் கொடியேற்றினார்.
நெல்லை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு சார்பில் நவம்பர் புரட்சி தினத்தை ஒட்டி கருத்தரங்கு பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி கொடியேற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கற்பகம் வரவேற்றார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பூலுடையார், மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் அறிமுக உரையாற்றினார்.
கார்ப்பரேட் பாசிசம் குறித்து மாநில குழு உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகி மோகன் ஆகியோர் பேசினர். வகுப்புவாத சவால்கள், மக்கள் ஜனநாயகம், தமிழகமும் வர்க்கபோரும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகள் பேசினர். முடிவில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் நிறைவுரையாற்றினார்.






