என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் நூற்றாண்டு"

    • எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை.
    • 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

    சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்" இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * உலகளவிலான பல்கலைக்கழகங்கள் ஜே.என்.யு உடன் பணியாற்ற விரும்புகின்றனர்.

    * ஜவஹர்லால் நேரு பல்கலையில் தமிழ் இருக்கையை அமைத்தவர் கலைஞர்.

    * படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கம்.

    * எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை.

    * எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்.

    * 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

    * சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு வீடு வழங்க வேண்டும் என முடிவு செய்து கனவு இல்லம் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.

    * சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடியில் வீடு வழங்கப்பட்டது.

    * 15 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    * நூல் உரிமைத்தொகை இல்லாமல் கலைஞரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர்.
    • ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.

    சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்" இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    தொடக்க விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி.

    * வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர்.

    * கலைஞர் இந்திய முகமாக மாறிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

    * தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி.

    * தனது வாழ்வையே தமிழ் சமூகத்தின் உயர்விற்காக ஒப்படைத்தவர் கலைஞர் கருணாநிதி.

    * கலைஞரின் சட்டமன்ற உரைகள் சட்டமன்ற மாண்புக்கு இலக்கணம்.

    * ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.

    * செங்கோலை யாரும் பறித்து விடலாம் ஆனால் எனது எழுதுகோலை யாரும் பறிக்க முடியாது என கூறினார் கலைஞர் கருணாநிதி.

    * 5 முறை தமிழக முதலமைச்சர், 50 ஆண்டுகள் தமிழ் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.
    • கலைஞர் கருணாநிதி படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

    சென்னை:

    தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது 20 வயது முதல் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்தாகவும், பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்து உள்ளார்.

    80 ஆண்டுகாலம் பொது வாழ்வு, 5 முறை முதலமைச்சராக ஆட்சிபுரிந்தது மட்டுமல்லாமல், 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களையும், 15 புதினங்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.

    "நண்பனுக்கு", "உடன் பிறப்பே" எனும் தலைப்புகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களும் "கரிகாலன்" என்னும் பெயரில் கேள்வி பதிலும் எழுதி இருக்கிறார்.

    இதைத் தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஏறத்தாழ 7 லட்சம் பக்கங்களுக்கு மேல் இருக்கும்.

    பள்ளிப் பருவம் தொடங்கி அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் பாராட்டுக்குரியவை. கவித்துவமும் இலக்கியத் திறனும் கொண்ட கருணாநிதியின் படைப்பாற்றலைப் போற்றும் வண்ணம் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்த முதன்முறையாக "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்", நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடத்த உள்ளது.

    தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.

    விழாவில், சாகித்திய அகாடமி செயலர் முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ், வரவேற்புரையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கம் 3-ம் தளத்தில் உள்ள சிற்றரங்கில் "கவிதை" என்கிற அமர்வு நடைபெறுகிறது.

    இதேபோன்று, 28-ந்தேதி (சனிக்கிழமை) 2-ம் நாள் நிகழ்வில் "நாடகம்" என்கிற அமர்வு நடை பெறுகிறது. நிறைவு விழாவில், கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.

    • கலைஞர் பெவிலியனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
    • கருணாநிதி பெயர் வைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கலைஞர் பெவிலியனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

    பெவிலியனுக்கு கருணாநிதி பெயர் வைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.300, அதிகபட்ச விலை ரூ.400க்கும் டிக்கெட் விற்பனையாக உள்ளது.

    ×