search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் இந்திய கம்யூனிஸ்ட் கருத்தரங்கு
    X

    கருத்தரங்கு நடைபெற்றபோது எடுத்தபடம்.

    பாளையில் இந்திய கம்யூனிஸ்ட் கருத்தரங்கு

    • நவம்பர் புரட்சி தினத்தை ஒட்டி நூற்றாண்டு மண்டபத்தில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி கம்யூனிஸ்ட் கொடியேற்றினார்.

    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு சார்பில் நவம்பர் புரட்சி தினத்தை ஒட்டி கருத்தரங்கு பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி கொடியேற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கற்பகம் வரவேற்றார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பூலுடையார், மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் அறிமுக உரையாற்றினார்.

    கார்ப்பரேட் பாசிசம் குறித்து மாநில குழு உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகி மோகன் ஆகியோர் பேசினர். வகுப்புவாத சவால்கள், மக்கள் ஜனநாயகம், தமிழகமும் வர்க்கபோரும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகள் பேசினர். முடிவில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் நிறைவுரையாற்றினார்.

    Next Story
    ×