search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india communist"

    • தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதியை குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீக நிதி ஒதுக்கீடு.
    • தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை அண்ணாமலை ஏற்பாரா? என மக்கள் கேள்வி.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, அண்மையில் காசியில் தமிழ் சங்கம் விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர்.

    ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கபட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய மத்திய அரசு, தமிழ்மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

    குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை மந்திரி அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா? எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா? என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர். தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடி அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ்மொழிக்கு பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நவம்பர் புரட்சி தினத்தை ஒட்டி நூற்றாண்டு மண்டபத்தில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி கம்யூனிஸ்ட் கொடியேற்றினார்.

    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு சார்பில் நவம்பர் புரட்சி தினத்தை ஒட்டி கருத்தரங்கு பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி கொடியேற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கற்பகம் வரவேற்றார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பூலுடையார், மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் அறிமுக உரையாற்றினார்.

    கார்ப்பரேட் பாசிசம் குறித்து மாநில குழு உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகி மோகன் ஆகியோர் பேசினர். வகுப்புவாத சவால்கள், மக்கள் ஜனநாயகம், தமிழகமும் வர்க்கபோரும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகள் பேசினர். முடிவில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் நிறைவுரையாற்றினார்.

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    சிவகிரி:

    சிவகிரி மேலரத வீதி விஸ்வகர்மா மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகிரி நகர இடைக் கமிட்டியின் 34 -வது மாநாடு நடைபெற்றது.

    விவசாய சங்க வட்டார தலைவர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சிவகிரி நகர செயலாளராக பாலசுப்பிரமணியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செம்படைத் தொண்டர்கள் பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து காந்திஜி கலையரங்கம் சென்று அடைந்தது.

    மாலை 6 மணியளவில் காந்திஜி கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர் ராஜகோபால், நகர துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் இசக்கி துரை, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நகர துணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
    சென்னை தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து மூத்த தலைவர் நல்லகண்ணுவை காலி செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
    சென்னை: 

    சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார்.

    சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர். 

    அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துறை நோட்டீஸ் விட்டதைத் தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் வெளியேறினார். 
    நாட்டை நிர்வகிப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். #draja #pmmodi #indiacommunistparty

    பெருந்துறை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மூத்த தலைவர் பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன், மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் தேசிய செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் மோடி அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. நாட்டினுடைய பொருளாதாரம் சீர்குலைந்து இருக்கிறது. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    இந்தியாவில் மதச்சார் பற்ற ஒரு ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். மோடி தலைமையில் ஆட்சி அமைந்து ஐந்தாண்டு காலம் நிறைவு பெற்ற நிலையில், நாட்டினுடைய நிலைமையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டை நிர்வகிப்பதில் மோடி படுதோல்வி அடைந்திருக்கிறார்.

    மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கருப்பு பணம் பற்றி அவர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை.


    அதற்கு மாறாக தொழில்கள் முடங்கி போயிருக்கின்றன. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று உரிய புரிதல் இல்லாமல் அவர்கள் செயல்படுத்திய காரணத்தால் இன்றைக்கு சிறு குறு தொழில்கள் நொடிந்து போய் இருக்கின்றன. பலருக்கு வேலைவாய்ப்பு பறி போயிருக்கிறது.

    விவசாயத்துறை மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. விவசாயிகள் நாடு முழுவதும் கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலைக்கு உட்படுகிறார்கள். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றப்பட வில்லை.

    மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். பசுவின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் கலவரச் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கி இருக்கிறார்கள். எனவேதான் இன்றைக்கு நாடு காப்பாற்றப்பட வேண்டும்.

    இந்தியாவுடைய மதச் சார்பற்ற ஜனநாயக பன் முகத்தன்மை கொண்ட ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இவை நடைபெற வேண்டுமானால் பாரதீய ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டை ஆளும் கட்சி என்பது இன்றைக்கு மத்திய அரசின் கைகளுக்கு கட்டுப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. அதை அவர்களே பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்கள். மத்தியில் உள்ள மோடி ஆட்சியை நிபந்தனையற்று ஆதரிப்போம் என அவர்களே சொல்கிறார்கள்.

    அதனால் தமிழ்நாட்டின் உரிமை, நலன் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் ஒரு மாற்று மதச் சார்பற்ற ஜனநாயக ஆட்சி அமையவேண்டும். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம் அமைக்க வேண்டும். இங்கு பாரதீய ஜனதா காலூன்ற இடம் இல்லை என்ற நிலையை தமிழ்நாட்டு மக்கள் நிரூபணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராஜா கூறினார். #draja #pmmodi #indiacommunistparty

    போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை முற்றுகையிடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #mutharasan #MinisterDindigulSrinivasan

    பெருந்துறை:

    பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 13 மாவட்டங்களில் விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் போலீசார் மிரட்டி அத்து மீறும் செயலில் ஈடுபடுகின்றனர்.

    அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு செல்லக் கூடாது என சர்வாதிகார போக்குடன் ஈரோடு மாவட்ட போலீசும் செயல்பட்டு வருகிறது. எங்களது கட்சியின் மூத்த வக்கீல் மோகன் மீது வழக்கு போட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம். எங்களது மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ளது.

    அவரது மகள், மருமகன் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி இந்த இடத்தில் நீங்கள் எதுவும் செய்யக்கூடாது. இது மந்திரி உத்தரவு என மிரட்டியுள்ளனர்.


    இது குறித்து கேட்டதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதால் தான் தடுத்து நிறுத்தினோம் என போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே மேற் கொண்டு இதுபோன்ற மிரட்டல்கள் நடக்குமாயின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார். #mutharasan #MinisterDindigulSrinivasan

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #gajacyclone
    நாகப்பட்டினம்:

    நாகை தாலுகா அலுவலக நுழைவு வாயில் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால், நாகை நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து கலந்துகொண்டு பேசினார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த கால்நடைகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். புயல், கனமழையில் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும்.

    புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், பழைய காலனி வீடுகள் உள்ளவர்களுக்கு அரசு போர்க்கால அடிப்படையில் கான்கிரீட் வீடுகள் கட்டி தர வேண்டும். வேலை இழந்து வாழும் விவசாய தொழிலாளர்களுக்கு புயல் நிவாரண நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி வழங்கி ரூ.224 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜீவாராமன், மாதர் சங்க ஒன்றியச்செயலாளர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். #gajacyclone 
    திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், விழுப்பணங்குறிச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை துணைச் செயலாளர் முருகேசன், கலிய மூர்த்தி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கட்சியினருக்கு, கட்சி உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி கட்சியின் மாவட்ட முடிவுகளை விளக்கியும் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினார். 

    மேலும் கூட்டத்தில்  கட்சியின் வளர்ச்சி நிதியை வரும் 25-ந் தேதிக்குள் வசூல் செய்து மாவட்ட கமிட்டியிடம்  கொடுப்பது, விழுப்பணங்குறிச்சியில் இருந்து பாட்சா நகர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும், விவசாயத்தை அளிக்கும் காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புள்ளம்பாடி வாய்க்காலில்  பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர்.
    5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்து பொதுமக்களின் மனநிலை அவருக்கு புரிய வில்லை என்பதையே எடுத்து காட்டுகிறது என நல்லகண்ணு தெரிவித்தார். #nallakannu #edappadipalanisamy #election2018

    மதுரை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    5 மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். மக்கள் விரோத செயல்பாடுகளே பாரதீய ஜனதா தோல்விக்கு காரணம்.

    5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பாதிக்காது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். பொதுமக்களின் மனநிலை அவருக்கு புரிய வில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

    கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து அங்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டினால் தமிழகம் பாலைவன மாகிவிடும். டெல்டா பகுதிகள் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #nallakannu #edappadipalanisamy #election2018

    தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் யானைக்கூட்டம் தினந்தோறும் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதால் அதனை கட்டுப்படுத்தாத வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து தேவர்பெட்டா வழியாக தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் தமிழக எல்லைக்குள் நுழைந்த யானைக்கூட்டம் தினந்தோறும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. 

    இந்த யானை கூட்டத்தை கட்டுப்படுத்தாத வனக துறையினரை கண்டித்தும், யானைகள் ஊருக்குள் வராதவாறு அகழிகள் வெட்டி யானை கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பயிர் சேதாரங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக்கோரியும் தேன்கனிக்கோடடை பழைய பஸ் நிலையம் பக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் பூதட்டியப்பா முன்னிலை வகித்தார்.
    தமிழத்தில் நடைபெறும் சத்துணவு திட்ட ஊழலில் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. #indiacommunist #NutritionProjectScam
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசின் துறைகள் அனைத்தும் லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிக் கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்ட மெகா ஊழல் அம்பலமாகியுள்ளது. இந்த மெகா ஊழல் பற்றி தமிழக அரசுக்கும், மத்திய விசாரணை முகமைக்கும் வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகின்றது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே ஊழல் புகார்களில் சிக்கியுள்ளதால், இந்த சத்துணவு திட்ட மெகா ஊழல் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டாலும் அது ஏமாற்று வேலையாகவே முடியும்.

    தமிழகத்தில் நடைபெறும் ஊழலை விசாரிப்பதுபோல் விசாரித்து, பின்பு அதை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டி தன் அரசியல் லாபத்துக்கு பணியவைக்கும் வேலையை பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அரசு செய்து வருகின்றது. இந்த சத்துணவு மெகா ஊழல் விஷயத்திலாவது உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #indiacommunist #NutritionProjectScam
    மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணை நடத்த கோரி இந்திய கம்யூனிஸ்டு வலியுறுதி உள்ளது. #DharmapuriGirlStudent #GirlMolested

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிட்லிங் பகுதியில் 16 வயதான சிறுமியை அந்த பகுதியை சேர்நத சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து உள்ளார். கடந்த 5-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற்ற சம்பவத்துக்கு பிறகு மறுநாள் (6-ந் தேதி) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அன்றைய தினமே பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரால் கொடுக்கப்பட்ட மனுவை போலீசார் வாங்க மறுத்தது ஏன்? அன்றைக்கே நடவடிக்கை தொடங்கி இருந்தால் மாணவி உயிரிழப்பை தவிர்த்து இருக்க முடியும். இது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.

    7-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 3 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகுதான் 10-ந் தேதி காலை உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.

    உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #dharmapurigirlstudent #girlmolested

    ×