என் மலர்
நீங்கள் தேடியது "கோழிக்கோடு"
- இருவருக்கும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
- பல மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமீபிக் மூளைக்காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. இந்த காய்ச்சலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 4-ம் வகுப்பு படித்துவந்த தாமரச்சேரி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
இந்தநிலையில் ஓமசேரியை சேர்ந்த 3 மாத குழந்தை மற்றும் அன்னசேரியை சேர்ந்த வாலிபர் ஆகிய இருவருக்கும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
அவர்கள் இருவரும் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர்கள் இருவருக்கும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாலிபர் மற்றும் குழந்தை வீடுகளில் உள்ள கிணற்றுநீர் உள்ளிட்ட பல மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
- 200-க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 3,025 படுக்கைகளுடன் இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழ்கிறது.
இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல நவீன கருவிகள் இருக்கின்றன. இதனால் இந்த மருத்துவமனைக்கு கோழிக்கோடு மாவட்டம் மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகிறார்கள்.
இந்தநிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுக்கு அருகில் இருந்த யு.பி.எஸ். அமைப்பில் தீப்பிடித்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவை முழுவதுமாக புகை மூட்டம் சூழ்ந்தது. ஆஸ்பத்திரியில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலமாக தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
ஆகவே தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடற்கரை மற்றும் வெள்ளிமடுக்குன்னு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் அதிரடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்பு புகைமூட்டம் இருந்த மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகளும் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.
பல்வேறு வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை வேறு மருத்துவமனைகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆம்புலன்சு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
முதலில் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்த 30 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தேவைப்பட்டதால், அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். மற்ற நோயாளிகள் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மின் கசிவு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி 5 நோயாளிகள் இறந்து விட்டதாக தகவல் பரவியது.
கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த இளம்பெண் கங்கா (வயது34), கங்காதரன்(70), கோபாலன்(55), சுரேந்திரன்(59), நஜிரா(44) ஆகிய 5 நோயாளிகள் நேற்று இரவு இறந்தனர். அவர்கள் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.
புகை மூட்டத்தில் சிக்கிய நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றியபோது 5 பேர் இறந்திருப்பதாக சித்திக் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். ஆனால் அவர்கள் 5 பேரும் புகை மூட்டத்தில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகவில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண் நோயாளி ஏறகனவே வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தவர் என்றும், 2 நோயாளிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், ஒரு நோயாளி கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஒரு நோயாளி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெற்றவர் எனவும், அவரவர் உடல்நல பிரச்சனை காரணமாகவே அவர்கள் இறந்திருப்பதாக கோழிக்கோடு மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த தீவிபத்துக்காக விரிவான விசாரணை நடத்துமாறு மருத்துவக்கல்வி இயக்குனருக்கு கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. மேலும் பொறியாளர் குழுவும் ஆய்வை தொடங்கியுள்ளது.
5 நோயாளிகள் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த மருத்துவ வாரியம் இன்று கூடுகிறது. மருத்துவ கல்வி இயக்குனர் விசாரணை மற்றும் மருத்துவ வாரிய ஆலோசனை உள்ளிட்டவைகள் முடிந்த பிறகே 5 நோயாளிகளின் இறப்புக்காக காரணம் வெளியிடப்படும் என தெரிகிறது.
- கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
- நேற்று வரை ஆறு பேர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய குழு அம்மாவட்டம் சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.
கோழிக்கோடு மாவட்டத்தில் 1080 பேர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாக கருதப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 130 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 327 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவார்கள். 29 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
22 பேர் மலப்புரம், ஒருவர் வயநாடு, தலா மூன்று பேர் கண்ணூர், திரிச்சூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த தகவலை சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
- தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம்.
- கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் வெளி நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்கள் உள்பட பலரும் பணியில் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத்திற்கு விமான சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் விமான டிக்கெட் உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இவர்களது பயணம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலங்களாக உள்ளது. இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடல்சார் வாரிய தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால், கப்பல் சேவையை விரைவில் தொடங்க முடியும். இதற்கான டெண்டர் ஜனவரி மாதத்தில் கோரப்படும். தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம் என்றார்.
ஆயிரம் முதல் 2 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வகையில் கப்பல் இயக்க பரிசீலித்து வருவதாகவும், பயண நாட்கள் 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.
- வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப் பகுதியை ஒட்டியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.
இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.
மேலும் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பரிதாப மாக இறந்தார். அடுத்தடுத்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
வனவிலங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரி அருகே நெல்லிப்பொயில் என்ற பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளது.
அந்த பகுதியில் 3 சிறுத்தை புலிகள் உலாவியபடி இருந்திருக்கிறது. அகனம் பொயில் பகுதியில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் 3 சிறுத்தைப்புலிகள் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுத்தைப்புலிகள் எங்கு பதுங்கி இருக்கின்றன? என்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத்தை 17-ந் தேதி எதிர் கொள்கிறது.
- பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் மும்பையுடன் நாளை மோதுகிறது.
சென்னை:
3-வது பிரைம் கைப்பந்து 'லீக்' போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் 'சூப்பர் 5' சுற்றுக்கு நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், மும்பை மீட்டியார்ஸ், டெல்லி டூபான்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ் ஆகியவை தகுதி பெற்றன.
'சூப்பர் 5' சுற்று கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்களூர்- கோழிக்கோடு அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 18-16, 16-14, 8-15, 11-15, 15-10 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது.
கோழிக்கோடு அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே மும்பையை 3-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லியிடம் தோற்று இருந்தது.
கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத்தை 17-ந் தேதி எதிர் கொள்கிறது.
பெங்களூர் அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் தோற்று இருந்தது. அகமதாபாத்தை வென்று இருந்தது. பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் மும்பையுடன் நாளை மோதுகிறது.
முன்னதாக நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 15-8, 13-15, 7-15, 16-14, 15-13 என்ற செட் கணக்கில் போராடி நடப்பு சாம்பியன் அகமதாபாத்தை வீழ்த்தியது. மும்பை அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. அகமதாபாத் அணி 2-வது தோல்வியை தழுவியது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் அகமதாபாத்-டெல்லி அணிகள் மோதுகின்றன. சூப்பர் 5 சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
இதில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும். 2-வது 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.
- யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய தொழில் நுட்ப கல்வி மையம் (என்.ஐ.டி) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யோகீஸ்வர்நாத் என்பவர் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
அவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவர் யோகீஸ்வர்நாத் விடுதியின் சி-பிளாக்கின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவர் யோகீஸ்வர்நாத் மாடியில் இருந்து குதித்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. பாடங்கள் தொடர்பாக மன அழுத்தம் ஏறபட்டதன் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய தொழில் நுட்ப கல்வி மையத்தின் விடுதியில் 7-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 4 மாத குழந்தைக்கு கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை நாக்கில் செய்யப்பட்டது.
- மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே இந்த தவறு நடந்துள்ளது என்றும் குழந்தைக்கு நாக்கில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 4 மாத குழந்தைக்கு கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை நாக்கில் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தைக்கு கையில் 6 விரல்கள் உள்ளதால் கூடுதல் விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்க கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தையை அதன் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அறுவை சிகிச்சை அறைக்கு வந்த மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது, குழந்தைக்கு நாக்கு கட்டு (Tounge tie) இருந்ததைப் பார்த்து அதை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர் தவறுதலாக குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்தாலும் இது குழந்தைக்கு நன்மையே பயக்கும் என்றும் இதனால் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
ஆனால் குழந்தையின் பெற்றோர்கள், மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே இந்த தவறு நடந்துள்ளது என்றும் குழந்தைக்கு நாக்கில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகள் பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.
- உத்தரப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரம் இந்தியாவிலேயே முதல் முறையாக இலக்கியங்களின் நகரம் என்ற UNESCO அந்தஸ்த்தைப் பெற்று அசத்தியுள்ளது. கடந்த வருடமே இதற்க்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கோழிக்கோட்டை இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு மலபார் பகுதியில் உள்ள கோழிக்கோடு நகரம் வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் வருவதற்கான நுழைவாயிலாக இருந்து வந்தது. ஐரோப்பியர்கள், பாரசீகர்கள், சீனர்கள், அரேபியர்கள் ஆகோயோருக்கு நூற்றாண்டு காலங்களுக்கு முன்பிருந்து கோழிக்கோடு இந்தியாவுக்குகான நுழைவாயிலாக திகழ்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த காலம் தொட்டு கோழிக்கோடு மலையாள இலக்கியகர்த்தாக்கள் புழங்கும் நகரமாக இருந்து வருகிறது. பல்வேறு புத்தக திருவிழாக்கள் அன்றுதொட்டு இன்றுவரை தொடர்ச்சியாக கோழிக்கோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகளான வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே. பொட்டேகாட் உள்ளிட்ட பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.


சுமார் 500 நூலகங்களைக் கோழிக்கோடு தன்னகத்தே கொண்டுள்ளது. எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் கோழிக்கோட்டில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்தினார். பல தசாப்தங்களாக கோழிகோட்டில் நடந்து வரும் புத்தக திருவிழாக்கள் அந்நகரை இலக்கிய வளம் நிறைந்ததாக மாற்றியுள்ளது என்றே கூற வேண்டும். இந்த நிலையில்தான் கோழிக்கோடு இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கோழிக்கோட்டில் ஜூன் 23 இலக்கிய நகரத்தின் நாள் வருடந்தோறும் கொண்டாடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதவிர்த்து நாட்டுப்புற கலைகள், அலங்காரம், சினிமா, ஊடக கலை, இசை உள்ளிட்ட பிரிவுகளில் உலகம் முழுவதும் உள்ள 350 நகரங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடமே இந்த 350 நகரங்களின் பட்டியல் வெளியான நிலையில் தற்போது அந்நகரங்களின் பிரதிநிதிகள் வரும் ஜூலை 1-5 வரை யுனெஸ்கோ சார்பில் போர்ச்சுகளில் நடக்க உள்ள கருதத்தரங்களில் கலந்து கொள்ள உள்ளனர். UNESCO என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஆகும்.
- நடைக்காவு போலீசார் நடத்திய சோதனையில் 102.88 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் சிக்கினர்.
- போதைப்பொருளை கொள்முதல் செய்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிகத்தது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நடைக்காவு போலீசார் நடத்திய சோதனையில் 102.88 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்த போது, பெங்களூரில் இருந்து போதைப்பொருளை கொள்முதல் செய்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிகத்தது தெரியவந்தது. கைதானவர்கள் கோட்டூர் வயலங்கரையை சேர்ந்த சப்தர் ஹாஷ்மி (வயது 31), மாங்காடு ரபீக் (35) என தெரியவந்தது.






