search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கைப்பந்து லீக் போட்டி: கோழிக்கோடு அணிக்கு 2-வது வெற்றி- பெங்களூருவை போராடி வீழ்த்தியது
    X

    கைப்பந்து லீக் போட்டி: கோழிக்கோடு அணிக்கு 2-வது வெற்றி- பெங்களூருவை போராடி வீழ்த்தியது

    • கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத்தை 17-ந் தேதி எதிர் கொள்கிறது.
    • பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் மும்பையுடன் நாளை மோதுகிறது.

    சென்னை:

    3-வது பிரைம் கைப்பந்து 'லீக்' போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'சூப்பர் 5' சுற்றுக்கு நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், மும்பை மீட்டியார்ஸ், டெல்லி டூபான்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ் ஆகியவை தகுதி பெற்றன.

    'சூப்பர் 5' சுற்று கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்களூர்- கோழிக்கோடு அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 18-16, 16-14, 8-15, 11-15, 15-10 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

    கோழிக்கோடு அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே மும்பையை 3-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லியிடம் தோற்று இருந்தது.

    கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத்தை 17-ந் தேதி எதிர் கொள்கிறது.

    பெங்களூர் அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் தோற்று இருந்தது. அகமதாபாத்தை வென்று இருந்தது. பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் மும்பையுடன் நாளை மோதுகிறது.

    முன்னதாக நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 15-8, 13-15, 7-15, 16-14, 15-13 என்ற செட் கணக்கில் போராடி நடப்பு சாம்பியன் அகமதாபாத்தை வீழ்த்தியது. மும்பை அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. அகமதாபாத் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் அகமதாபாத்-டெல்லி அணிகள் மோதுகின்றன. சூப்பர் 5 சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

    இதில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும். 2-வது 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.

    Next Story
    ×