search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leopards"

    • வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.
    • வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப் பகுதியை ஒட்டியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.

    மேலும் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பரிதாப மாக இறந்தார். அடுத்தடுத்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    வனவிலங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரி அருகே நெல்லிப்பொயில் என்ற பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளது.

    அந்த பகுதியில் 3 சிறுத்தை புலிகள் உலாவியபடி இருந்திருக்கிறது. அகனம் பொயில் பகுதியில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் 3 சிறுத்தைப்புலிகள் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுத்தைப்புலிகள் எங்கு பதுங்கி இருக்கின்றன? என்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
    • வனத்துறை சார்பில் வனப்பகுதியை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள ஊதியூர் காப்புக்காட்டில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை தென்பட்டது. நாமக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.அவ்வப்போது காட்டில் இருந்து வெளியே வரும் சிறுத்தை அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள், வளர்ப்பு நாய், பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு உள்ளிட்ட விலங்குகளை அடித்து, தூக்கி சென்ற சம்பவம் அவ்வப்போது நடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையை ஒட்டியிருந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதியை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வைத்து, சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கூண்டும் வைக்கப்பட்டது. அவ்வப்போது கேமராவில் சிக்கிய சிறுத்தை கூண்டுக்குள் அகப்படவில்லை.

    தற்போதைய நிலை குறித்து காங்கயம் வனத்துறையினர் கூறியதாவது:-

    ஊதியூர் காப்புக்காடு வளம் நிறைந்த காடாக இருப்பதால் சிறுத்தை அங்கேயே தங்கிவிட்டது. முள்ளம்பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்கினங்களை சிறுத்தை அடித்து உணவாக்கி கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.கடந்த 42 நாளாக கேமராவில் சிறுத்தை அகப்படவில்லை. இந்த காப்புக்காடு வளம் நிறைந்தது என்பது இதன் வாயிலாக தெரிய வருகிறது.சிறுத்தை வெளியே வராமல் அப்பகுதியை தனது வாழ்விடமாக்கிக் கொண்டிருக்கலாம்.அல்லது தான் வந்த வழியே வெளியே சென்றிருக்கலாம். இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

    தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவு
    • மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது

    ஊட்டி,

    கோத்தகிரி நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, கருஞ் சிறுத்தை, புலி, காட்டு யானைகள், மான்கள், காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதுடன் அவற்றின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் அவ்வப்போது மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது

    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலைக்கு அருகே கார்சிலி பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கருஞ்சிறுத்தை மற்றும் முதுகில் 2 குட்டிகளை சுமந்து செல்லும் தாய்க்கரடி உள்ளிட்டவை உலா வந்த வண்ணம் உள்ளன. இந்த காட்சிகள் அங்குள்ள தனியார் தொழிற்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் குறித்த செய்தி வெளியே பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகளில் திரியும் வன விலங்குகள் தாக்கி பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • க.பரமத்தி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்
    • சிறுத்தை புலியின் கால் தடம் பதிவான படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

    கரூர்

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே அத்திப்பாளையம், சேர்வைகாரன்புதுார், வி.என்.புதுார் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், ஆடுகளை கடித்துவிட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் ஒரு ஆட்டின் கழுத்து பகுதியில் சிறுத்தை கடித்தது போன்றும், சிறுத்தை புலியின் கால் தடம் பதிவான படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் க.பரமத்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து கரூர் வனச்சரக அலுவலர் தண்டபாணி கூறியதாவது: சிறுத்தை புலி நடமாட்டம் குறித்து க.பரமத்தி சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். சமூக வலைதளங்களில் வெளியான காயத்துடன் கூடிய ஆடு, கால் தடம் குறித்த போட்டோவை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவு வந்த பிறகே சிறுத்தையா என்பது குறித்த முடிவு தெரியவரும் என்றார்.

    • ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது.
    • இந்தியாவில் இருந்து நமீபியாவுக்கு சென்ற சிறப்பு விமானத்தில் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது.

    உலகின் அரிய வகை விலங்குகளில் சிறுத்தையும் ஒன்று. இந்தியாவை அக்பர் ஆட்சி செய்தபோது இங்கு 1000- க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த சிறுத்தை இனம் கொஞ்சம், கொஞ்சமாக அழிய தொடங்கியது.

    1948-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்த கடைசி சிறுத்தையும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு இந்தியாவில் சிறுத்தை இனமே இல்லை என கூறப்பட்டது.

    இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து நமீபியாவுக்கு சென்ற சிறப்பு விமானத்தில் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது.

    இந்த சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார். பின்னர் அந்த சிறுத்தைகளை கேமராவிலும் படம்பிடித்தார்.

    நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் மற்ற விலங்குகளை காட்டிலும் விசேஷ குணங்களை கொண்டது. இந்த சிறுத்தைகள் பறவைகள் போல ஒலி எழுப்பும். சிங்கம் போல் கர்ஜனை செய்வதில்லை. கூரிய பார்வை திறன் கொண்டது. இதன் கால்கள் மெலிந்து நீண்டு காணப்படும். குறைந்தது 72 கிலோ எடையுடையதாக இருக்கும்.

    ஒன்றரை மீட்டர் உயரம் கொண்டதாகவும், நீளமான வாலுடனும் இருக்கும். மான் மட்டுமே இதன் விருப்ப உணவாகும். அடுத்து முயல் மற்றும் பறவைகளையும் வேட்டையாடும்.

    மான்களை கண்டால் அதனை துரத்தி பிடிக்க ஓடும் வேகம் மனிதனின் ஓடும் வேகத்தை விட அதிகமாகும். அதாவது சிறுத்தை ஓட தொடங்கிய 3 வினாடிகளில் அதன் வேகம் சுமார் 97 கிலோ மீட்டராக இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 113 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இதுவே ஒரு மனிதன் ஓட தொடங்கினால் அவனது வேகம் மணிக்கு 43.99 கிலோ மீட்டர்தான்.

    சிறுத்தை பூனை இனத்தை சேர்ந்ததாகும். அதாவது காட்டு பூனையின் பரிணாம வளர்ச்சியே சிறுத்தை என்று கூறப்படுகிறது.

    ஆப்பிரிக்காவிலும், ஈரான் நாட்டிலும் இத்தகைய சிறுத்தைகள் அதிக அளவில் காணப்படுகிறது. ஆப்பிரிக்காவில் 8 ஆயிம் சிறுத்தைகளும், ஆசியாவில் 50-க்கும் கீழான சிறுத்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

    மணிமுத்தாறு கிராம பகுதிகளில் அடிக்கடி யானை, கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
    கல்லிடைக்குறிச்சி:

    மணிமுத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிங்கம்பட்டி, திருப்பதியாபுரம், பொட்டல், வேம்பையாபுரம், ஏர்மாள்புரம் ஆகிய கிராமங்களில் அடிக்கடி யானை, கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

    இதனால் அச்சத்தில் இருக்கும் இப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் விலங்குகளை விரட்ட கோரிக்கை விடுத்தனர்,

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரடி, யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து நெல் பயிர்களை சேதப்படுத்தி வந்ததுடன், வாழைகளையும் வேரோடு சாய்த்து அழித்து வந்தது.

     இந்நிலையில் தற்போது மணிமுத்தாறு  குடியிருப்பு பகுதிகளில் புகுந்த சிறுத்தை ஹரிபாபு என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயை தூக்கிச் சென்று கடித்து கொன்று விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    மேலும் இதேபோன்று மணிமுத்தாறு பழைய குடியிருப்பு பகுதியில் புகுந்த 3 கரடிகள் புதருக்குள் பதுங்கி இருந் ததை கண்ட பொது மக்கள் வனத்துறைக்கு அளித்த தகவலின் படி வந்த  வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்தும், சப்தம் எழுப்பியும் நீண்ட போராட்டத்திற்கு பின் கரடிகளை காட்டுக்குள் விரட்டினர்.

    இவ்வாறு அடிக்கடி காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து தொந்தரவு செய்து வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டியில் வன ஊழியர் உள்பட 2 பேரை தாக்கிய சிறுத்தைகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தூனேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு கூடலூர் தேவாலாவை சேர்ந்த வேல்முருகன் (வயது 38) உள்பட 6 தொழிலாளர்கள் பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் நேற்று மதியம் ஈடுபட்டனர். 

    அப்போது சிறுத்தை ஒன்று திடீரென்று அங்கு வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த சிறுத்தை வேல்முருகனை விரட்டிச்சென்று தாக்கியது. தலையில் லேசான காயம் அடைந்த வேல்முருகன் சிகிச்சைக்காக தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்த தகவலின் பேரில் வனச்சரகர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த சிறுத்தை தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளுடன் சிறுத்தை இருந்தது. இதை பார்த்து வனத்துறையினர் சிறுத்தையை விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசம் அடைந்த சிறுத்தை வனவர் திருமூர்த்தியை (35) தாக்கிவிட்டு குட்டியுடன் தப்பி சென்றது. இதில் அவருக்கு முதுகிலும், தலையிலும் லேசான காயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து வனத்துறையினர் திருமூர்த்தியை மீட்டு தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேரை சிறுத்தை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த வேல்முருகனை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ×