search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "entry"

    • பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு களில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது.
    • இந்த நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    சேலம்:

    நாட்டில் உள்ள மத்திய, மாநிலத்திற்கு உட்பட்ட 200 பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு களில் சேர க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது. இந்த நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இந்த தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான க்யூட் தேர்வை எழுத 14 லட்சம் மாணவர்கள் விண்ணப் பித்தனர். நாடு முழுவதும் 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவி கள் பங்கேற்று எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் பலர் எழுதினர்.

    17-ந்தேதி வெளியாகிறது

    இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வருகிற 17-ந்தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் ஜெக தீஷ்குமார் தெரிவித் துள்ளார்.

    மணிமுத்தாறு கிராம பகுதிகளில் அடிக்கடி யானை, கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
    கல்லிடைக்குறிச்சி:

    மணிமுத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிங்கம்பட்டி, திருப்பதியாபுரம், பொட்டல், வேம்பையாபுரம், ஏர்மாள்புரம் ஆகிய கிராமங்களில் அடிக்கடி யானை, கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

    இதனால் அச்சத்தில் இருக்கும் இப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் விலங்குகளை விரட்ட கோரிக்கை விடுத்தனர்,

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரடி, யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து நெல் பயிர்களை சேதப்படுத்தி வந்ததுடன், வாழைகளையும் வேரோடு சாய்த்து அழித்து வந்தது.

     இந்நிலையில் தற்போது மணிமுத்தாறு  குடியிருப்பு பகுதிகளில் புகுந்த சிறுத்தை ஹரிபாபு என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயை தூக்கிச் சென்று கடித்து கொன்று விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    மேலும் இதேபோன்று மணிமுத்தாறு பழைய குடியிருப்பு பகுதியில் புகுந்த 3 கரடிகள் புதருக்குள் பதுங்கி இருந் ததை கண்ட பொது மக்கள் வனத்துறைக்கு அளித்த தகவலின் படி வந்த  வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்தும், சப்தம் எழுப்பியும் நீண்ட போராட்டத்திற்கு பின் கரடிகளை காட்டுக்குள் விரட்டினர்.

    இவ்வாறு அடிக்கடி காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து தொந்தரவு செய்து வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்குவதற்கான பரிசீலனைக்கான குழுவை அமைத்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
    கொலும்பு:

    இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பரிசீலனை செய்ய இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழுவின் பரிசீலனையின் அடிப்படையில், விரைவில் இந்தியாவில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஏஜெண்டுகள், விமான நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
    ×