search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgiri collector"

    • பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.
    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்க கூடாது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.

    தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    மேலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷ்னி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னாள் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது.
    • 13-ந் தேதி பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நலப்பணியாளர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    எனவே 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்ப கடிதம் சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இதுதொடர்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்பட உள்ள பணியில் சேர்ந்து பணியாற்றுவதற்கான விருப்ப கடிதத்தையும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) யிடம் வருகிற 13 முதல் 18-ந் தேதிக்குள் வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.

    அவ்வாறு விண்ணப்பிப் பவர்கள் மட்டும் இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால் இந்த அறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    குன்னூர் அருகே மேலூர் அரசு தொடக்கப்பள்ளி, தூதுர்மட்டம் அரசு நடுநிலைப்பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி, வண்டிசோலை நடுநிலைப்பள்ளி, ஓட்டுப்பட்டரை சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விடுபட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

    முன்னதாக ஊட்டி அருகே உள்ள கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகனத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

    இதில் குன்னூர் தாசில்தார் தினேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    படுகர் இன மக்கள் ‘அட்டி’ என்று அழைக்கப்படும் கிராமங்களில் வசித்து வருகிறார்கள். படுக இன மக்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மன் உள்ளது. படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது.
     
    இதையொட்டி வருகிற 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், நீலகிரியில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    விவசாயிகள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 100 விவசாய பயனாளிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி கூறியதாவது,

    நீலகிரி மாவட்டம் இயற்கையும் பசுமையும் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். விவசாயிகளான நீங்கள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

    இயற்கை விவசாயம் செய்ய செலவு மிகவும் குறைவு. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருக்கின்றீர்கள். கூக்கல்தொரை உழவர் உற்பத்தியாளர் குழு மாவட்டத்தில் மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள மற்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் மகாத்மாகாந்தி வேலை உறுதிதிட்டத்தின்கீழ், கூக்கல்தொரை முதல் கம்பட்டி கம்மை பகுதி வரை ரூ.41 லட்சம் மதிப்பில் 700 மீ தூரம் நடைபெற்று வரும் சாலைப்பணியினையும், மகாத்மா காந்தி வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.1,95,000 மதிப்பில் கூக்கல் தொரை முதல் அரங்கிபுதூர் வரை 200மீ தூரம் சாலைப்பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    முன்னதாக, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட வேளாண் பொறியில் துறையின் சார்பில், ரூ.41 லட்சம் மதிப்பில் கோடப்பமந்து கால்வாய் தூர்வாரும் பணியினையும், கலெக்டர் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர்சிவசுப்ரமணிய சாம்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர்மீராபாய், தோட்டக்கலைத்துறை அலுவலர்சந்திரன், விவசாய பெருங்குடிமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் கேத்தி, ஜெகதளா பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட ராஜ்குமார் நகர் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில் 20162017 ஆம் நிதியாண்டின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, எல்லநள்ளி பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வடிகால் கால்வாயிணை சீர் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

    நேர்கொம்பை ஆதி திராவிடர் காலனி பகுதிகளில் 20162017 ஆம் நிதியாண்டில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணிகளை துவங்காத பயனாளிகளை சந்தித்து அவர்களிடம் பணிகளை துவங்குமாறும், அரசு நிதியை பயன்படுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தி, அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலைவசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, குடிநீர்வசதிகள் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2017-2018 ஆம் நிதியாண்டின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டு பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் 2018-2019-ம் நிதியாண்டின் கீழ் திருவள்ளுவர் நகர் பகுதியில் கடப்பாலம் முதல் தேனலை வரை சாலை பணியினையும் பார்வையிட்டு, பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்குமாறு அறிவுறுத்தினார்.

    சாலமூர் பகுதியில் சமுதாய கழிப்பிடம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும், சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் தொட்டண்ணி கிராம பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டு பணியினையும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேத்தி பாலாடாவில் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை கண்டறிந்து அங்குள்ள அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தார்.

    மேலும் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தெரு விளக்கு, மின்சார வசதி, சாலை வசதி ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் வசதிக்காக உடனடியாக நீர்தேக்க தொட்டி களில் நீர் நிரப்பி அதன் மூலம் தவறாமல் குடிநீர் கிடைக்க வசதி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் தெரேமியா கிடங்கு பகுதியில் உள்ள கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தடை செய்யப்பட்ட பொருட் களான பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்து வது கண்டறி யப்பட்டு உடனடியாக அபராதம் விதிக்கப்பட் டது. மேலும் அங்குள்ள கடைக்காரர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்த கூடாது, மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) குணசீலன், கேத்தி பேரூராட்சி உதவி பொறியாளர் பெருமாள்சாமி, சுகாதார ஆய்வாளர்கருணாநிதி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், குடிநீர்வசதி, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவும், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மருத்துவக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டியில் வன ஊழியர் உள்பட 2 பேரை தாக்கிய சிறுத்தைகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தூனேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு கூடலூர் தேவாலாவை சேர்ந்த வேல்முருகன் (வயது 38) உள்பட 6 தொழிலாளர்கள் பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் நேற்று மதியம் ஈடுபட்டனர். 

    அப்போது சிறுத்தை ஒன்று திடீரென்று அங்கு வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த சிறுத்தை வேல்முருகனை விரட்டிச்சென்று தாக்கியது. தலையில் லேசான காயம் அடைந்த வேல்முருகன் சிகிச்சைக்காக தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்த தகவலின் பேரில் வனச்சரகர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த சிறுத்தை தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளுடன் சிறுத்தை இருந்தது. இதை பார்த்து வனத்துறையினர் சிறுத்தையை விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசம் அடைந்த சிறுத்தை வனவர் திருமூர்த்தியை (35) தாக்கிவிட்டு குட்டியுடன் தப்பி சென்றது. இதில் அவருக்கு முதுகிலும், தலையிலும் லேசான காயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து வனத்துறையினர் திருமூர்த்தியை மீட்டு தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேரை சிறுத்தை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த வேல்முருகனை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தங்கினார். கூட்டத்தில் குடும்ப அட்டை, மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    கூட்டத்தில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கால் கிராமத்தை சேர்ந்த ஆனந்தபிரபு, கூடலூர் காசிம் வயல் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கலெக் டரின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைக்க தலா ஒரு பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ஆக மொத்தம் ரூ. 40 ஆயிரத்திற்கான காசோலையினையும், பந்தலூர் வட்டம் நெல்லியாளம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மனைவி புஷ்பவள்ளிக்கு மருத்துவ செலவுக்காக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

    கோவையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனால் 2017-2018-ம் ஆண்டிற்கான நமது மாவட்டத்தில் கூடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவாலா நடுநிலைப்பள்ளி, குன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிகரட்டி தொடக்க பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பள்ளி வளர்ச்சிக்காக தலா ஒரு பள்ளிக்கு ரூ.1 லட்சம்

    வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதை தலைமை ஆசிரியர்கள் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றனர்.

    கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்ட) முருகன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேலு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புகுழுவினர் தயாராக இருக்க வேண்டும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்வது வழக்கம். இந்த மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    மழையால் சாலைகளில் மண்சரிவு ஏற்படுவதுடன், மரங்களும் சாய்ந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஊட்டியில் நடைபெற்றது. இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதா பிரியா, பேரிடர் இன்னல் பாதுகாப்பு பிரிவு தாசில்தார் ராம்குமார், மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், மருத்துவ துணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார், ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள புயல் நிவாரண மையங்களை மின் இணைப்புடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகள் தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும்.

    தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள், மருத்துவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பெற வேண்டும்.

    நெடுஞ்சாலை, நகராட்சி பகுதிகளில் சாலைகளில் ஏற்படும் மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் பொக்லைன் எந்திரம் மற்றும் பணியாட்களை தயார்படுத்தி வைக்க வேண்டும்.

    தீயணைப்புத்துறை அதிகாரிகள் மரம் அறுக்கும் மின்வாள் உள்ளிட்ட உபகரணங்கள் செயல்படுகிறதா என்பதை சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 233 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கு உள்வட்ட வாரியாக ஏற்கனவே 13 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தற்போது தமிழ்நாடு அரசு சுற்றறிக்கையின் படி, ஒவ்வொரு குழுவிற்கும் அதிகபட்சமாக 5 முதல் 7 வரையிலான அபாயகரமான பகுதிகள் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 22 குழுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 35 குழுக்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்து விதமான பேரிடர்களிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ஒரு குழுவில் 7 பேர் இருப்பார்கள். அருகில் உள்ள போலீஸ் நிலையங்களின் தொலைபேசி எண்கள் சம்பந்தப்பட்ட குழு அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சீருடையுடன் கூடிய பிளேசர் வழங்கி குழந்தைகளுடன் கலந்துரையாடி கூறியதாவது,

    குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தோடும், கனவோடும் வாழ வேண்டும். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியமும் கனவும் இருக்கும். அந்த லட்சியத்தை அடைய வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும்.

    படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் எடுப்பது மட்டுமல்லாமல் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மென் மேலும் உயர்கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்து, உங்கள் கனவை நிறைவேற்றி வாழ்வில் முன்னேற முடியும்.

    உங்களுக்கு பள்ளி பருவத்திலும் சரி எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையில் சிரமங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நாம் நினைத்ததை அடைய வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

    காலம் மாறிக்கொண்டே போகின்றது எனவே காலத்திற்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் மாற்றி கொண்டு உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    மேலும் 165 குழந்தைகளுக்கு சீருடையுடன் கூடிய பிளேசர் உடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மேல் அக்ரஹாரம் பகுதியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைமன்னன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    ஊட்டி:

    கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜூணன், கோபால கிருஷ்ணன், குன்னூர் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியில் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை ஆகிய நிறத்தால் ஆன 30 ஆயிரம் ரோஜாக்களால் பிரமாண்ட இந்தியா கேட் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது தவிர ஜல்லிக்கட்டுக்காளை, மயில்,மாம்பலம், சோட்டா பீம், ரங்கோலி ஆகிய மலர் அலங்காரம் சிறப்பாக இருந்தது. தோட்டக் கலைத் துறை சார்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ரோஜா கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    கண்காட்சியில் 40 ஆயிரம் மலர்ச்செடிகளில் பூத்துக்குலுங்கும் மினியச்சர், இருவண்ண மலர்கள் ஆகியவை மெய்மறக்க செய்தது. சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நாளை மாலை (ஞாயிற்றுக்கிழமை) சிறந்த அரங்கம், சிறந்த பூங்கா ஆகியவைகளுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் ரோஜா கண்காட்சியை காண மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் சமவெளிப்பகுதி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். ரோஜா கண்காட்சியையொட்டி ஊட்டி நகரம் களை கட்டியது.

    ×