search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natural agriculture"

    • வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் பஞ்சாயத்து தலைவர்களை வரவேற்று இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறினார்.
    • காணொலிக்காட்சி வாயிலாக 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நெல்லை:

    'இயற்கை வேளாண்மை' குறித்த இணைய வழி பயிற்சி முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும் காணொலிக்காட்சி வாயிலாக வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவர் பயிற்சி நிலையம் மூலம் நடைபெற்றது.

    இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டம் இயற்கை வேளாண்மையில் முன்னோடி மாவட்டமாக இருப்பதையும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ள திட்டங்களையும் குறிப்பிட்டு சிறப்புரை ஆற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் பஞ்சாயத்து தலைவர்களை வரவேற்று இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார்.

    உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் டேவிட்டென்னிசன் இயற்கை வேளாண்மையின் நெறிமுறைகள், மண்ணின் உயிரோட்டத்தன்மை மற்றும் இயற்கை விவசாய கோட்பாடுகள் குறித்து விளக்கினார். ஊர்மேலழகியான் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுகுமார் இயற்கை வேளாண்மையில் உழவியல் முறைகள், பயிர் சுழற்சி மற்றும் பயிர் சத்துக்கள் மேலாண்மை குறித்தும் 'பஞ்சகாவ்யா' "ஜிவாமிர்த கரைசல்கள்" தயாரிப்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

    அதையடுத்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மைய பேராசிரியர் சுகந்தி இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாக முறைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் இயற்கை வேளாண்மையை கடந்த 10 வருடங்களாக மேற்கொண்டு வரும் 'மகேந்திரகிரி பாரம்பரிய விவசாயிகள் சங்கத் தலைவர்" மகேஸ்வரன் இயற்கை வேளாண்ைமயை தான் செய்து வருவதால் பெற்ற நன்மைகளை பகிர்ந்து கொண்டார்.

    நெல்லை மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் காணொலிக்காட்சி வாயிலாக இணைந்து நூற்றுக்கு அதிகமானோர் பயனடைந்தனர். வேளாண்மை அலுவலர் ஞானதீபா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

    விவசாயிகள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 100 விவசாய பயனாளிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி கூறியதாவது,

    நீலகிரி மாவட்டம் இயற்கையும் பசுமையும் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். விவசாயிகளான நீங்கள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

    இயற்கை விவசாயம் செய்ய செலவு மிகவும் குறைவு. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருக்கின்றீர்கள். கூக்கல்தொரை உழவர் உற்பத்தியாளர் குழு மாவட்டத்தில் மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள மற்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் மகாத்மாகாந்தி வேலை உறுதிதிட்டத்தின்கீழ், கூக்கல்தொரை முதல் கம்பட்டி கம்மை பகுதி வரை ரூ.41 லட்சம் மதிப்பில் 700 மீ தூரம் நடைபெற்று வரும் சாலைப்பணியினையும், மகாத்மா காந்தி வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.1,95,000 மதிப்பில் கூக்கல் தொரை முதல் அரங்கிபுதூர் வரை 200மீ தூரம் சாலைப்பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    முன்னதாக, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட வேளாண் பொறியில் துறையின் சார்பில், ரூ.41 லட்சம் மதிப்பில் கோடப்பமந்து கால்வாய் தூர்வாரும் பணியினையும், கலெக்டர் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர்சிவசுப்ரமணிய சாம்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர்மீராபாய், தோட்டக்கலைத்துறை அலுவலர்சந்திரன், விவசாய பெருங்குடிமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா கூறியுள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கெங்கரை ஊராட்சி மெட்டுக்கல்லில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 116 விவசாய பயனாளிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி கூறியதாவது,

    நீலகிரி மாவட்டம் இயற்கையும் பசுமையும் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். விவசாயிகளான நீங்கள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய செலவு மிகவும் குறைவு. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருக்கின்றீர்கள். எனவே அனைவரும் இயற்கை விவசாயம் செய்து பயனடைய வேண்டுமெனவும், வருங்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

    ஆகவே நீங்கள் உங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்கள் ஒரு நல்ல நிலையை அடைந்து உங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தேனீ வளர்ப்பிற்காக 200 தேன் பெட்டிகளை செய்து கொடுத்தநிறுவனத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.2,26,750 காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பணி குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் குன்னூர் சாந்திராமு எம்.எல்.ஏ., தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியசாம்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர் மீராபாய், தோட்டக்கலைத்துறை அலுவலர் சந்திரன் கோத்தகிரி வட்டாட்சியர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்ஜனார்த்தனன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×