வால்பாறையில் ஊருக்குள் புகுந்த 2 சிறுத்தைகள்- கண்காணிப்பு கேமராவில் பதிவு

Leopard movement is currently increasing in residential areas, குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின.
வால்பாறையில் ரோட்டில் சர்வசாதாரணமாக நடந்து சென்ற 2 சிறுத்தைகள்.
வால்பாறையில் ரோட்டில் சர்வசாதாரணமாக நடந்து சென்ற 2 சிறுத்தைகள்.
Published on

வால்பாறை:

வால்பாறை பகுதியில் பொதுவாக பனிக்காலம் தொடங்கும் நிலையில் அங்கு சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் சிறுத்தைகள் அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி தின்றுவிட்டு தப்பி செல்வது வழக்கம்.

வால்பாறை கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், அண்ணா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள் தேயிலைத்தோட்டத்தில் இருந்து குடியிருப்புக்குள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தன. தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின. பின்னர் அவை மீண்டும் குடியிருப்பில் இருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.

இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com