என் மலர்
நீங்கள் தேடியது "கோழிக்கோடு விமான நிலையம்"
- பாங்காக் மற்றும் அபுதாபி வழியாக வந்த அந்த பயணி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- விமான நிலையம் அருகே பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் விமான நிலையத்தை படம் எடுக்க வந்ததாகவும், ஒருவரை வரவேற்க வந்ததாகவும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் அவர்கள், அபுதாபியில் இருந்து வந்த விமான பயணி ஒருவர் கொண்டு வந்த கஞ்சாவை பெற்றுச் செல்ல வந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விமான பயணி யார்? என போலீசார் விசாரணையில் இறங்கினர். ஆனால் குறிப்பிட்ட அந்த பயணி அதற்குள் காரில் தப்பித்துச் சென்று விட்டார். கண்காணிப்பு காமிரா மூலம் அவர் தப்பித்துச் சென்ற வாகனத்தை போலீசார் மடக்கினர்.
ஆனால் காரில் அந்த நபர் இல்லை. அதேநேரம் அவரது உடமைகள் இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது 18 கிலோ கலப்பின கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.9 கோடி ஆகும். பாங்காக் மற்றும் அபுதாபி வழியாக வந்த அந்த பயணி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக விமான நிலையம் அருகே பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் கண்ணூர் ரிகில் (வயது 35), தலச்சேரி ரோஷன் ஆர்.பாபு என தெரியவந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வந்தன.
தங்க கடத்தலை தடுக்க கேரள விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு ஒரு விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் ஒரு ஆண் மற்றும் பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பயணிகள் இருவரையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் பெண் பயணியின் கொண்டையை அவிழ்த்து பார்த்த போது அதில் 556 கிராம் தங்க கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதுபோல வாலிபர் அணிந்திருந்த ஷூவின் சாக்சுக்குள் 105 கிராம் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்ததாக காசர்கோட்டை சேர்ந்த ஜமீலா (வயது 36), கோழிக்கோட்டை சேர்ந்த பைசல் (22) ஆகியோரை கைது செய்தனர். இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






