search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Networking"

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
    • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ஷெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நடந்து சென்ற 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது.

    இதேபோல் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. தற்போது மலை பாதை அருகே சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.

    இதனால் பக்தர்கள் அச்சத்துடன் நடை பாதையில் நடந்து செல்கின்றனர். எனவே நடைபாதை முழுவதும் இரும்பு வேலி அமைக்க திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவித்தனர்.

    • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
    • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    ராமாபுரம், பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் உறவுக்காரரான பாண்டியன் என்பவருக்கும் (சிறுமியின் தாயின் தம்பி) கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்ட சிறுமி தன்னை கட்டாயபடுத்தி உறவுக்காரருடன் திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய் மற்றும் அவரது தம்பியான பாண்டியன் மீது வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் சிறுமி ஏற்கனவே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனை தேடி சத்தியமங்கலத்துக்கு சென்ற சிறுமியை அவரது தாய் மீட்டு வந்துள்ளார் இதற்கிடையில் சிறுமி தனது தாயின் சகோதரரான பாண்டி யனை காதலிப்பதாகவும், அவருடன் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் வேறு வழியின்றி மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த சிறுமியின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகாராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு தனது திருமணம் குறித்து புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது தாய் மற்றும் திருமணம் செய்த பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
    • உறவினர்கள் கேள்வி எழுப்பி தனியார் ஆஸ்பத்திரி முன்பு கோஷம் போட்டனர்.

    புதுச்சேரி:

    மயிலாடுதுறை மாவட்டம் வளத்தா ன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.(வயது65) இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் மயிலாடுதுறை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து அவருக்கு மயிலாடுதுறை தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்த நிலையில், திடீரென அவருக்கு நாடி துடிப்பு இருக்கிறது என்று கூறி, உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் அவசரகதியில் மேல் சிகிச்சைக்காக காரை க்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இதனை அடுத்து காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட ராஜேந்திரன் குறித்து, 2 நாட்களாக காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. ரமணா சினிமா பாணியில் இறந்து விட்ட தாக கூறியவருக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பி தனியார் ஆஸ்பத்திரி முன்பு கோஷம் போட்டனர். இதனால் இப்பிரச்சினை சமூக வலைதளங்களில் வைரலாகியது.இதனை அடுத்து, தனியார் ஆஸ்பத்திரி ராஜேந்திரனை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தனர். தனியார் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரன் இதுவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் உறவினர்கள் திக்கு முக்காடி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்கா லில் உள்ள சமூக வலைதள ங்களில்வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • புகார் மையத்தை பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்தி தங்கள் பகுதியில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பொதுமக்களின் தேவை வலைதள புகார் மையத்தை தொடங்கியுள்ளார்.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழக்கூடிய சட்டவிரோதமான செயல்கள் பற்றிய தகவல்களை, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சமூக வலைதள வதந்திகள் உள்ளிட்ட வைகளை பற்றி காவல்துறை சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சமூக வலைதள முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் எண் 7358154100 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.

    இந்த புகார் மையத்தை பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்தி தங்கள் பகுதியில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    இதில் புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் சமூக வலைதள கணக்கு மற்றும் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை வழங்கியுள்ளார்.

    பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும்.
    21 -ம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது வேதனை. இன்றைய காலக்கட்டத்தில் அவர்களை பாதுகாக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அறியாமையாலும், அச்சத்தாலும் அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    பெண்களுக்கு அநீதிகளும், கொடுமைகளும், எல்லா தரப்பிலும், எல்லா வயதினருக்கும் பாகுபாடின்றி சரளமாக இழைக்கப்படுகிறது. கருவிலே அழிப்பது, சிசுக்கொலை என தொடங்கி வாழ்நாள் இறுதிவரை கொடுமைகள்தொடர் கதையாக தொடர்கிறது.

    பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைப்பார்க்குமிடம், வழிப்பாட்டு தலங்கள், பஸ், ரெயில், என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இதைத்தவிர ஆணவ கொலைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பெண்கள், மனிதர்களாக, அவர்களுக்கும், அறிவு, ஆற்றல் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாது ஆண் சமூகம் அவர்களை இன்பம் துய்க்கும் பொருளாக மட்டுமே பார்ப்பது கொடுமையிலும் கொடுமை. குடும்ப சூழலை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட முடியாத நிலை தானே நிலவுகிறது.

    தாய் தந்தையர் கடும் சொற்களால் கண்டிப்பது, காயம் ஏற்படும்படி அடிப்பது, மன உளைச்சல் ஏற்படும்படி தண்டிப்பது என்று பல விதமான கொடுமைகளை சிறுவயதில் இருந்தே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பத்து வயதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது வகுப்பில் முதல் இடம் பெறவில்லை என்று அறையில் பூட்டிவைக்கப்பட்ட மாணவி, விலை உயர்ந்த பேனாவை தொலைத்து விட்டாள் என்பதற்காக வீட்டிற்கு வெளியே பல மணிநேரம் நிற்க வைக்கப்பட்ட சிறுமி என்பன போன்ற நிகழ்வுகளை அன்றாடம் நாம் காண்கிறோம்.

    பெண்கள் என்றால் கண்ணுக்கு அழகாக, லட்சணமாக இருக்கவேண்டும் என்கிற மூடக்கருத்து பல பெண்களின் வாழ்கையை சீரழிக்கிறது. கருப்பாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய் என்று விமர்சித்து அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாக்குதல் ஒருபுறம் என்றால்,.மறு புறம் உனக்கு பாடத் தெரியுமா ஆடத் தெரியுமா என்று கேட்டு அவர்களை கடையில் விற்கும் பொருள்கள் போல பார்க்கப்படுகிறது.

    சின்னஞ்சிறு சிறுமியர்களை பலநாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு கொள்ளும் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யும் இடங்களில் உடன் பணியாற்றும் ஊழியர்கள், மேலதிகாரிகள் என பாலியல் தொடர்பான சித்திரவதைகள் தொடர்கின்றன. குழுக்களாக ஆண்கள், பெண்கள் கூடியிருக்கும்போது பாலியல் தொடர்பான நகைச்சுவைகள், சீண்டல்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன. தன் இச்சைக்கு இணங்காத பெண்ணின் மீது அமிலம் வீசி தாக்குதல், ஊர்திகளை கொண்டு ஏற்றி கொல்லுதல், பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொலைசெய்தல் என்ற பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

    திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை, ஓயாத வீட்டு வேலைகள், மனைவியின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் உடலுறவுகள், கட்டாய கருச்சிதைவுகள் என தொடரும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.. இத்தகைய சூழலில், பெண்களுக்கு சட்டம் அளிக்கும் பாதுகாப்புகள் என்ன என்பதை அறிவோம்.

    பெண்கள் பாதுகாப்பு சட்ட விதிகள் 2005-ன் படி, குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் இரண்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள், 2018-ல், சுமார் 2,785 சச்சரவுகளை நீதிமன்றம் செல்லாமலேயே தீர்த்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு 5 பெண்களில், இரண்டு பெண்கள், கணவர்களால், வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1983-ல் இந்திய தண்டனை சட்டம் 498-ன் பிரிவின்படி கிரிமினல் குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் புகார்கள் கொடுக்க எல்லா பெண்களும் முன்வருவதில்லை. நிதி நிலைமை, குழந்தைகளின் எதிர்காலம், சமூகப் பார்வை போன்றவை புகார் அளிக்கத் தடைகளாக உள்ளன.

    வரதட்சணை தொல்லையால் பெண்களை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடியது. வரதட்சணை தடுப்பு சட்டம் பெருமளவில் இத்தகைய குற்றங்களை குறைத்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக, பெண்கள் தைரியமாக காவல்நிலையத்துக்கு தாங்களாவே சென்று முறையிட வாய்ப்பு அதிகரித்தது. இருந்தாலும், பல இடங்களில், விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், வன்கொடுமைகள் திரைமறைவில் அரங்கேறி வருகின்றன.

    வரதட்சணை தடுப்பு சட்டம் (1961), பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (2013), கடத்தல் தடுப்பு சட்டம் (1986), சதி தடுப்பு சட்டம் (1987), பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் (தடுப்பு) சட்டம் (1986), குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் (2005), என்று பெண்களுக்காக சட்டங்கள் உள்ளன. இது தவிர, இந்தியக் குற்றவியல் சட்டமும் (திருத்தப்பட்டது 2013) பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்து திருமண சட்டத்தின்படி, கணவனால் இழைக்கப்படும் கொடுமையில் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் பெற சட்டத்தில் வழியுள்ளன. பரஸ்பர உடன்பாட்டின்படி விவாகரத்து பெற வழிவகுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கிடைக்க சட்டங்கள் வழிவகுக்கின்றன.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிப்பார்கள். மீண்டும் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு தக்க ஆலோசனை கூறுவர். ஒருவேளை, இம்முயற்சி கைக்கூடவில்லை யென்றால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முழுமையாக விசாரணை செய்து தக்க ஆலோசனைகள் வழங்குவார். இந்த முயற்சியிலும் வெற்றிப்பெற முடியவில்லையெனில் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்களையும், வன்முறைகளையும் முதலில் மற்றவர்களுடன் பேசவேண்டும். அலுவலகமாக இருந்தால் சக பெண் ஊழியர்களிடம் பேச வேண்டும். அவர்கள் அறியும்படி செய்யவேண்டும். தனியாக போராடுவதைவிட குழுவாக இணைந்து எதிர்கொள்ளும்போது பலன்கள் கூடுதலாக கிடைக்கும். மேலும், பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளை வளர்க்கும்போது அவர்களை பொறுப்புள்ளவர்களாகவும், பெண்களை மதிக்கக்கூடிய தன்மையுடனும் உருவாக்கவேண்டும்.

    தாட்சாயணி, ஐகோர்ட்டு வக்கீல், சென்னை.
    இச்சமூகம் பெண்ணின் உடல் முழுமைக்கும் மானத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் தம் மானம் காக்கவேண்டி நிரந்தரமான மன அழுத்தத்துடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
    கற்பிழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த பெண் எழுப்பும் ஓலம் மரணத்தின் ஓலத்தை விட கொடியது. பொள்ளாச்சியில் எழுந்த அந்த ஓலம் என் செவிகளை அடைந்த போதும், ஒளி அலைகளாக என் கண்களை அடைந்தபோதும் என் ரத்தம் கொதித்தது. அப்பெண்களுக்கு ஓடிப்போய் உதவ என்னால் இயலவில்லையே என்ற நிலை எனக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

    முகநூல் எனும் பெரும்பாலோர் படிக்கும் சமூக வலைதளத்தை நாம் எவ்வாறு, எதற்காக, ஏன் உபயோகிக்க வேண்டும் என்று காவல் துறையும் சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் உரைத்த வண்ணம் உள்ளனர். ஏன் பெண்களே அவற்றை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?

    “நெறி தவறினால் மானம் போம்” என்பது அறம். ஆனால் இச்சமூகம் பெண்ணின் உடல் முழுமைக்கும் மானத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் தம் மானம் காக்கவேண்டி நிரந்தரமான மன அழுத்தத்துடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். பிறந்த நொடி முதல் இடுகாட்டில் அழியும் வரை அவளது மானம் அவளுடைய உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளது. ஆகவே தான் பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் பொதுவெளிக்கு வந்தால் அது குற்றமாகிறது.

    என்னதான் புராணங்களும், அறங்களும் ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லியிருந்தாலும் கூட பெண்களின் பாதுகாப்புக்காக சட்டங்கள் பல உருவாகி ஆண்களின் வக்கிரத்தை அடக்கி வைத்துள்ளது. இருப்பினும் காமக்கொடூரர்கள் உலகு முழுவதும் பரந்து கிடக்கின்றனர். அரேபிய நாடுகள் மற்றும் வடகொரியா நாடுகளில் உள்ள நீதி மேலாண்மை இங்கும் இருந்தால் பொள்ளாச்சியின் இக்கயவர்களுடைய சமாதிகள் மீது மரங்கள் முளைத்திருக்கும்.

    குற்றம் நடந்த மூன்று நான்கு நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணே கூட தன்னை சிதைத்தவர்களை சுட்டுக்கொல்ல வாய்ப்பினைப் பெற்றிருப்பர். நமது நாட்டிலோ எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அதற்குள் பாதிக்கப்பட்ட பெண்களின் துயரங்கள் கூடிக்கொண்டே போகும். எனவே தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே உணரவேண்டியுள்ளது.

    அறிவியல் அசுர வளர்ச்சியின் விளைவாக உருப்பெற்றுள்ள இச்சமூக வலைதளங்கள் நிறைய நன்மைகள் செய்தாலும் பொள்ளாச்சி வழக்கு போன்ற நிகழ்வுகள் பேரிடர் துயரங்களை ஏற்படுத்துகின்றது. இது போன்ற சைபர் குற்றங்கள் நமக்கு ஏற்படும் போது அதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுப்பதே நாம் தான் என்பதை நாம் உணரவேண்டும். எப்படிப்பட்ட தகவலை எந்த அளவுக்கு யாருடன் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நாமே தான் தீர்மானிக்க வேண்டும்.

    நம்மோடு தொடர்பு கொண்டிருப்பது ஆணா, பெண்ணா, என்று கூட தெரியாத நிலையில் நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் நாம் அளித்து விடுவதால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம். வழக்கமான குற்றங்களில் யார் எப்போது எங்கே செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் சைபர் குற்றங்களை நமக்கு தெரிந்தவர்களே வேறுமுகமூடியுடன் நமக்கு அருகில் இருப்பதாக சொல்லிக்கொண்டு, வெகு தொலைவில் இருந்து நமக்கே துரோகம் செய்வது தான் வேதனை. பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் இந்த நொடியில் கூட வேறெங்காவது நடந்து கொண்டுதான் இருக்கும்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் சோர்ந்து முடங்கிவிடக்கூடாது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். வலுவாக காலூன்றி போராட வேண்டிய தருணம் இது. தமிழகமே உங்களின் பக்கம் நிற்கிறது. நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று ஒரு வரி சொன்னால் சோர்ந்துபோன உங்களின் உறவினரும், நண்பர்களும் உங்களுக்காக உதவ முன் வருவார்கள். பொது மக்களும், சட்டமும் இந்த நிலையில் உங்களுக்கு நிச்சயம் துணை நிற்பர்.

    உங்கள் துயரம் இச்சமூகத்தின் துயரம், மரியாதை, கவுரவம், ஏழ்மை, கற்பு, எதிர்காலம் என்றெல்லாம் உங்கள் முன் நிற்கும் தடைகளை உடைத்தெறிந்து விட்டு புறப்படுங்கள். உங்கள் உதவியின்றி சி.பி.சி.ஐ.டியோ, சி.பி.ஐயோ வெற்றிக்கரமான எந்த விசாரணை வியூகங்களையும் அமைக்க இயலாது. உங்களின் பாதுகாப்பு அரணாக உள்ள சட்டங்களை உபயோகியுங்கள். மீறியவர்களை எதிர்த்துப் போராடுங்கள். நீதி கிடைக்கும் வரை ஓயக்கூடாது. காவல் துறையில் இதுபோன்ற நிகழ்வுகளை கடமையோடும், உணர்வுபூர்வமாகவும் கையாளும் அதிகாரிகள் நிறையவே உள்ளனர்.

    புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை பாதுகாப்பு மற்றும் அவரது எதிர்காலம் கருதி பொது வெளியில் வெளியிடக்கூடாது என்பது சட்டமாக உள்ளது. இருப்பினும் இன்று பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் பொது வெளிக்கு வந்து விட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்புள்ளது. பகிரங்கமாக வெளியிட்டு இருந்தால் அது காவல் துறையாகவே இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

    நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது. ஆனால் இன்று வரை ஒரேயொரு பெண்ணைத் தவிர யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் இல்லாத நிலையில் காவல்துறையினர் என்ன செய்ய முடியும்?. வீடியோ ஆதாரங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று புகார் பெற்று எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவரை போலீசார் தொடர்பு கொண்ட மாத்திரத்திலேயே அவர்கள் தம் மன உளைச்சலின் விளிம்புக்கே சென்று தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிய நிகழ்வுகள் நிறைய உண்டு. தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. குடும்பத்தார்களும் ஒத்துழைப்பு தர மறுத்து விடுவது உண்டு.

    பாதிக்கப்பட்டவர்கள் பெயர் மற்றும் குடும்ப விவரங்கள் வெளியே வராத வண்ணம் விசாரிக்கும் கடமை காவல் துறையினருக்கும், நீதிமன்றத்திற்கும் உண்டு. அதனை உறுதி செய்தால் மட்டுமே இது போன்ற வழக்குகளில் சிறப்பான விசாரணையும், தண்டனையும் எதிர்பார்க்க இயலும். அதே நேரத்தில் பத்திரிகைகளும், ஊடகங்களும் காவல் துறையை விட வேகமாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

    எத்தனைதான் தவிர்த்தாலும் ஊடகங்கள் பாதிக்கப்பட்டவருடன் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து நிழற்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வெளியிடுகின்றனர். சட்டத்திற்கு பயந்து முகத்தை மட்டும் மறைத்து வெளியிடுகின்றனர். இதனால் அச்சம் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணோ அவரது குடும்பத்தாரோ நிச்சயம் காவல் துறைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஊடகங்கள் தம் பொறுப்பை உணர வேண்டும். அதே சமயம் அரசின் விசாரணையில் நடக்கும் தவறுகளை புகார்தாரர் பாதிக்கப்படாத வகையில் பொது வெளிக்கு கொண்டுவர பத்திரிக்கைக்கும், ஊடகத்திற்கும் உரிமை உண்டு.

    மு.அசோக்குமார்,
    போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு)
    வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்
    முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் சிக்கிதான் அப்பெண்கள் சீரழிந்து உள்ளனர். இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை தவிர்த்து விடலாமா என்றால் அதற்கு சரியென சொல்ல மாட்டேன். பரிணாம வளர்ச்சியை, அறிவியல் வளர்ச்சியை தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது.

    ஆரம்ப காலத்தில் மனிதன் காடுகளில் வசித்தான். பின்னர் வீடு கட்டி குடிபுகுந்தான். இப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஆகிவிட்டது. அதனால் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த மனிதர்கள் இன்று தனிக்குடித்தனமாக மாறி தீவாகி விட்டார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் கூட யார் என்று தெரியவில்லை. அடுத்த வீடு இன்னொரு பூமியாகி விட்டது.

    ஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளை பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான். காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா? அதுபோன்றுதான் இன்றைய காலத்திற்கேற்ப வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    எந்த ஒரு விசயத்திலும் நன்மையும் இருக்கும். தீமையும் இருக்கும். உடல் நலத்துக்கு டாக்டர்கள் கொடுக்கும் மாத்திரையைக்கூட பக்கவிளைவுகள் உண்டு. பேஸ்புக்கில் இருக்காதா என்ன? எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் இருந்தால் போதும் பிரச்சினை ஏற்படாது. இதற்கு கற்றுக்கொடுத்தல்தான் முக்கியம்.
    பள்ளியில் இருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டுக்கு பயிற்சி இருப்பது போல், பொது அறிவுக்கு பாடம் நடத்துவது போல் வாழ் வியல் பற்றிய மனவளக்கலை பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க் கையில் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்க அவர்களுக்கு மனதிடம் உண்டாகும்.

    ஜெர்மனி கார்கள்தான் பேமஸ். அங்குள்ள சாலைகளும் உலத்தரமானவை. போக்குவரத்து குற்றங்களுக்கு அதிகப்படியான அபராதமோ தண்டனையோ விதிக்கும் சட்ட திட்டம் கிடையாது. அப்படி இருந்தும் உலகிலேயே அங்குதான் விபத்துக்கள் குறைவு. காரணம் எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நன்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் வாழ்க்கை முறை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கற்பித்து வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

    ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை பெற்று விட்டால் பிரச்சினை ஏற்படும் சமயங்களில் அவர்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே சிக்கல்களில் இருந்து காப்பாற்றி கொள்ளும் திறனை அளிக்கும்.

    பொதுவாக மூன்று விசயங்களில் ஈர்ப்பு இருக்கும். ஒன்று ஆண்&பெண் கவர்ச்சி. இரண்டாவது புகழ். புகழுக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மூன்றாவது அன்பு. அன்புக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இந்த மூன்றும் கவர்ந்து இழுப்பவை. அதனால் இந்த மூன்றும் கிடைக்கும் இடம் நோக்கி அனைவரும் செல்கிறார்கள்.

    இன்றைய இளைஞர்களுக்கு சமூகவலை தளங்கள் மூலம் இந்த மூன்றும் கிடைக்கிறது. அதாவது அவர்கள் போடும் ஸ்டேடஸ், டிக்டாக் செயலில் ஆடல் பாடல் மூலம் பிரபலம் என்ற புகழ் கிடைக்கிறது. அதன் மூலம் ஆண்&பெண்களிடையே நட்பு ஏற்பட்டு கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். அடுத்து தொடர்ந்து காட்டும் அன்பில் அவர்கள் மயங்கி விழுகிறார்கள். அதன் பின்னரே இது போன்ற வக்கிரமான குற்றச் செயல்கள் நடக்கின்றன.

    சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் இவையாவும் உண்மையானவை அல்ல. ஒருவருக்கு ஐந்தாயிரம் பேர் எப்படி நண்பனாக, தோழியாக இருக்க முடியும்? அந்த உறவுகளில் போலியானவையும் இருக்கலாம். எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி விடுவதால் தான் பிரச்சினையே. வீடு வேறு, வெளிஉலகம் வேறு. வீட்டில் சில குறைகள் இருக்கலாம். வெளியே இருக்கும் பூங்கா பார்க்க பசுமையாக அழகாகத்தான் இருக்கும். அது உங்கள் வாழ்விடம் ஆகாது. அதுபோல் நம் வீட்டு உறவுகள் போல் வெளி தொடர்பு உறவுகள் இருக்காது. அதை உண்மை என்று மயங்காதீர்கள். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை உணர்ந்து கொண்டால் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    சினிமாவில் நடிக்கும் நடிகர் அந்த கதையுடன் எப்படி தொடர்பு இல்லாமல் இருக்கிறாரோ அது போன்றதுதான் இதுவும். ஆனால் பெண்கள் முகநூலில் காட்டும் அன்பை உண்மை என்று நம்பி படுகுழியில் விழுந்து விடுகிறார்கள்.

    எனவே முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

    பொதுவாக நேர்மறையான விசயங்க ளைவிட எதிர்மறையான விசயங்களே மக்கள் மனதில் அதிக ஈர்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதாவது 1:16 என்ற விகிதத்தில் உள்ளது. 16 நல்ல விசயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கெட்ட விசயம் செய்து விடும். அதனால்தான் குழந்தைகள் எதிர்மறையான செயல்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் நல்லவற்றையே பேச வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். சூழலை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்புடன் இருந்தால் அது பெற்றோர்&குழந்தைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும். அதில் தான் ஆபத்து உண்டாகிறது. பயத்தின் காரணமாக குழந்தைகள் தங்கள் பிரச்சினையை சொல்ல மாட்டார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபர்களைத்தேடி செல்வார்கள். இப்படியாகத்தான் கயவர்கள் காட்டும் போலியான அன்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.

    சமூகவலை தளங்களில் ஆண்கள் வீசும் வலைகளில் பெண்கள் எப்படி சிக்கி கொள்கிறார்கள் என்றால் மனோவசியம் செய்யப்படுகிறார்கள். முகநூலில் நட்பு கொண்ட ஆண்&பெண் இருவரும் தொடக்கத்தில் மனம் விட்டு பேசுகிறார்கள். அடுத்த கட்டமாக அந்த ஆண் தன் விருப்பங்களை திரும்ப திரும்ப கூறுகிறான். எந்தவொரு கட்டளையும் தொடர்ந்து கொடுக்கும் போது அதை செய்ய மனம் பழக்கப்பட்டு விடுகிறது. பறவைகள், விலங்குகளை பழக்கப்படுத்துகிறோம் அல்லவா, அது போல் தான். அந்த நபர் மீது நம்பிக்கை ஏற்பட்டதும் அவள் தன்னை சுற்றி அமைத்திருந்த வேலியை உடைத்து விடுகிறாள். அதன் பின் அவன் சொல்கிறபடி நடக்க தொடங்குகிறாள். இந்த மனோவசியத்தில் தான் பெண்கள் சிக்கி கொள்கிறார்கள்.

    பொதுவாக பெண் குழந்தைகள் இதுபோன்ற விசயங்களை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதால் ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் பெற்றோரிடம் எதனையும் தெரியப்படுத்தும் நிலையில் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தை களிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள். பின் விளைவுகள் ஏற்படும் முன்னரே தடுத்து நிறுத்தி விடலாம்.

    மேலும் பெற்றோர்கள் என் குழந்தை அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டான். அந்த துணிவெல்லாம் அவனுக்கு கிடையாது என்றும், என் குழந்தை எந்த பிரச்சினையென்றாலும் சமாளித்து விடுவான் என்றும் நம்பியிருக்கக் கூடாது. அதுவும் ஆபத்தை விளைவிக்கும். குழந்தைகளிடம் கஷ்டப்பட்டு படிங்க, கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க. அப்போதுதான் நல்லா இருக்கலாம் என்று சொல்லி வந்தால், தேவையான விஷயங்களை செய்ய கஷ்டம்தான் படணும், மகிழ்ச்சிக்கான தேடல் என்பது நல்ல விசயங்களில் இருக்காது போல என நினைத்து கேளிக்கை விசயங்களில் நாட்டம் கொள்கின்றனர்.

    எனவே அவர்கள் எதனையும் இஷ்டப்பட்டு செய்யும் வகையில் நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் கெட்ட விசயங்களில் அலை பாயாது.

    நாம் எந்த விசயத்தை அடிக்கடி நினைக்கிறமோ, விரும்புகிறமோ அது ஆழ்மனதில் பதிந்து விடும். அதனால் குழந்தைகளிடம் எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும். அவர்களை சுற்றிலும் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் உணர்வு மனதளவில் நாம் நல்லவற்றை எண்ணி னாலும் ஆழ்மனதில் கெட்ட விசயங்கள் பதிந்திருந்தால் அதுவே வெளிப்பட்டு செயலாகும்.

    இரண்டு வகையான பார்வை இருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவது ஒரு விசயம். பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அறிவுத்த வேண்டும்.

    இந்த பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு மனநல வாழ்வியல் ஆலோசகராக நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த பாதிப்பால் அவர்கள் சுருண்டு போய்விடக் கூடாது. இது அவங்களுக்கு ஒரு பெரிய விபத்தாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு விபத்தை கண்ணால் பார்த்தால் கூட அது மனதுக்குள் ஒரு அதிர்ச்சியை துயரத்தை ஏற்படுத்தும்.

    ஆனால் அவர்களே விபத்தில் சிக்கி இருக்கும் போது எப்படி இருக்கும்? அதுவும் தன் மீது அன்பு காட்டிய நபரே இப்படி நடந்து கொண்டதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். பெரிய பாரமாக தான் இருக்கும். இந்த சம்பவம் அவர்கள் மனதில் சித்திரமாக பதிந்திருக்கும். இது பின்னாட்களில் வேறு எது நடந்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே அதில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு தகுந்த மனநல சிகிச்சையும் மனநல திட பயிற்சியும் அளிக்க வேண்டும்.

    Email:fajila@hotmil.com
    ×