search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PETA"

    • நல்மேய்ப்பர் நகர் தெருக்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
    • சமீபத்தில் டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களை நாய்கள் கடித்து குதறியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகர் 11, 12, 13 மற்றும் 14-வது தெருக்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அங்கு 15-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பாகவும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுவர்-சிறுமிகள் தெருக்களில் சென்று விளையாட அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீபத்தில் டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களை நாய்கள் கடித்து குதறியது. ஆபத்தான நிலையில் அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் நல்மேய்ப்பர் நகரில் நடப்பதற்கு முன்பாக மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடிக்க வேண்டும் என்றனர். 

    • இந்த விளையாட்டுகள் விலங்குகளுக்கு சொல்லொணா துன்பம் மற்றும் வேதனையை ஏற்படுத்துவதாக புகார்.
    • விரிவான உண்மை மற்றும் அறிவியல் ரீதியான ஆவணங்களில் எந்தப் பகுதியையும் இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை.

    புதுடெல்லி:

    தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஆதரவாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடந்த பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது.

    ஆனால், ஜல்லிக்கட்டை தடை செய்யும் குறிக்கோளுடன் இருந்த பீட்டா, உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகள் சித்ரவதை செய்யப்படுவதாக கூறி வழக்கு தொடர்ந்தது. ஆனால் பீட்டாவுக்கு இவ்வழக்கில் பின்னடைவே ஏற்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 18-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்தும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதே போன்று மகாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயம், கர்நாடகாவில் எருமை பந்தய விளையாட்டான கம்பாலா ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கும் சட்டங்களும் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

    இந்நிலையில் உச்சநீதிமன்றம் மே மாதம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற விளையாட்டுகள் காளைகள் மற்றும் எருமைகளின் இயற்கையான உள்ளுணர்வு மற்றும் உடற்கூறியலுக்கு எதிரானவை, அவை எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்த விளையாட்டுகள் விலங்குகளுக்கு சொல்லொணா துன்பம் மற்றும் வேதனையை ஏற்படுத்துகின்றன.

    ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் மாட்டு வண்டி பந்தயங்கள் இயல்பிலேயே கொடூரமானவை. குற்றம்சாட்டப்பட்ட அம்சங்கள் தொடர்பாக திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட அந்த கொடுமைகள் தொடர்கின்றன. இதுதொடர்பான விரிவான உண்மை மற்றும் அறிவியல் ரீதியான ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்தப் பகுதியையும் இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் சட்டத்தின் கடுமையான பிழையைச் செய்துவிட்டது.

    இவ்வாறு பீட்டா தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    • ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
    • இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

    புதுடெல்லி:

    தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இதில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

    • ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
    • புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்; ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? என்று தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    மேலும் விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன; கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    அப்போது ஐல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    அப்போது பீட்டா முன்வைத்த வாதங்களை மறுக்காமல் எவ்வித பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்யாமல் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் மோசடியே என்றும், திருத்தப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் கண்துடைப்பே என்றும் பீட்டா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், இதற்கு சாட்சியாக புகைப்படங்கள், செய்திதாள்கள் அடிப்படையில் வெளியான தகவல்களை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.

    அப்போது பேசிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்? விதிமுறைகள் மீறல் தொடர்பாக எங்கேனும் புகார் அளித்தீர்களா? புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அத்துடன் வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். நாளை பீட்டா சார்பில் மேலும் வாதங்களை முன்வைக்க அனுமதி அளித்தனர். 

    ×