என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Photography"

    • புடவைகளில் இருக்கும் புகைப்படங்களை பெண்கள் ஜெமினியில் ஜெனரேட் செய்து பதிவிட்டனர்.
    • ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    கூகுளின் Gemini Al தளம் மூலம் உருவக்கப்படும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    Gemini 2.5 Flash Image Tool மென்பொருளை பயன்படுத்தி இந்த புகைப்படங்களை ஜெமினி நொடிகளில் உருவாக்கித் தருகிறது.

    Nano Banana என அழைக்கப்படும் இந்த புதிய ட்ரெண்ட்-ல் இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை ஜெனரேட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக புடவைகளில் இருக்கும் அழகான புகைப்படங்களை பெண்கள் ஜெமினியில் ஜெனரேட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.

    இந்நிலையில், ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெமினியில் புடவையுடன் இருக்கும்படியாக ஒரு புகைப்படம் ஜெனரேட் செய்தேன். ஆனால் அதில், நான் கொடுத்த படத்தில் தெரியாத என்னுடைய மச்சம் ஜெனரேட் செய்யப்பட்ட படத்தில் உள்ளது. ஆகவே ஆன்லைனில் பதிவிடப்படும் அனைத்து அனைத்து புகைப்படங்களையும் ஏஐ கவனிக்கிறது. ஆகவே புகைப்படங்களை பதிவிடும்போது கவனமாக இருங்கள்" என்று தெரிவித்தார்.

    • இந்த புகைப்படங்களை ஜெமினி நொடிகளில் உருவாக்கித் தருகிறது.
    • இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை ஜெனரேட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கூகுளின் Gemini Al தளம் மூலம் உருவக்கப்படும் 3D சிலை வடிவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    Gemini 2.5 Flash Image Tool மென்பொருளை பயன்படுத்தி இந்த புகைப்படங்களை ஜெமினி நொடிகளில் உருவாக்கித் தருகிறது.

    Nano Banana என அழைக்கப்படும் இந்த புதிய ட்ரெண்ட்-ல் இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை ஜெனரேட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கீழ்கண்ட PROMT- ஐ பயன்படுத்தி இத்தகைய புகைப்படங்களை Gemini Al இல் உருவாக்கி கொள்ளலாம்

    "A realistic 1/7 scale figurine of the pictured characters stands on a clear acrylic base atop a sleek wooden desk. The desk is tidy, with a monitor displaying the ZBrush sculpting process: showing wireframes, textures, and fine details. Beside it, a BANDAI-style toy box features vibrant 2D illustrations matching the figurine. Natural light from a nearby window casts soft shadows, highlighting the model's textures and craftsmanship."

    • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.
    • கணினி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணிணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கணிணிப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

    பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்.

    மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில் ஈஸ்வர் நகர், 4 பக்கிரிசாமி தெருவில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் பெற 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணிணி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெ றலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராசிபுரம் அருகே உள்ள மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.
    • நாமக்கல் மாவட்டத்தில் நடந்த வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

    இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குவதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டத்தில் நடந்த வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

    இந்த புகைப்படக் கண்காட்சியை அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் பார்த்து அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டனர்.

    • வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
    • மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    கல்லாகுளம் ஊராட்சி யில் அமைக்கப்பட்ட, புகைப்படக் கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு, சுதந்திர திருநாளை யொட்டி தலைமை செயலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்குவதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோவில் பணியாளர் களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கியதன் புகைப் படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.

    இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ் நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
    • எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று பகிர்ந்துள்ளார்.

    ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

    இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.

    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவரான மாளவிகா மோகனன் அடிக்கடி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

    வெளிநாடுகளில் சுற்றுலா சென்ற படங்கள் மற்றும் சிலம்ப பயிற்சி எடுத்துக் கொண்ட படங்கள் உள்பட பல வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தாய்லாந்தில் சைக்கிள் ரிக்சா முன்பு நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.
    • சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாக உள்ளது

    அமேரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளி மையம் பிரபஞ்சத்தைப் பற்றிய புதுப்புது உண்மைகளை தனது அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் செய்யும் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தியவாறு இருக்கிறது.

    அந்த வகையில் சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக்களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை [GIGANTIC JETS] படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த நிகழவைப் படப்பிடித்துள்ள நாசா, இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.

    இதற்குமுன் இல்லாதவகையில் 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வானது, இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    தொடர்ச்சியாக விழுந்த இந்த 4 ஒளித்திரள் ஜெட் மின்னல்களும் ஒன்றுக்கொன்று சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்துள்ளன. வளிமண்டலத்தின் மேற் பரப்பில் உள்ளதால் மின்னலின் மேற்புறத்தில்  சிவப்பு நிறமாகவும், பூமியை நோக்கி வரும் கீழ் பகுதி ரோஸ் நிறத்திலும் உள்ளது. இது சாதாரணாமாக ஏற்படும் மின்னலாகவன்றி மிகப்பெரிய அளவுடையதாகவும் சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாகவும் உள்ளது.   

    • மறைந்த நகைச்சுவை நடிகரின் பிறந்தநாள் கொண்டாடினர்.
    • பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

    சிவகங்கை

    தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவ். வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சின்னத்தம்பி, காலம் மாறி போச்சு உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இவருக்கு 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்கள் இறந்த நிலையில் ராஜேந்திர ராவ் என்ற மகன் மட்டும் சிவகங்கை இந்திரா நகரில் வசித்து வருகிறார். தந்தையின் நினைவாக இவர் ஆண்டுதோறும் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவின் வாழ்க்கை குறித்த புகைப்படங்களை பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி இருந்தார்.

    அந்த படத்திற்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மலர் தூவி கண்காட்சியை திறந்துவைத்தார். பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

    ×