search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "master"

    • 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக ஆனார் மாஸ்டர் மகேந்திரன்.
    • 'கூலி' படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல்.

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன்.

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக போன்ற பல படங்களில் நடித்த பிறகு 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.

    இவர், சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் சிறு வயது விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

    இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஆக்சன் படமாக தயாராகும் 'கூலி' படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    • ரொமான்டிக் வசனம் பேசுமாறு அர்ஜூன் தாஸிடம் கேட்டார்.

    கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அர்ஜூன் தாஸ். இவர் நாயகனாக நடித்த அநீதி, ரசவாதி போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதைத் தொடர்ந்து இவர் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் நடிகர் அர்ஜூன் தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு வருகைதந்த அர்ஜூன் தாஸ்-க்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்களிடம் கைதி பட வசனத்தை அர்ஜூன் தாஸ் பேசினார்.

     


    இதைகேட்ட மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். பிறகு மாணவர்களின் கேள்விகளுக்கு அர்ஜூன் தாஸ் பதில் அளித்தார். அப்போது மாணவி ஒருவர் ரொமான்டிக் வசனம் ஒன்றை பேசுமாறு அர்ஜூன் தாஸிடம் கேட்டார். அதை கேட்ட அர்ஜூன் தாஸ் மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

    மாணவி இருந்த இடத்திற்கே சென்ற அர்ஜூன் தாஸ் அவரிடம் வாரணம் ஆயிரம் படத்தின் வசனத்தை பேசினார். இதை கண்டு அங்கிருந்த மாணவர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். தொடர்ந்து பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ் தனது அடுத்த படம் காதல் கதை கொண்ட ரொமான்டிக் திரில்லராக இருக்கும் என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
    • எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று பகிர்ந்துள்ளார்.

    ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

    இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.

    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவரான மாளவிகா மோகனன் அடிக்கடி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

    வெளிநாடுகளில் சுற்றுலா சென்ற படங்கள் மற்றும் சிலம்ப பயிற்சி எடுத்துக் கொண்ட படங்கள் உள்பட பல வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தாய்லாந்தில் சைக்கிள் ரிக்சா முன்பு நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
    • விக்ரமின் தங்கலான் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பேட்ட' படம் மூலம் தமிழில் களமிறங்கினார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.

    இவர் தனுஷூடன் இணைந்து நடித்து வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது விக்ரமின் தங்கலான் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக சிலம்பம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார். சிலம்பத்திற்காகப் பயிற்சி எடுக்கும் காணொளிகளையும் அவ்வப்போது இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார் மாளவிகா.

    இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகன் நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்தார். இது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல சுவாரசியமான திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
    • லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளனர்

    கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல சுவாரசியமான திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

    அதைத்தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார், மேலும் இந்தியன் 2, கல்கி 2898 ஏ.டி போன்ற  படங்களில் நடித்து இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கிறது.

    தற்பொழுது கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இவர்கள் சமீபத்தில் வந்த லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இவரே இயக்கியுள்ளனர்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜயுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.
    • பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.

    2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. படம் வசூலில் அள்ளி குவித்தது. விஜயுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.

    எந்தளவுக்கு படம் வரவேற்பு பெற்றதோ. அதேயளவு மாளவிகா மோகனனின் நடிப்பு கேலி செய்யப்பட்டது.

    அவர் காட்சியில் அளவு கடந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கிறார் என்று கேளி பொருளானார்.

    பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அதைதொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் " அக்கா எப்போ ஆக்டிங் கிளாஸ் போக போறீங்க?" என்று கேட்ட கேள்விக்கு " உங்களுக்கு எப்பொழுது இந்த கேள்வி கேட்க ஒரு தகுதி வருகிறதோ அன்று நான் ஆக்டிங் கிளாஸ் சேருவேன்" என்று கூலாக பதிலளித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து ஒரு ரசிகர் 'எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் கனவு?' என்று கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன்,

    "கேங்ஸ்டராக நடிக்க ஆசை! ஒரு பெண் கூலான கேங்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா? இப்போது நான் ஆக்சன் சீன்களுக்கு பயிற்சி பெற்றிருப்பதால், அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.

    மேலும் , பிடித்த நடிகை குறித்த கேள்விக்கு அனுஷ்கா ஷெட்டி மற்றும் சமந்தா என்று மாளவிகா மோகனன் பதிலளித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
    • மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ். இயக்குநர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்து உள்ளார். இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகமாகிறார்.

    கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற லோகேஷ் கனகராஜ் படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், முதன்முறையாக மலையாள சினிமாவுக்கு ஹீரோவாக வருகிறார். ஜூன் மற்றும் மதுரம் மற்றும் 'கேரளா க்ரைம் பைல்ஸ்' என்ற வெப் சீரியலுக்குப் பிறகு அகமது கபீர் புதிய படத்தை இயக்குகிறார்.

    இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது இப்படம் காதலை மையமாக வைத்து எண்டர்டெயினராக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உலக்குடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 40). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டத்தை சேர்ந்த ஏம்பல் கிராமத்தில் உள்ள ஒரு டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இச்சம்பவத்தில் தனது கணவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ராமச்சந்திரனின் மனைவி ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் டீ கடையில் பணிபுரிந்த சக தொழிலாளர்களான நாரணமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (33), மணல்மேல்குடி நரியனேந்தலை சேர்ந்த ரங்கய்யா (24) ஆகியோர் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சுப்பிரமணியன், ரங்கையா ஆகியோர் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; புரோட்டா மாஸ்டர் பலியானார்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிலோன் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது52). இவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்றுஇரவு வேலை முடிந்த பிறகு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். எதிர்திசையில் அதே பகுதியில் வெள்ளக் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் முனியசாமி(31) பணி முடித்து பாளையம் பட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தார். பெரிய கடை வீதியில் 2 மோட்டார் சைக்கிள்களும் வந்த போது நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    முனியசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவ லறிந்தத அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமியை சிகிச்சை க்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் இறந்தது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர்.
    • கடந்த வருடம் திரைக்கு மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர்.

    இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

     

    மாஸ்டர்

    மாஸ்டர்

    கார்த்தி நடித்த கைதி படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த 'ஆர்ஆர்ஆர்' படத்தை சில தினங்களுக்கு முன்பு ஜப்பானில் ரிலீஸ் செய்தனர். அந்த படம் திரையிட்ட முதல் நாளே ரூ.1 கோடி வசூலித்தது.

     

    மாஸ்டர்

    மாஸ்டர்

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் ஜப்பானில் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் திரையிடவுள்ளனர். தற்போது ஜப்பான் மொழி வாசகங்களுடன் மாஸ்டர் பட போஸ்டரை நகரம் முழுவதும் பல இடங்களில் ஒட்டி வருவதாக கூறப்படுகிறது. 

    ×