என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "master"
- இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
- மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ். இயக்குநர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்து உள்ளார். இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகமாகிறார்.
கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற லோகேஷ் கனகராஜ் படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், முதன்முறையாக மலையாள சினிமாவுக்கு ஹீரோவாக வருகிறார். ஜூன் மற்றும் மதுரம் மற்றும் 'கேரளா க்ரைம் பைல்ஸ்' என்ற வெப் சீரியலுக்குப் பிறகு அகமது கபீர் புதிய படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது இப்படம் காதலை மையமாக வைத்து எண்டர்டெயினராக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
- விசாரணையில் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உலக்குடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 40). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டத்தை சேர்ந்த ஏம்பல் கிராமத்தில் உள்ள ஒரு டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இச்சம்பவத்தில் தனது கணவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ராமச்சந்திரனின் மனைவி ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் டீ கடையில் பணிபுரிந்த சக தொழிலாளர்களான நாரணமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (33), மணல்மேல்குடி நரியனேந்தலை சேர்ந்த ரங்கய்யா (24) ஆகியோர் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து சுப்பிரமணியன், ரங்கையா ஆகியோர் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; புரோட்டா மாஸ்டர் பலியானார்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிலோன் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது52). இவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்றுஇரவு வேலை முடிந்த பிறகு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். எதிர்திசையில் அதே பகுதியில் வெள்ளக் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் முனியசாமி(31) பணி முடித்து பாளையம் பட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தார். பெரிய கடை வீதியில் 2 மோட்டார் சைக்கிள்களும் வந்த போது நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
முனியசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவ லறிந்தத அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமியை சிகிச்சை க்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் இறந்தது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர்.
- கடந்த வருடம் திரைக்கு மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர்.
இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.
கார்த்தி நடித்த கைதி படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த 'ஆர்ஆர்ஆர்' படத்தை சில தினங்களுக்கு முன்பு ஜப்பானில் ரிலீஸ் செய்தனர். அந்த படம் திரையிட்ட முதல் நாளே ரூ.1 கோடி வசூலித்தது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் ஜப்பானில் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் திரையிடவுள்ளனர். தற்போது ஜப்பான் மொழி வாசகங்களுடன் மாஸ்டர் பட போஸ்டரை நகரம் முழுவதும் பல இடங்களில் ஒட்டி வருவதாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்