search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silambam"

    • மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
    • பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திரு நகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். (வயது 70).

    இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது ஆழ்வார்திருநகரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

    நேற்று ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் மழை பெய்த காரணத்தினால் அங்குள்ள சிறு அரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். அவர்கள் ஏரல் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் திடீரென மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் சொல்லி கொடுப்பது குறித்து அறிந்த அவர்கள் நேரடியாக 20 பேரும் வருகை தந்தனர்.

    காலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால் அரங்கத்திற்குள் நுழைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை சிலம்ப ஆசான் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

    பிரான்ஸ் நாட்டினர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.

    அதை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    உடனே அதே இடத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நெடுங்கம்பு, நடுகம்பு மற்றும் ரெங்கராட்டினத்தைச்சுற்றி பயிற்சி அளித்தார். சிறிது நேரத்திலேயே சிலம்ப கலையைக்கற்றுக்கொண்ட பிரான்ஸ் நாட்டினர், ரெங்கராட்டினத்தை தானாகவே சுற்றி அசத்தினர்.

    அப்போது உடன் இருந்த மாணவ-மாணவிகளும், அங்கு வந்த பிரான்ஸ் நாட்டினரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
    • நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 36). யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். யோகா கற்றுக்கொண்ட போதிலும் சிறு வயது முதலே சிலம்பம் மீது பற்றுக்கொண்ட அவர் அதில் சாதனை படைக்க விரும்பினார்.

    தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை 1 மணி நேரம் நிறைமாத கர்ப்பிணியான சுதா இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்தினார். இவரது இச்சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

    இதுகுறித்து சுதா கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக்கொண்டேன். எனக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி பிரசவத்திற்கான தேதி கொடுத்தனர். நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன். இதற்கு பயிற்சியாளர் பரசுராம், கணவர் வல்லபன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

    இதையடுத்து 1 மணி நேரம் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், மான்கொம்பு ஆகியவற்றை சுழற்றினேன். இந்த சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என்றார்.

    • மாநில அளவில் நடந்த சிலம்ப போட்டியில் மதுரை அணி 2-ம் இடம் பெற்றது.
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மாநில அளவிலான சிலம்ப தொடுமுறை போட்டி கார்த்திக் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. போட்டியை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். போட்டியில் 16 மாநிலங்களில் இருந்து ஏராளமான போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மதுரை பதி னெட்டாம்படி சிலம்ப அகடாமியின் மாரிமுத்து சிலம்ப குழுவினர் 2-ம் மற்றும் 3-ம் இடம் பிடித்த னர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை ஏராளமானோர் பாராட்டினர்.

    • தொடர்ந்து, 2 மணிநேரம் மிதித்து கொண்டே ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி சாதித்தனர்.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று 14 மாணவ -மாணவிகள் கண்கள் இரண்டையும் துணியால் கட்டியவாறு சுருள்வாள் சுற்றி புதிய உலக சோழன் சாதனை படைத்தனர்.

    அதன் பற்றிய விவரம் வருமாறு :-

    பார்வையிழந்தும் தன்னம்பிக்கையோடு நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்து வரும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கத்தில் 14 மாணவ-மாணவிகள் தொடர்ந்து 2 மணிநேரம் கண்கள் இரண்டையும் கட்டியவாறு சுருள்வாள் சுற்றி அனை வரையும் மெய்சிலிர்க்க வைத்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவி வந்தனா என்பவர் தொடர்ந்து 2 மணிநேரம் ஒற்றைக் கையில் சுருள்வாள் சுற்றி புதிய சோழன் உலக சாதனை படைத்தார் . பின்னர் 4 மாணவர்கள் சைக்கிள்களை தொடர்ந்து 2 மணிநேரம் மிதித்துக் கொண்டே ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி சாதித்தனர். இந்த மூன்று சாதனை நிகழ்ச்சிகளும் தஞ்சை சண்முகநாதன் நகரில் இன்று நடைபெற்றது.

    இந்நிகழ்வை யோவான் சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளியின் ஆசான் ராமநாதன் ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பாக அதன் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தஞ்சை மாவட்டப் பொதுத் தலைவர் முனைவர் சந்தானசாமி மற்றும் தஞ்சை மாவட்டப் பொதுச் செயலாளர் நல்லாசிரியர் குழந்தைசாமி போன்றோர் நடுவர்களாக பங்கு கொண்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களை கண்காணித்து உறுதி செய்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கி பாராட்டினர்.

    இந்த நிகழ்ச்சியில் யோவான் சிலம்பப் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசான் யோவான், தன்னார்வ லர்கள் நீலமேகம், சஞ்சய், எஸ்தர் ராணி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாதனை படைத்த மாணவ- மாண விகளை பாராட்டினர்.

    • சர்வதேச சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் மாணவி சாதனை படைத்தார்.
    • வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் வோல்டு யூனியன் சிலம்ப பெடரேஷன் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.

    இதில் சப்ஜூனியர் ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, இலங்ைக ஆகிய 5 நாடுகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    மாணவியுடன் சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேலும் உடனிருந்தார். ராமநாதபுரம் திரும்பிய மாணவிக்கு பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார்.
    • ஆதிதிராவிட விடுதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிட விடுதி பள்ளி கல்லூரி மாணவி களுக்கு உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானும் தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளருமான சி.வீரமணி வாரத்தில் 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார். இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மாணவிகளுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணி ப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிலம்ப பயிற்சியாளர் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு தலைமையில் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது.
    • வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிடிவுகளாக ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது. மேலும், வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். விளையாட்டுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

    • மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

    • கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
    • ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல் -அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் நடைபெற உள்ளது.

    இதில் பொது பிரிவினர் ( 15 முதல் 35 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம், இறகு பந்து, கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 வயது முதல் 19 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ( 17 வயது முதல் 25 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு ( வயது வரம்பு இல்லை ) 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், கையுந்து பந்து, கபடி, எறிபந்து போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ( வயது வரம்பு இல்லை ) கபடி, செஸ், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் நடக்க உள்ளது.

    மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து ஆகிய போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் முகவரியான www.sdat. tn.gov.in என்ற இணையதளத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பதிவில் பதிவு செய்யலாம்.

    ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.

    இதில் பதிவு செய்வதற்கு நாளை ( ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் அதிக அளவில் பதிவு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகளில் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ- மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
    • தமிழர்களின் 64 கலைகள், தமிழர்களின் மரபு விழாக்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்தும் 14-வது ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது.

    இந்த கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக பெண்கள் செயற்களம் மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமை தாங்கினார்.

    தமிழக பெண்கள் செயற்களம் அமைப்பாளர் மங்கைநம்பி மற்றும் குமரவேல் முன்னிலை வகித்தனர்.

    தமிழக பெண்கள் செய ற்களம் செயற்குழு உறுப்பினர் சாரதா,

    தமிழக பெண்கள் செயற்களம் நிர்வாகி யுவராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழர் வரலாறு, தொன்மை குறித்த புத்தகத்தில் வினா, விடை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊக்கத் தொகையுடன், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த கண்காட்சியை பார்வையிட வரும் மாணவ, மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நா.மு வேங்கடசாமி நாட்டார் கல்லூரி இயக்குனர் விடுதலை வேந்தன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் துணைப் பொது மேலாளர் ரவிக்குமார், தமிழக பெண்கள் செயற்களம் நிர்வாகிகள் சீர்த்தி,வெண்ணிலா, தாமரை ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    கண்காட்சியில் உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர்களின் வரலாறு, தமிழர் மரபு மற்றும் உணவு வகைகள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களுடைய இசைக்கருவிகள், சிலம்பம் உள்ளிட்ட மரபு விளையாட்டுகள், தமிழர்களின் 64 கலைகள், தமிழர்களின் மரபு விழாக்கள், நாட்டுப்புறக்கலைகள், இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள், தமிழர்க ளின் தொன்மையான இசை வாத்தியங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் நடைபெ ற்றது.

    இன்று 2-வது நாளாக கண்காட்சி நடைபெற்றது. ஏராளமானோர்பார்வை யிட்டனர். இந்த கண்காட்சி யானது நாளை வரை நடைபெறுகிறது.

    • மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பாளை வ.உ.சி. மைதான உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
    • போட்டியில் சுமார் 400 வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 42-வது மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. போட்டிகளை நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் உலகுராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிலம்பாட்ட கழக செயலாளர் சிலம்பு சுந்தர் முன்னிலை வகித்தார்.

    சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர்களுக்கான இந்த போட்டியில் 11 வயது முதல் 17 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 400 வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர்.

    பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு வெற்றிச் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் இன்று மாலை வழங்கப்படுகிறது.

    தஞ்சை அருகே பள்ளி மாணவர்களுக்கு கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு மற்றும் ஜெய்ஹிந்த் விளையாட்டு கழகம் இணைந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தியது.

    ஊரணிபுரம் ஜோதி அரசு பள்ளியில் நடந்த  இந்த விளையாட்டு பயிற்சி முகாமில் கராத்தே, டேக்ஹோண்டா, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .பயிற்சி இறுதிநாளில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழை தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் வழங்கினார்.

    தேசிய துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பழனிதுரை மாணவ- மாணவிகளை பாராட்டிப் பேசினார். பயிற்சி முகாமை பயிற்றுநர் மணிகண்டன் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

    ×