

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அரசு சார்பில் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
அப்போது கழுநீர்குளம் பகுதியில் சாலையோரம் சிலம்பம் சுற்றும் பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். அதனை கண்ட முதலமைச்சர் தானும் காரில் இருந்து இறங்கி சென்று மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றி அசத்தினார்.