என் மலர்
நீங்கள் தேடியது "tea shop"
- பால் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாள் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்
பால் - ரூ.15
லெமன் டீ - ரூ.15
காபி - ரூ.20
ஸ்பெஷல் டீ - ரூ.20
ராகி மால்ட் - ரூ.20
சுக்கு காபி - ரூ.20
பூஸ்ட் - ரூ.25
ஹார்லிக்ஸ் - ரூ.25
பார்சல்
கப் டீ - ரூ.45
கப்-பால் - ரூ.45
கப் காபி - ரூ.60
ஸ்பெஷல் கப் டீ - ரூ.60
ராகி மால்ட் - ரூ.60
சுக்கு காபி - ரூ.60
பூஸ்ட் - ரூ.70
ஹார்லிக்ஸ் கப் - ரூ.70
ஸ்னாக்ஸ்
போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)
- பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாள் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்
பால் - ரூ.15
லெமன் டீ - ரூ.15
காபி - ரூ.20
ஸ்பெஷல் டீ - ரூ.20
ராகி மால்ட் - ரூ.20
சுக்கு காபி - ரூ.20
பூஸ்ட் - ரூ.25
ஹார்லிக்ஸ் - ரூ.25
பார்சல்
கப் டீ - ரூ.45
கப்-பால் - ரூ.45
கப் காபி - ரூ.60
ஸ்பெஷல் கப் டீ - ரூ.60
ராகி மால்ட் - ரூ.60
சுக்கு காபி - ரூ.60
பூஸ்ட் - ரூ.70
ஹார்லிக்ஸ் கப் - ரூ.70
ஸ்னாக்ஸ்
போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)
- கிருஷ்ண குமார் அவரது மாமனார் வீட்டருகே 498A என்ற பெயரில் டீக்கடை ஒன்றை திறந்துள்ளார்.
- இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைவிலங்கு அணிந்துகொண்டே அவர் தேநீர் விற்பனை செய்கிறார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் தன் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்த மனைவிக்கு எதிராக, தனது மாமனார் வீட்டருகே டீக்கடை ஒன்றை திறந்து கணவர் ஒருவர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிருஷ்ண குமார் என்ற நபர் 2018 இல் மீனாட்சி என்பவரை திருமணம் செய்தார். இருவரும் சேர்ந்து தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தனர்.
ஆனால் 2022 ஆம் ஆண்டில், கிருஷ்ணாவை விட்டு பிரிந்து சென்ற அவரது மனைவி, கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார்.
இந்நிலையில், கிருஷ்ண குமார் அவரது மாமனார் வீட்டருகே 498A என்ற பெயரில் டீக்கடை ஒன்றை திறந்து வியாபாரம் தொடங்கியுள்ளார்.
இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைவிலங்கு அணிந்துகொண்டே அவர் தேநீர் விற்பனை செய்கிறார். ஐபிசி 498A கீழ் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால், அந்தப் பெயரையே கடைக்கு வைத்து போராட்டம் நடத்தி வருவதாக கிருஷ்ண குமார் தெரிவித்தார்.
டீக்கடையில் "எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்" என்ற வாசகங்கள் உள்ள பதாகைகள் மற்றும் போஸ்டர்களை அவர் வைத்துள்ளார். இணையத்தில் கிருஷ்ண குமாரின் டீக்கடை வைரலாகியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக பேசிய அவர், "என் மனைவி கொடுத்த பொய் வழக்கால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது. கடந்த மூன்று வருடங்களாக, நீதிக்காக நீதிமன்றத்தில் நான் அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வயதான தாய் இருக்கிறார். அவருக்காக தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஆனால அதே சமயம் இது தொடர்பாக பேசிய அவரது மனைவி, " நிலம் வாங்க என் தந்தையிடம் என் கணவர் பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்தபோது, அவர் என்னை அடித்தார். பின்னர் நான் என் தந்தையின் வீட்டிற்கு வந்துவிட்டேன். நான் விவாகரத்துக்கு தயாராக இருக்கிறேன், ஆனால் அதற்கு முதலில், என் பெயரில் அவர் வாங்கிய அனைத்து கடன்களையும் திருப்பி கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் டீ கடைக்கு செல்வார்.
- டீ கடையில் கற்ற அனுபவங்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், தனது குழந்தை பருவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "நான் என் தந்தையின் தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அந்தக் கற்றல்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்
எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பி, பல கோயில்களுக்குச் சென்று, பின்னர் தான் டீ கடைக்கு செல்வார். கிராமத்தில் உள்ள மக்கள் எனது அப்பாவின் காலடிச் சத்தத்தை கேட்டாலே அந்த நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர் ஒழுக்கமாக இருந்தார்.
என் குழந்தைப்பருவம் பெரும் வறுமையிலேயே கழிந்தது. என் வெள்ளை ஷூ-வை பாலிஷ் போட சாக்பீஸ் சேகரித்துக் கொண்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.
- பாளையை சேர்ந்தவர் செய்யது அப்துல்ரகுமான் பாளை மார்க்கெட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்
- ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
நெல்லை:
பாளையை சேர்ந்தவர் செய்யது அப்துல்ரகுமான். இவர் பாளை மார்க்கெட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம்போல் கடை திறக்கப்பட்டது.
திடீரென கடையில் இருந்த சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கடையின் மேற்கூரை எரிந்து சேதமாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- சில்லறை தட்டுப்பாடு காரணமாக டீக்கடை உரிமையாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து ரகுநாதனின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதராபாத் பகுதியில் ரகுநாதன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். ரகுநாதன் டீக்கடைக்கு 3 வாலிபர்கள் டிப் டாப் உடை அணிந்து வந்தனர். அவர்கள் 3 பேரும் டீ குடித்தனர்.
பின்னர் அதில் இருந்த வாலிபர் ஒருவர் 2 ஆயிரத்தை ரகுநாதனிடம் கொடுத்தார். அதற்கு அவர் தன்னிடம் ரூ.2 ஆயிரத்திற்கு சில்லறை இல்லை என்றார். ரூ. 30 மட்டும் தர வேண்டும் என கூறினார்.
சில்லறை தட்டுப்பாடு காரணமாக டீக்கடை உரிமையாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து ரகுநாதனின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.
மற்றொரு வாலிபர் கத்தியை எடுத்து ரகுநாதனின் மார்பில் குத்தி விட்டு அங்கிருந்து 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர்.
இது குறித்து ரகுநாதன் சைதராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இது சம்பந்தமாக சைதராபாத் உசேன் அஷலம் பகுதியை சேர்ந்த முகமது உஸ்மான், யான் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 30 ரூபாய் "டீ" க்காக துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் ஐதராபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முருகன் முள்ளக்காடு மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.
- திருட்டு குறித்து முத்தையாபுரம் போலீசில் முருகன் புகார் செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜூவ்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது52). இவர் முள்ளக்காடு மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று அதிகாலை கடையை திறக்க முருகன் சென்றார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் சில பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இடத்தில் 40 கோழிகளும், மற்றொரு இடத்தில் காரில் வந்து ஆடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். எனவே இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர்.
- சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது.
மும்பை:
சொகுசு கார்களை பலர் தங்கள் வாழ்நாள் கனவாக வைத்திருப்பார்கள். ஆனால் ஆடம்பரம் நிறைந்த அந்த காரை ஒரு டீக்கடையாக நினைத்து பார்க்க முடியுமா!. ஆனால் மும்பையில் 2 வாலிபர்கள் தங்கள் சொகுசு காரை டீக்கடையாக மாற்றி, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.
மன்னு சர்மா மற்றும் அமித் கஷ்யப் ஆகியோர் தான் அந்த வாலிபர்கள். அவர்கள் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரின் டிக்கியில் 20 ரூபாய்க்கு டீ விற்கின்றனர். அந்தேரி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள லோகந்தவாலாவில் அவர்கள் 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதனால் கடைக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் வாலிபர்களின் தனித்துவமான எண்ணம் மட்டும் அல்ல, 'டீ'யின் சுவையும் தான் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக கூறுகின்றனர்.
அதற்கு ஏற்றார்போல் அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர், "கடந்த 2 மாதங்களாக நான் இங்கு 'டீ' குடிக்க வருகிறேன். ஏனென்றால் அதன் சுவை அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் இந்த பகுதியை கடந்து செல்லும்போது அவர்களின் 'டீ'யை வாங்கி குடிக்க விரும்புகிறேன்" என்கிறார்.
இந்த நூதன முயற்சி குறித்து மன்னு சர்மா கூறியதாவது:-
நாங்கள் இரவில் ஒருநாள் 'டீ' குடிப்பதற்காக அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் டீக்கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் சொந்தமாக 'டீ' ஸ்டாலை திறக்க திட்டமிட்டோம்.
நாங்கள் சொகுசு காரில் டீ விற்பதன் மூலம் பொருளாதார வசதி இல்லாதவர்கள் மட்டும் தான் டீ விற்பார்கள் என்ற எண்ணம் தவறு என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கு சைக்கிளில் செல்பவர்களும் டீ குடிக்கிறார். அதேபோல சொகுசு காரில் வருபவர்களும் எங்கள் 'டீ'யை ருசிக்கிறார்கள்.
இருவரும் ஒரு மாதம் பல்வேறு சமையல் குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே 'டீ' தயாரிக்க பயிற்சி செய்து, இறுதியில் ஒரு செய்முறையை உறுதி செய்தோம். பின்னர் சொகுசு காரில் டீ விற்பனை செய்ய தொடங்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டீ கடை தொடங்குவதற்கு முன்பு அரியானாவை சேர்ந்த மன்னு சர்மா ஆப்பிரிக்க நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதேபோல அமித் கஷ்யப் காலையில் பங்கு சந்தை வர்த்தகராகவும் மாலையில் டீ கடைக்காரராகவும் மாறியுள்ளார்.
இவர்கள் வருங்காலத்தில் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற டீ கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
- கடை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், லிங்கங்குண்டலா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா (வயது 13).
குண்டூர் கலெக்டர் அலுவலகம் அருகே டீ கடை ஒன்று உள்ளது.
நேற்று இரவு டீக்கடை உரிமையாளர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றார்.
மணிகண்டா நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். டீக்கடையில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு இருந்தார்.
அப்போது வெளிச்சம் இல்லாததால் டீக்கடையில் இருந்த மின் விளக்கின் சுவிட்ச் போட்டு உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று காலை டீக்கடை உரிமையாளர் கடையை திறக்க வந்தார். கடை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது மணிகண்டா மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமலையில் இந்து மதத்தை தவிர வேற்றுமத பிரச்சாரம் செய்யும் வகையில் சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையில் இந்து மதத்தை தவிர வேற்று மத பிரச்சாரம் செய்யும் விதமாக அதன் சின்னங்கள், கொண்டு வரவும் பயன்படுத்தவும், வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி மலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் வழங்கப்பட்ட டீ கப்பில் சிலுவையின் அடையாளமாக டீ என்ற எழுத்து அச்சிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒரு கடையில் சிலுவை வடிவிலான டீ என அச்சிடப்பட்ட டீ கப்புகள் இருந்தன அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர்.
திருப்பதி மலையில் வேற்றுமத அடையாளங்கள் எக்காரணத்தை கொண்டும் இருக்க கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
- இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் அருகே யுள்ள சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் புஞ்சை துறைய ம்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகே மாரியப்பன் (49) என்பவர் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.
வேலை முடிந்ததும் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி சென்றார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் மாரியப்பன் டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து மாரியப்பன் மற்றும் அவரது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி வெளியேற்றினர்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் தீயணைப்பு துறையினரு க்கு தகவல் கொடுக்கப்ப ட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் மாரியப்பனின் டீ கடை மற்றும் வீட்டின் மேற்கூரை முழுவதும் பற்றி எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் 2 சிலிண்டர்களை மீட்டனர். மேலும் டீ கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சில பாத்திரங்கள் சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இரவு டீ கடையில் வேலை முடிந்து செல்லும் போது விறகு கட்டையில் இருந்த தீயை சரி வர அணைக்காமல் கவனக்குறைவாக இருந்து தூங்க சென்றுள்ளதாக தெரியவந்தது.
இதனால் காற்றின் வேகத்தில் தீ உருவாகி படிப்படியாக விறகில் பற்றிய தீ டீ கடை முழுவதும் பற்றி எரிந்து இருக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கடையில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து இருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர்.
- விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலாமணி. இவர் குண்டடம்- திருப்பூர் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடைக்குள் புகுந்தது.
இதில் கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் குண்டடம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் முத்துச்சாமி(65) சுப்பன் (70) மற்றும் லாரி டிரைவர் ரத்தினகுமார் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகேந்திரன், மாணிக்கம், செல்லமணி ஆகிய 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






