என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி"

    • 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
    • மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள BANDUAN படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'கைதி' படத்தின் மலாய் ரீமேக் 'BANDUAN' படத்தை பார்க்க நடிகர் கார்த்தி மலேசியா சென்றுள்ளார்.

    திரையரங்குகளில் நவ.6 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. BANDUAN படத்தின் கதாநாயகனுடன் நடிகர் கார்த்தி சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    • கூலி திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    • ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.

    'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான கூலி திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    இதனையடுத்து ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின. பின்னர், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கையைவிட்டு சென்றுள்ளது.

    இந்த வரிசையில் தற்போது கைதி 2 படமும் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்துக்காக ரூ.50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்கு ரூ.75 கோடி வரை கேட்டதாகவும் இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

    அதே சமயம் கைதி 2 படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
    • 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள கைதி படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நன்றாக வந்துள்ளதாக தமிழ் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • ஆட்டோ டிரைவர் போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது.
    • 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் எஸ்.பி. நடவடிக்கை.

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருப்பவர் அபுதல்ஹா. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுயசம்பு மற்றும் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இந்நிலையில் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வாலிபர் ஒருவரை அழைத்து வந்த போலீசார் அவரை அங்கு வைத்து இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயசம்பு உள்ளிட்ட போலீசார் காலால் எட்டி உதைத்தும் லத்தியால் தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் ஏராளமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து இன்னும் பல போலீசார் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இந்த நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசாரின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாக்கப்பட்ட வாலிபர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 14-ந்தேதி பொங்கல் தினத்தன்று போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    ஆட்டோ டிரைவரான அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கும் வீடியோ அவரது வக்கீல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான வாலிபர் இன்னும் தேவதானப்பட்டியில்தான் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவர் எதற்காக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்? அவர் மீதான கொடூர தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது குடும்பத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தாக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த தேனி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ள நிலையில், ஆய்வாளர் மற்றும் இரண்டு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • தாக்கப்பட்ட வாலிபர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 14-ந்தேதி பொங்கல் தினத்தன்று போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
    • ஆட்டோ டிரைவரான அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கும் வீடியோ அவரது வக்கீல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருப்பவர் அபுதல்ஹா. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுயசம்பு மற்றும் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இந்நிலையில் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வாலிபர் ஒருவரை அழைத்து வந்த போலீசார் அவரை அங்கு வைத்து இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயசம்பு உள்ளிட்ட போலீசார் காலால் எட்டி உதைத்தும் லத்தியால் தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் ஏராளமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து இன்னும் பல போலீசார் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இந்த நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசாரின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாக்கப்பட்ட வாலிபர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 14-ந்தேதி பொங்கல் தினத்தன்று போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    ஆட்டோ டிரைவரான அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கும் வீடியோ அவரது வக்கீல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான வாலிபர் இன்னும் தேவதானப்பட்டியில்தான் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவர் எதற்காக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்? அவர் மீதான கொடூர தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது குடும்பத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தாக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். 

    • கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள்.
    • சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், போதன் நகரை சேர்ந்த வாலிபர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை போலீஸ் நிலையத்தில் உள்ள அறையில் அடைக்க வேண்டும். அதற்கு பதிலாக போலீசார் அந்த நபரின் கை கால்களில் கனமான இரும்பு சங்கிலியால் பிணைத்தனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் போலீஸ் நிலையம் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினர். இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட வாலிபர் துடைப்பத்தை கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து போலீஸ் நிலையம் முழுவதையும் தூய்மைப்படுத்தினார்.

    அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

    கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

    இது தெலுங்கானாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும்.
    • குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்க அறிவுரை கூறினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் கிளை சிறையில் சிறைச்சாலை நீதிமன்றம் நடைபெற்றது பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.

    முன்னதாக சிறைச்சாலை பற்றியும், சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் விசாரணை கைதிகளுக்கு விளக்கமாக கூறினார். மேலும் விசாரணை கைதிகள் ஒவ்வொரு இடமும் குற்றத்தின் தன்மைகள் பற்றி கேட்டறிந்தார்.

    வழக்கறிஞர் வைத்து பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் இது போன்ற குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்கவும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வாழவும் அறிவுரை கூறினார் இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப்பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    • தமிழில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலோ’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.


    கைதி

    இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    அஜய் தேவ்கன்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 'போலோ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் அமலாபால் வருகிற டிசம்பர் மாதம் முதல் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    • பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடினார்.
    • மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பரமக்குடி,

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி மகன் அஜித் குமார் (வயது24).

    இவர் கடந்த 5-ந் தேதி நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சிறு காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.

    காயம் காரணமாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டிருந்தார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    நேற்று இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி அஜித்குமார் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
    • இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.


    போலா

    இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    போலா 

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், போலா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிட்டுள்ளது.



    • 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.


    போலா

    இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    போலா போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'போலா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அமர்வு நீதிமன்றத்தில் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
    • வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஆற்றோரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் எலும்பன் என்கிற துரைசாமி (வயது 2). இவர் மீது சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவர் பிணையில் வெளிவர இயலாதபடி பிணை ஆனை கோர்ட்டு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது மீதான குற்ற முறையீட்டுக்க பதில் அளிக்க வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அவர் தலைமறைவான 27.3.2003-ம் ஆண்டு முதல் போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வருகின்றனர். ஆனாலட போலீசாரின் கண்களில் படாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் எலும்பன் என்கிற துரைசாமி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சேலம் டவுன் போலீஸ் நிலையம் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×