search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
    X

    அஜித்குமார்

    அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

    • பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடினார்.
    • மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பரமக்குடி,

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி மகன் அஜித் குமார் (வயது24).

    இவர் கடந்த 5-ந் தேதி நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சிறு காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.

    காயம் காரணமாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டிருந்தார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    நேற்று இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி அஜித்குமார் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×