என் மலர்
நீங்கள் தேடியது "sacrifice"
- சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.
- சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கடுவெளி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அமலதாஸ் மனைவி மதலைமேரி (வயது 83). சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார்.
- கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கால சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துண்டி (வயது 53) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குரால் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் நிலத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து தூக்கிப் பார்த்த போது துண்டி இறந்து விட்டார் என தெரியவந்தது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி 1 கி.மீ. தூரம் இழுத்து சென்றதால் பரபரப்பு
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொஞ்ச மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சேகரின் மகன் சுதாகர் (வயது 26) விவசாயி. நேற்று இரவு சுதாகர் கிளியனூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர் அசோக் (27) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒழுந்தியாம்பட்டில் வேலை பார்க்கும் தனது தந்தை சேகரை பார்க்க சென்றனர். பின்னர் ஒழுந்தியாம்பட்டு அருகே சாலை ஒரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரி ஒன்று வந்தது.
இதனையடுத்து லாரி ஒழுந்தியாம்பட்டு பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சுதாகர், இவரது நண்பர் அசோக் மீது வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் லாரி மோதி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் சிதறி விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே சுதாகர் துடிதுடித்து இறந்தார். அசோக் பலத்த படுகாயம் அடைந்தார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி டிரைவர் தொடர்ந்து அங்கு இருந்து லாரியை ஓட்டி சென்றார். அப்போது சுதாகர், அசோக் வந்த மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் சாலையில் வேகமாக உறசி பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பயங்கர சத்தத்தை கேட்டு பதறினர். பின்னர் அவர்கள் சாலையில் தறிகெட்டு வந்த லாரியை மடக்கி டிரைவரை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவ ண்ணன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விப த்தில் உயிரிழந்த சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடை ந்த அசோகை மீட்டு சிகிச்சை க்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த விகத்தை நடத்திய தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (40) லாரி டிரைவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நின்று பேசிக்கொண்டி ருந்தபோது லாரி மோதி விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாவாடை சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை(48 )விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆவட்டியில் இருந்து வெங்கனூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் போது ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி சென்ற கார் இவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் 200 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு பாவாடை சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காணை போலீசார் விசாரணை
- உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 37). பூக்கடையில் பூக்களை மாலையாக கட்டும் பணிசெய்து வந்தார். திருமணமாகாதவர். இவரது உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது. அருகில் சென்று பார்த்தவர்கள், சுந்தரமூர்த்தி இறந்து கிடந்ததை உறுதி செய்து, காணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால் கழுவ சென்ற போது தவறி விழுந்தாரா, மதுபோதையில் தவறி விழுந்தாரா, யாரேனும் ஏரியில் தள்ளிவிட்டனரா என்பன போன்ற கோணங்களில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பவுர்ணமி யாகம் நடந்தது
- விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பௌர்ணமி மகாயாகம் நடைபெற்றது. யாகத்தில் சந்திராயன் 3 நிலவில் செல்ல காரணமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி செலுத்தியும்,விவசாயம் செழித்து வளரவும், சிறப்பு பிரார்த்தனை செய்ய ப்பட்டது.
இதில் நாடி செல்வ முத்துக்குமரன், பள்ளி தாளாளர் லெனின்,நாடி குணசேகரன், பொறியாளர் கதிரவன் தொழிலதிபர் ராகேஷ் குமார் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
- நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சித்திக் (வயது23). கடந்த ஏப்ரல் மாதம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுங்காயங்களுடன் சென்னை இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடன் சென்ற நண்பரும் உயிரிழப்பு
- கார்த்திக்ராஜா மணிகண்டன் அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார்.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கலை சேர்ந்தவர் குமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 28). தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிக்கு பண்ருட்டியில் நேற்று குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கார்த்திக்ராஜா அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24) என்ற நண்பரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார். குழந்தையை பார்த்து விட்டு இன்று பகல் 11 மணியளவில் பண்ருட்டியில் இருந்து பரிக்கலுக்கு புறப்பட்டனர். அப்போது திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள அரசூர் பாலம் அருகே காலை 11.30 மணிக்கு வந்த போது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகியோர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
தகவல் அறிந்த திருவெண்ணை நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தந்தை, அவரது நண்பர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் பரிக்கல் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது.
- சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே வாகனம் மோதி தந்தை, மகள் பலியானார்கள். கடலூர் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 41). கூலி வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுவினா (6). அதே பகுதியில் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு தனசேகர் அவரது மகள் மதுவினாவை கடலூர் - விருத்தாச்சலம் சாலை எஸ்.என். நகரில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை யார் ஓட்டியது ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை- மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மன்னார் சுவாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பாபு (35) டிங்கராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர் கிடங்கல் இரண்டு பகுதியைச் சேர்ந்த நீதி ராஜன் ஆகிய இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எம். ஆர். எஸ். கேட் டே நைட் ஹோட்டல் அருகே வரு ம்போது அதே மார்க்கமாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இந்த விபத்தில் பாபு சம்பவ இடத்திலேயே பலத்த காயங்கள் அடைந்து உயிரிழந்தார். அவருடன் வந்த நீதிராஜன் படுகாய ங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த திண்டிவனம் தனியார் சட்டக் கல்லூரியில் பயிலும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இறை தேசிகன் (20)மற்றும் தென்காசி பகுதிைய சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் படுங்காய ங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இந்த 3பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.