என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி"

    • ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
    • 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * திருச்சி பஞ்சப்பூரில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினேன்.

    * பஞ்சப்பூரில் ரூ.129 கோடியில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்துள்ளேன்.

    * ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டின் கல்வி தரம் பெருமளவு உயர்ந்துள்ளது.

    * மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளதற்கு பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதே சான்று.

    * தி.மு.க. ஆட்சியில் ஏராளமான முத்திரை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    * திராவிட இயக்கத்தின் பல்வேறு போராட்ட வரலாறு திருச்சியில் தான் தொடங்கியது.

    * 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடங்கியதும் முதல் பயணம் திருச்சி தான்.

    * ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகாமையில் ரூ.129 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த முனையத்தின் முன்புறம் பேரறிஞர் அண்ணா நிலையையும் அவர் திறந்துவைத்தார். இந்த கனரக வாகன சரக்கு வாகன முனையம் 8 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 250 கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 102 இருசக்கர வாகனங்கள் 46 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் இங்குள்ள வணிக வளாகத்தில் தரைதளத்தில் 51 கடைகளும் முதல் தளத்தில் 28 கடைகளும் உள்ளது.

    தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.

    இதிலும் தனியாக 19 சிறுநீர் கழிப்பிடம் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 27 சதுர மீட்டர் பரப்பளவில் பாதுகாவலர் அறை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு பிரம்மாண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.

    இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 14 படுக்கை வசதிகள் இடம் பெற்றுள்ளது 16 குளியல் அறைகள் உள்ளன. மேலும் 13 மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்குமான கழிவறை வசதிகள் கூடுதலாக இந்த கனரக சரக்கு வாகன முனையம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் 107 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    கனரக வாகன நிறுத்துமிடங்களை அறிவிப்பு செய்யும் வசதி, பாஸ்ட்டேக் மூலம் வசூல் செய்யும் வசதி, தொழில்நுட்ப காரணிகள் மற்றும் பசுமை புல் வெளி போன்றவை இடம்பெற்றுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    • 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.

    ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8ம் தேதி திருச்சி வருகிறார். 8,9ம் தேதிகளில் அவர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின்போது திருச்சியில் 2 நாட்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி 8ம் தேதி மாலை திருச்சி தில்லைநகர்- தென்னூர் சந்திப்பு சாலையில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை சுமார் 2 கி.மீ தொலைவுக்கு பொதுமக்களை சந்தித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே செல்கிறார்.

    மறுநாள் 9ம் தேதி காலை, கிராப்பட்டி போலீஸ் பட்டாலியன் மைதானம் அருகில் இருந்து கிராப்பட்டி, எடமலைப் பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் பசுமைப் பூங்கா வரை சுமார் 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.

    இதையொட்டி இந்த பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பலத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

    • கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.
    • ரூ.900 கோடியில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.

    திருச்சி:

    திருச்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்தோடு, கனரக சரக்கு வாகன முனையம், ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி அடிக்கல் நாட்டி னார். இதை தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. அமைச்சர் கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது.

    இதை தொடர்ந்து இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். மாலையில் அவர் திருச்சியில் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    9-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதிய பேருந்து முனைய திறப்பு விழா நடக்கிறது. விழாவில் புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து அங்கு நடைபெறும் அரசு விழாவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 55 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    மேல் தளத்தில் நகர பஸ்கள், கீழ் தளத்தில் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு மணி, 2 மணி நேரம் நிற்கக் கூடிய பஸ்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


    இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் எல்.ஈ.டி திரை அமைக்கும் பணிகள், கூரைப் பகுதியில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தல் நடந்து வருகிறது.


    மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேக தடங்கள் புல்வெளி பரப்புகள் அமைத்தல் மற்றும் ஒளிரும் போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகள் மற்றும் ஆம்னி தனியார் பேருந்து நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைய உள்ளதால் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார்.
    • விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அதிகாலை 4 மணிக்கு புறப்பட இருந்த விமானம், 6 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட விமானம் 113 பயணிகளுடன் ரன் வேயில் சிறிது தூரம் புறப்பட்டு சென்று தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் 10 கோரிக்கைகளை வழங்க வேண்டும்.
    • மதுரையில் நூலகம் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில், இன்று கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் நூலகங்கள் பற்றிப் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

    அன்பழகன் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கிற நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது என்ற கருத்தினை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதிலே குறிப்பாக, பொதுப் பணித்துறை சார்ந்த நான்கு ஆண்டு சாதனைகள் தொடர்பான புத்தகத்தில், ஏற்கெனவே இந்த அவையில் அறிவிக்கப்பட்டவாறு, திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்திற்கு தலைவர் கலைஞரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.

    நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரையில், தலைவர் கலைஞரின் திருக்கரங்களால் கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்திற்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமானப் பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்பதை எல்லோரும் அறிவர். இதுவரை சுமார் 16 லட்சம் பொதுமக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து, அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று என்னால் அறிவிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

    அதேபோன்று, திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்திற்கு கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன.

    கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

    எனவே, தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் அந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது
    • விபத்து தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 67). இவரது மனைவி மங்கையர்க்கரசி (வயது 64). பேரன் பிரதுன் (வயது 7), உறவினர்கள் பூஜா (வயது 20), ரஞ்சனா (வயது 20) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் ராஜபாளையத்திலிருந்து திருச்சி மாவட்டம், நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இன்று மாலை மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த செவந்தம்பட்டி விலக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையதடுப்பைத் தாண்டி எதிர்சாலைக்கு சென்று எதிரில் வந்த காரில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த இரண்டு கார்களும் விபத்துக்குள்ளான நிலையில் அந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா மற்றும் மற்றொரு காரில் சென்ற பத்மா ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது
    • இந்த வழக்கில் மொத் தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    திருச்சி:

    திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ். இவரது டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது.

    இந்த வழக்கு தொடர்பாக முதலில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பு எதுவும் துலங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது .

    புலன் விசாரணையின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    இந்த நிலையில் தொழில் அதிபர் துரைராஜ் யமுனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கில் மொத்தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்கள். அவர்களில் டி.எஸ்.பி. மலைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு டாக்டர் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள். இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் வக்கீல்கள் வாதம் நடைபெற்றது.

    இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்களின் வாதம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (25-ந்தேதி) வழங்கப்படும் என நீதிபதி ஜெயக்குமார் அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் திருச்சி மத்திய சிறை மற்றும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாமியார் கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அப்போது, கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளிகளான சாமியார் கண்ணன், யமுனா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    மேலும் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக சாமியார் கண்ணனுக்கு மட்டும் 5 ஆண்டுகள் சிறை, கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டுகளும், கார் எரிக்கப்பட்டதற்கு தலா 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு வழங்கினார்.

    • திருச்சி அரசு பள்ளி மாணவிவை பாராட்டினர்
    • சமூக அக்கறையில் சாதனை

    திருச்சி:

    உலகம் முழுவதும் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

    அந்த வகையில் கின்னஸ் சாதனையாளரும், திருச்சி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவியுமான சாய்னா ஜெட்லி பெண்கள் பாதுகாப்பு எண் 181 மற்றும் அவசர அழைப்பு எண் 100, தாய் மொழியை போற்றும் வகையில் முதல் எழுத்தான அ. மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 இவற்றை ஒரு மணி நேரம் கட்டை விரலால் தம் வைத்து 7 மீட்டர் அளவில் உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    இவரை 17-வது வார்டு கவுன்சிலர் எஸ்.கே.சாதிக் பாட்சா நேரில் பாராட்டினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் இவரது சமூக அக்கறையை பெரிதும் பாராட்டினார். இவரது இந்த சாதனை ஜெட்லி புக் ஆப் ரெகார்ட்ஸ் நேஷனல் ரெக்கார்ட்ஸ் ஆசிய பசிபிக் சாதனை ஆகிய புத்தகங்களில் இடம் பெற உள்ளது.

    இவர் ஏற்கனவே 20 முறை உலக சாதனைகள் செய்தவர் பெற்றோர் பிரபல கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி சசிகலா ஆவார்.

    • 500 கிலோ மீட்டர் தூரத்தை 15 நாட்களில் கடந்து வந்தனர்
    • தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் தேசம் காப்போம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை வலியுறுத்தி நடத்தப்பட்டது

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை வலியுறுத்தி திருச்சி முதல் கன்னியாகுமரி வரை புரட்சி நடைபயணம் நடத்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5-ந்தேதி திருச்சியில் இருந்து கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் தலைமையில் புரட்சி நடைபயணம் புறப்பட்டது. இந்த நடை பயணத்தை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா தொடங்கி வைத்தார். இந்த புரட்சி நடைபயணத்தின் நிறைவு விழா இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடந்தது. அதன்பின்னர் மாதவபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் புரட்சி நடை பயணத்தின் நிறைவு விழாகூட்டம் நடந்தது. திருச்சியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் 15 நாட்களில் கடந்து வந்துஉள்ளனர்.

    • பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து.
    • “நான்” எனும் அகங்காரம் பிரம்மனிடம் தென்பட்டது.

    திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

    பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது.

    இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் - ஈசன்

    கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீ பிரம்மன் வரலாறு

    நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி.

    பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை.

    எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

    ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிக பிரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார்.

    பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என "நான்" எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்" என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார்.

    பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார். தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

    ஆக, பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

    பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு,

    மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார்.

    "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

    பரிகாரத்தலம்

    நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வ நலத்துடன் வாழ வேண்டும் என்பதே.

    அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

    ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

    திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு.

    தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பரிகார முறை

    முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும்.

    ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தால் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம்.

    இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

    பொதுவான பரிகாரம்

    கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தை இன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

    • மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இங்கு வந்தனர்.
    • இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.

    மனைவியை விரட்டினால் தண்டனை தரும் லால்குடி சப்தரிஷிஸ்வரர்

    திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பாதையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது லால்குடி.

    இங்கு பழம்பெரும் சிறப்புமிக்க ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

    மனைவி மீது கோபப்பட்டு, மாமனார் வீட்டுக்கு விரட்டி விட்ட ஆண்களுக்கு தண்டனை தரும் கோவில் இது என்கிறார்கள்.

    மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்த ஊர்பக்கம் வந்தார்கள்.

    அப்போது திருவத்துறை ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

    அதனைக் கவனித்த மகாலிக்காபூர் அருகில் இருந்த தளபதியிடம் உருது மொழியில்," அது என்ன லால் (சிகப்பு) குடி (கோபுரம்)?.." என்றான். அச்சொற்றொடரே லால்குடி என்று மாறி விட்டது.

    இந்த கோவிலில் மிகப்பழமையான கோவில். மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி.

    சப்தரிஷிகளான அத்தரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது.

    இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.

    மாரிசி மகரிஷியின் பேரன் தான் சூரியன் அத்திரியின் மகன் தான் சந்திரன், சந்திரனின் மகன் புதன், அங்கீசரின் மகன் குரு, வசிட்டரின் வழி வந்தவர்தான் செவ்வாய்.

    எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும் என்று சொல்லப்படுகிறது.

    இங்குள்ள லிங்கத்தின் மேல் வரி வரியாய் பள்ளங்கள் காணப்படுகின்றன.

    தாரகா சூரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள்.

    சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார்.

    அதன் பொருட்டுத்தான் சூரனை அழிக்க முருகன் பிறந்தார்.

    அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர்.

    அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம் பாலகனாக உள்ள முருகனை கொண்டு வந்து அந்த 7 குடில் பகுதியில் போட்டார்.

    ரிஷி பத்தினிகள் அதிசயமாய் அந்தக் குழந்தையைப் பார்த்தனர்.

    பால குமாரன் லேசாய் அழத் துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர்.

    குழந்தைக்கு பசி ஏற்பட அழுகை அதிகரித்தது.

    ரிஷிபத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கிப் பரிவோடு தாலாட்டிப் பாலூட்டினார்கள்.

    வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர்.

    சிவனின் வாரிசுக்குப் பால் கொடுத்ததால் எவ்வளவு பெரும் பாக்கியம், காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே.

    அந்த நல்ல வாய்ப்பைப் கெடுத்து, அந்தப் புகழைக் கார்த்திகைப் பெண்களுக்குக் கொடுத்து விட்டீர்களே என்று மனைவியரை அடித்து விரட்டினர்.

    முருகப் பெருமான் தனது அவதார காரணத்தை உணர்ந்தார்.

    தாராகா சூரனைக் கொன்று போட்டு, வெற்றி வீரராய்த் திரும்பிக் கொண்டிருந்தபோது, சப்தரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார்.

    அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார்.

    நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர்., பலன் கிடைக்கவில்லை.

    பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்துக் கடும் தவும் புரிந்தனர்.

    கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்குப் பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு கடும் தவம் இருந்தனர்.

    இதையடுத்து சிவன் ஆண்களுக்கு சாப விமோசனம் தரும் தலமாக இது கருதப்படுகிறது.

    ×