என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egmore"

    • உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
    • குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு கீழ்கண்ட ரெயில்கள் செல்லாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    1. உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்

    2. கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயிலும் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    3. ராமேஸ்வரம் - சென்னை சேது அதிவிரைவு ரெயிலும் இயக்கப்படும்10 முதல் 29 வரை தாம்பரம் மட்டுமே இயக்கப்படும்.

    4. ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்

    5. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    6. ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்

    7. மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    8. சென்னை எழும்பூர் மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் எழும்பூருக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்

    • தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    சென்னை மாநகராட்சி முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்ததோடு, அவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றவும் உத்தரவிட்டது.

    சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13-ந் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    தூய்மைப் பணியாளர்கள் எதிர்த்தபோதும், அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களிலும், சமூக நலக்கூடங்களிலும் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

    தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அடுத்தகட்டமாக அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக உழைப்பாளர்கள் உரிமை இயக்கத்தின் பாரதி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மண்டலம் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பை திரும்பப் பெற்றது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால், செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.

    இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    • தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
    • 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே அறிவிப்பு .

    நாளை (வெள்ளிக்கிழமை) சுதநதிர தினம் என்பதால் தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சிறப்பு ரெயில் இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாளை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும். 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் நெல்லையில் இருந்தும் சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

    இந்நிலையில், இந்த ரெயில் இன்று 2.45 மணி நேரம் தாமதாக புறப்படும் என்று தென்னிந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆகவே இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று இரவு பயணம் மேற்கொள்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

    • மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது.
    • சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது. இரவிலும் லேசான மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    தலைமை செயலகம், எழிலகம், அண்ணாசாலை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதியிலும், வட சென்னை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.

    காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டதால் அரசு அலுவலகங்கள் சிறிது நேரம் இருளில் மூழ்கின. பின்னர் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் வினியோகம் வழங்கப் பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறு வனங்களும் இதனால் சிறிது நேரம் பாதிக்கப் பட்டன.

    பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர் பாடி, தண்டையார் பேட்டை, வண்ணாரப் பேட்டை, மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதால் வீடுகளில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர்.

    எண்ணூரில் இருந்து மணலி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வரக்கூடிய மின் வழித்தடத் தில் ஏற்பட்ட தடை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணலி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அங்கு வரக்கூடிய மின்சாரம் தடைப்பட்டதால் பெரும் பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

    இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போர்க்கால வேகத்தில் பழுது சரி பார்க்கப்பட்டதை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் படிப்படியாக மின் வினியோகம் சீரானது.

    • எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை தினமும் காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம்.
    • தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம் நாளை (23ம் தேதி), நாளை மறுதினம் (24ம் தேதி) நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ஐ. பரந்தாமன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்.? என்ன செய்ய வேண்டும்… எப்படி செய்ய வேண்டும்... உங்களுக்கான பதிவுதான் இது..!" என குறிப்பிட்டிருந்தது.

    மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    நம் அனைவருக்கும் வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை தேடி பார்த்துவிட்டு இல்லை என்று ஏமாற்றம் அடைவதைவிட சிறப்பு முகாமை பயன்படுத்தி பெயர் பதிவு செய்துக் கொள்ளலாம்.

    இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. அதன்படி, இம்மாதம் நாளை மற்றும் நாளை மறுநாள் (23ம், 24ம் தேதிகளில்) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    யார் யாருக்கெல்லாம் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையோ அவர்களும், வரும் ஜனவரி மாதத்தில் 18 வயது பூர்த்தி செய்யும் இளைஞர்களும் வாக்காளர் சிறப்பு முகாமிற்கு சென்று பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம்.

    ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பிழை ஏதேனும் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். முகவரி மாறியிருப்பவர்கள், எழும்பூர் தொகுதிக்கு குடிவந்தவர்கள், அடுத்த முறை எழும்பூர் தொகுதியில் இருந்து வாக்கு செலுத்த நினைப்பவர்கள் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

    அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, தேர்தல் நேரத்தில் தங்களின் இருப்பிடத்தின் அருகாமையில் செயல்படும் வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். அங்கு, வாக்காள அதிகாரிகள் இருப்பார்கள். திமுகவின் நிர்வாகிகளும் தங்களுக்கு உதவ காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    நீங்கள் அங்கு செல்லும்போது 18 வயது பூர்த்தியானதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் அல்லது படிப்புச் சான்றிதழ் உடன் எடுத்துக் செல்லவும்.

    முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இருப்பிடச் சான்றிதழுக்கு அட்டாச்சியாக பேங்க் பாஸ் புக், கேஸ் பில், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, சொத்து பத்திரம் ஆகியவை உடன் எடுத்துச் செல்லுங்கள்.

    இந்த ஆவணங்களை எடுத்துச் செல்லும்போது அங்கு தரப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.

    வாக்காளர் சிறப்பு முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுவதால் விடுமுறை தினத்தை வீட்டில் இருந்தே கழிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

    இந்த இரண்டு நாட்களில் உங்களுக்கு சவுகரியப்படக்கூடிய ஒரு நாளில் 10 நிமிடம் செலவழித்து பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

    எழும்பூர் தொகுதி மக்கள் உங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தல் போன்றவற்றை சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது.
    • பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காச்சி குடாவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது.

    ரெயில் காட்வாலா, ராஜோலி ரெயில் நிலையங்களை கடந்து நேற்று இரவு கடவாலா ரெயில் நிலையத்திற்கு வந்தது நின்றது. பயணிகள் ரெயிலில் இருந்து ஏறி, இறங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது. பின்னர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.


    இதனைக் கண்ட பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் ரெயில் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் ரெயில் பெட்டியை ஊழியர்கள் சரி செய்த பிறகு காலதாமதமாக ரெயில் மீண்டும் சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

    • அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
    • அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை.

    திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்குக் கிடைக்கின்றன.

    இந்த திட்டங்கள் எல்லாமே எழும்பூர் தொகுதி மக்களிடம் முழுமையாக சென்றடைந்துவிட்டதா என்பதை அறியவும் மக்களின் குறைகளைக் கேட்டறியவும் வீடு வீடாகச் சென்று தரவுகள் சேகரிக்கும் பணியில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் குழுவினர் களப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

    இந்த களப்பணி குழுவினர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேடு வழங்குகிறார்கள்.

    அதோடு, திராவிட மாடல் அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற உதவிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்கிறார்கள். 

    அதோடு, சுய உதவிக் குழுவில் சேர்ந்திருக்கிறார்களா அல்லது சேர விரும்புகிறார்களா? என்றும் மேலும் சிறு தொழில் தொடங்குவதற்கு விருப்பம் இருக்கிறதா என்பதையும் கேட்டு அறிகிறார்கள்.

    அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான உதவிகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கபடுகிறது.

    இந்த வகையில், திராவிட மாடல் அரசு வழங்கும் திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் எழும்பூர் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டு, வீடு தோறும் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

    இதன் மூலம் அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தேவையான உதவிகள் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை திட்டம் போட்டு செயல்படுத்தி வருவதாக எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்தார்.

    எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் ஏட்டு வீட்டில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஏட்டு ராஜன்.

    அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் நேற்று சொந்த ஊரான தஞ்சைக்கு சென்று விட்டு திரும்பினார். எழும்பூர் போலீஸ் குடியிருப்புக்கு வந்ததும் தனது வீட்டில் அசந்து தூங்கிவிட்டார்.

    இன்று காலையில் எழுந்து தான் எடுத்து வந்த பையில் இருந்த 10 பவுன் நகையை பீரோவில் வைப்பதற்காக பார்த்தார். அப்போது அது காணாமல் போயிருந்தது. இதுபற்றி எழும்பூர் போலீசில் ஏட்டு ராஜன் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக எழும்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பையில் இருந்த நகை காணாமல் போனது எப்படி? என்று தெரியவில்லை.

    வீட்டில் வைத்திருந்த போது திருடப்பட்டதா? இல்லை வேறு எங்காவது வைத்து நகை மாயமானதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    எழும்பூர் புதுப்பேட்டையில் 80 போலீஸ் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவினை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் மாநகர் காந்திபுரத்தில் 10 கோடியே 90 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    44 கோடியே 76 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 339 காவலர் குடியிருப்புகள், காவல் நிலையம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம், தீயணைப்பு ஊர்தி நிறுத்துவதற்கான கட்டடம் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    சென்னை எழும்பூர் புதுப்பேட்டையில் 80 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9-ம் அணிக்காக 82 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருநெல்வேலி ஊரக ஆயுதப்படைக்காக 162 காவலர் குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் 15 காவலர் குடியிருப்புகள், என 41 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 339 காவலர் குடியிருப்புகள்.

    சென்னை மாதவரத்தில் 1 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதவரம் பால் பண்ணை காவல் நிலையக் கட்டடம்; தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 67 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம்; காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் 1 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வான்நோக்கி உயரும் 104 மீட்டர் நீளம் கொண்ட ஏணி ஊர்தியினை நிறுத்துவதற்கான கட்டடம் என மொத்தம், 55 கோடியே 67 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    ×