search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் ஏட்டு வீட்டில் நகை திருட்டு
    X

    எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் ஏட்டு வீட்டில் நகை திருட்டு

    எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் ஏட்டு வீட்டில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஏட்டு ராஜன்.

    அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் நேற்று சொந்த ஊரான தஞ்சைக்கு சென்று விட்டு திரும்பினார். எழும்பூர் போலீஸ் குடியிருப்புக்கு வந்ததும் தனது வீட்டில் அசந்து தூங்கிவிட்டார்.

    இன்று காலையில் எழுந்து தான் எடுத்து வந்த பையில் இருந்த 10 பவுன் நகையை பீரோவில் வைப்பதற்காக பார்த்தார். அப்போது அது காணாமல் போயிருந்தது. இதுபற்றி எழும்பூர் போலீசில் ஏட்டு ராஜன் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக எழும்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பையில் இருந்த நகை காணாமல் போனது எப்படி? என்று தெரியவில்லை.

    வீட்டில் வைத்திருந்த போது திருடப்பட்டதா? இல்லை வேறு எங்காவது வைத்து நகை மாயமானதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×