என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog bite"

    • ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவது சாத்தியமற்றது
    • பொதுப் பாதுகாப்பு விஷயங்களில், 'வருமுன் காப்பதே சிறந்தது'

    உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழக்கை விசாரித்தது.

    நவம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற கடைசி விசாரணையின்போது, நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் இருந்து தெருநாய்களை அகற்றுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கருத்துகள் சில;

    நாயின் மனதை படிக்கமுடியாது

    விசாரணை தொடர்ந்தபோது, ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. பொதுப் பாதுகாப்பு விஷயங்களில், 'வருமுன் காப்பதே சிறந்தது' என்றும் வலியுறுத்தியது. 

    மாநிலங்களின் மோசமான ஒத்துழைப்பு

    விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடு (Animal Birth Control) மற்றும் அவற்றிற்கான இருப்பிடங்களை உருவாக்குவது தொடர்பான செயல்பாட்டு அறிக்கைகளை 10 மாநிலங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் காட்டாதது அல்லது அரசின் அலட்சியத்தன்மையை (மெத்தனப் போக்கை) காட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நிறுவன தோல்வி

    பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற முக்கியமான பொது இடங்களை தெருநாய்களின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதில் உள்ள 'கட்டமைப்பு ரீதியான தோல்வி' குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது கவலையைத் தெரிவித்தது. பாதுகாப்புக்காக இந்த இடங்களிலிருந்து தெருநாய்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், மீண்டும் அந்த இடங்களிலேயே அவை விடப்படக்கூடாது என்றும் நவம்பர் 7 அன்று தான் பிறப்பித்த உத்தரவை அது சுட்டிக்காட்டியது.

    நிர்வாக சிக்கல் மற்றும் செலவுகள்

    நீதிபதிகளின் கருத்துகளுக்கு மத்தியில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, இந்தியாவில் சுமார் 5.25 கோடி தெருநாய்கள் இருப்பதாகவும், அவற்றைப் பராமரிக்க 77,000 தங்குமிடங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்தார். அவற்றுக்கு உணவளிக்க தினமும் சுமார் ரூ.62 கோடி செலவாகும் என்று தெரிவித்த அவர், இதில் உள்ள நிர்வாக சிக்கல்களை விளக்கினார்.

    சமூக நாய்கள் மற்றும் தெரு நாய்கள்

    விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தெரு நாய்களுக்கும், நிறுவனப் பகுதிகளில் காணப்படும் நாய்களுக்கும் இடையே வேறுபாடு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிறுவனப் பகுதிகளில் உள்ள நாய்களை "சமூக நாய்கள்" என்று குறிப்பிட்ட அவர், அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்குப் பதிலாக, விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் (ABC) கீழ் நிர்வகிக்க வேண்டும் என்றார்.

    தற்போதைய சட்டங்களின் கீழ் நாய்களுக்கு உணவளிப்பதன் சாத்தியக்கூறுகளையும் சிபல் கேள்வி எழுப்பினார். அதற்கான மிகப்பெரிய செலவுகளையும், நிர்வாக தேவைகளையும் யார் ஏற்பார்கள் என்று கேட்ட அவர், நாய்களைப் பெருமளவில் நிறுவனங்களில் அடைப்பதற்கு எதிராகவும் வாதிட்டார். 

     மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள்

    இந்த வழக்கில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வ்ஸ், நாய் கடி தொடர்பான புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தி காட்டப்படுவதாக வாதிட்டார். மேலும், ஒவ்வொரு ரேபிஸ் தடுப்பூசியையும் ஒரு தனித்தனி நாய் கடி வழக்காகக் கணக்கிடுகிறார்கள், அதாவது ஒரு நாய் கடி சம்பவம் என்பது 5 முதல் 7 தனித்தனி வழக்குகளாகக் கணக்கிடப்பட வாய்ப்புள்ளது என்றுக் கூறினார். 

    நெடுஞ்சாலை பாதுகாப்பு

    இந்திய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள் (நாய்கள் மற்றும் கால்நடைகள் இரண்டும்) குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாகத் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியது. சமீபத்திய விபத்துகளைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சாலைகளில் தடுப்புகளை (Barricades) அமைப்பது குறித்து NHAI மற்றும் மாநில அரசுகளிடம் விளக்கம் கோரியுள்ளது.

    எண்ணிடலங்கா மனுக்கள்

    இந்த வழக்கு தொடர்பாகத் தங்களுக்கு வந்துள்ள மனுக்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் தனது வியப்பை வெளிப்படுத்தியது. 'பொதுவாக மனிதர்கள் தொடர்பான வழக்குகளில் கூட இவ்வளவு விண்ணப்பங்கள் வருவதில்லை' என்றும்  குறிப்பிட்டது.

    • அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.
    • பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.

    உத்தரப் பிரதேசத்தில் வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த கிராம மக்கள் 200 பேருக்கு ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 23-ம் தேதி அந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வின்போது, வந்திருந்தவர்களுக்கு உணவுடன் ரய்தா எனப்படும் தயிர் பச்சடி பரிமாறப்பட்டது.

    அந்த பச்சடியை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான எருமையிடமிருந்து கறக்கப்பட்டது. அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.

    துக்க நிகழ்வு முடிந்து சில நாட்களில், அதாவது டிசம்பர் 26 அன்று, அந்த எருமை திடீரென உயிரிழந்தது. அது ரேபிஸ் நோய் அறிகுறிகளுடன் இறந்ததைக் கண்ட கிராம மக்கள், அதன் பாலைக் கொண்டு செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்டதால் தங்களுக்கும் நோய் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மூழ்கினர்.

    தகவலறிந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக கிராமத்திற்கு விரைந்தனர். பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.

    இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமேஸ்வர் மிஸ்ரா கூறுகையில், "பொதுவாக பாலை நன்றாகக் காய்ச்சிக் குடிப்பதன் மூலம் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இருப்பினும், மக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதுவரை யாருக்கும் பாதிப்பு அறிகுறி தென்படவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். 

    • கடந்த ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.8 லட்சம் ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆகவும் இருந்தது.
    • 2023 இல் 4.41 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர் பாதிக்கப்பட்டனர்.

    தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

    அறிக்கைப்படி, 2025ஆம் ஆண்டில் தமிழகத்தில் இதுவரை நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.8 லட்சம் ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆகவும் இருந்தது.  

    2023 இல் 4.41 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

    2022 இல் 3.64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு ரேபிஸ் தொற்றுக்கு 28 பேர் இறந்துள்ளனர். 2021 இல் 3.19 லட்சம் பேர்  பாதிக்கப்பட்டு, 19 பேர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது.
    • தினேஷ் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஜல்லுத்து பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தினேஷ் (வயது15). இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது. இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய் கடித்தபோது சிறுவன் கழிவுநீர்க் கால்வாயில் விழுந்து காயமடைந்துள்ளான்.
    • ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவியது.

    தெலுங்கானாவில் 4 வயது சிறுவன் ரக்ஷித்தை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் துங்கூரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் ரக்ஷித்தை 2 மாதங்களுக்கு முன்பு, வெறிநாய் கடித்தது. நாய் கடித்தபோது சிறுவன் கழிவுநீர்க் கால்வாயில் விழுந்து காயமடைந்துள்ளான். அவனது காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நாய் கடித்ததற்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று தெரிகிறது.

    ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவி, உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    • மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • கடந்த 4 மாதமாக குழந்தைக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம் சாஸ்திரி பரங்கேயை சேர்ந்த 4 வயது சிறுமி கதிராபானு. சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய் திடீரென ஆவேசம் அடைந்து சிறுமி கதிராபானுவை கடித்து குதறியது. இதில் சிறுமியின் முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் தெருநாயிடம் இருந்து சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறுமியை பெங்களூருவில் உள்ள இந்திராகாந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அப்போது மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடந்த 4 மாதமாக குழந்தைக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளித்தும் குழந்தை கதிராபானு இறந்து விட்டது.

    கர்நாடகாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 2.8 லட்சம் பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் 26 பேர் இறந்து இருப்பதாகவும் மாநில கண்காணிப்பு பிரிவின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

    • மனிதனும் 3 நாள் பட்டினியாக இருந்தால் அந்த நாயை விட வெறிபிடித்தவனாக மாறி விடுவான்.
    • நாய்களை அடைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.

    அந்த பேரணியில் பங்கேற்று பேசிய பிரியா என்பவர், "பசியினால் தான் நாய் மனிதனை கடிக்க துரத்துகிறது. சாப்பிடாமல் உங்களால இருக்கமுடியுமா? நாய் 3 நாள் சாப்பிடாமல் இருக்கிறது. மனிதனும் 3 நாள் பட்டினியாக இருந்தால் அந்த நாயை விட வெறிபிடித்தவனாக மாறி விடுவான். நாய்களுக்கான கருத்தடையை ஒழுங்காக செய்யுங்கள். நாய்களை அடைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும். நாய்க்கு சாப்பாடு போடுங்கள். இல்லையென்றால் நாய்க்கு வெறி பிடிக்க தான் செய்யும்" என்று தெரிவித்தார்

    • தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
    • தெருநாய்களுக்கு ஆதரவாக திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்

    டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.

    அந்த பேரணியில் பங்கேற்று பேசிய பெண் ஒருவர், "தெருநாய்க்கு ஒரு பிஸ்கட் போட்டால் காலம் முழுக்க அந்த நாய் வாலாட்டி கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நாயை அடைக்க வேண்டும் என்று சொல்வது மனிதாபிமானமா? தெருநாய்கள் மனிதர்களை கடிக்கிறது என்று கூறுகிறீர்களே? எதாவது ஒரு மனிதன் நாயை அடித்து உதைப்பதால் தான் இன்னொரு மனிதனை நாய் கடிக்கிறது. ஒரு மனுஷன் செஞ்ச கேவலமான செயலால்தான், தற்காப்புக்காக இன்னொரு மனுஷனை நாய் கடிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மனிதாபிமானத்தை கற்றுக்கொடுக்க வில்லை என்றால் யார் கற்று கொடுப்பது? நாய்கள் தற்காத்து கொள்ள தான் மனிதர்களை கடிக்கிறது" என்று தெரிவித்தார். 

    • தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது
    • தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

    டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.

    • தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது
    • தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

    டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய விலங்கு நல ஆர்வலரும் பாஜக முன்னாள் எம்.பி.யுமான மேனகா காந்தி, "டெல்லியில் லட்சக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. அனைத்து வசதிகளுடன் காப்பகம் உருவாக்க ரூ.15,000 கோடி தேவைப்படும். அதற்கு சாப்பாடு போட வாரம் ரூ.5 கோடி வேண்டும். இது சாத்தியமா?. நாய் கடித்து சிறுமி உயிரிழந்ததாக ஏதோ ஒரு போலிச் செய்தியை வைத்து, உச்ச நீதிமன்றம் கோபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றி விட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
    • தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

    டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    • தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
    • இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு நடவடிக்கை

    டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    ×