search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "activists"

    • அம்மாபேட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சாலியமங்களம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஏவி.சூரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி .

    அம்மாபேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முகபிரபு, முன்னாள் அமைச்சர் சிவபதி, கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ, பேசும் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.

    மாவட்ட பொருளாளர் ராம்குமார், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட துணை தலைவர் திருமாவளவன், மெலட்டூர் நகர செயலர் சின்னதுரை, ஓன்றிய இணை செயலாளர் சுமத்ராமோகன் உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அண்ணாகிராம வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கண்டரக்கோட்டையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    அண்ணாகிராம வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கண்டரக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கவுரி பாண்டியன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் எம்.சி.சம்மந்தம் முன்னிலை வகித்தனர். அண்ணாகிராம ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் கிளைக் கழகங்களில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது, மேலும் அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடியாரை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பது எனவும், அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாட்டில் அதிகளவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அனைத்து ஊராட்சி கிளைகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அவை தலைவர்கள் செல்வராஜ், பாண்டியன், மாவட்ட பிரதிநிதி விஸ்வநாதன், ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர்கள் ரஜினி, உமா துரைராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடந்தது.
    • கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (26-ந் தேதி) மாலை 3.30 மணி அளவில் ராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் மகாலில் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    ×