என் மலர்
நீங்கள் தேடியது "நாய் கடித்தது"
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது.
- தினேஷ் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஜல்லுத்து பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தினேஷ் (வயது15). இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது. இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
- கடந்த 4 மாதமாக குழந்தைக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம் சாஸ்திரி பரங்கேயை சேர்ந்த 4 வயது சிறுமி கதிராபானு. சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய் திடீரென ஆவேசம் அடைந்து சிறுமி கதிராபானுவை கடித்து குதறியது. இதில் சிறுமியின் முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் தெருநாயிடம் இருந்து சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறுமியை பெங்களூருவில் உள்ள இந்திராகாந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடந்த 4 மாதமாக குழந்தைக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளித்தும் குழந்தை கதிராபானு இறந்து விட்டது.
கர்நாடகாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 2.8 லட்சம் பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் 26 பேர் இறந்து இருப்பதாகவும் மாநில கண்காணிப்பு பிரிவின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
- ராஜா கூலித் தொழிலாளி இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
- சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை பவளக்கொடி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் நாட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இவர் சோர்வாகவும், வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாவண்யா சிறுவர்-சிறுமியருடன் சாலையில் நின்று விளையாடினாள்.
- லாவண்யா உள்பட 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயம் அடைந்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் கிராமத்தை சேர்ந்தவர் கீரலிங்கா. இவர் தனது மனைவி மற்றும் லாவண்யா என்ற 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாவண்யா, அந்த பகுதியை சேர்ந்த மற்ற சிறுவர்-சிறுமியருடன் சாலையில் நின்று விளையாடினாள். அப்போது தெருநாய் ஒன்று திடீரென விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில் லாவண்யா உள்பட 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயம் அடைந்தனர்.
கழுத்தில் படுகாயம் அடைந்த லாவண்யா உள்பட அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பினர். லாவண்யாவும் வீடு திரும்பினாள்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென சிறுமி லாவண்யா உயிரிழந்தாள்.
- விக்கிரவாண்டியில் நாய் கடித்து குதறியதில் 10 ஆடுகள் இறந்தன.
- தினம்தோறும் ஆடுகளை மேய்ச்சல் செய்து விட்டு பண்ணையில் அடைத்து வளர்த்து வந்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி வசித்து வருபவர் ஜாகிர் உசேன் இவருக்கு சொந்தமான சுமார் 50 ஆடுகள்விக்கிரவாண்டி கீழக்கொந்தை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டின் அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்தார். ராமச்சந்திரன் தினம்தோறும் ஆடுகளை மேய்ச்சல் செய்து விட்டு பண்ணையில் அடைத்து வளர்த்து வந்தார் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு பண்ணையில் அடைத்து விட்டு இரவு தூங்கிவிட்டார் .நேற்று இரவு அடையாளம் தெரியாத நாய் ஆட்டுப்பண்ணையில் உள்ளே புகுந்து பன்னையிலிருந்து ஆடுகளை கடித்து குதறியது இதில் பத்து ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இருந்தன .அதிகாலை எழுந்து பார்த்தபோது 10 ஆடுகள் நாய்கள் கடித்து இறந்து கிடந்தன.






