என் மலர்
நீங்கள் தேடியது "girl death"
- பிரியதர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
- பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார்.
பூந்தமல்லி:
மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திப்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது 2½ வயது மகள் பிரணிகாஸ்ரீ. பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை பிரிய தர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பிரிய தர்ஷினியை வீட்டின் வெளியே வந்து தேடியபோது அருகில் உள்ள காலி மைதானத்தில் தேங்கி இருந்த மழைநீரில் மகள் பிரணிகாஸ்ரீ கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மகளை மீட்டு மலையம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை பிரணிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வீட்டில் தாயுடன் தூங்கியபோது எழுந்த பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார். அப்போது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாங்காடு போலீசார் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை பிரணிகா ஸ்ரீ உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
- கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சகோதரர் உறவுமுறை உள்ளவரை காதலித்த சிறுமி (17) 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர். கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியின் தாய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- சந்தியாவும், அவரது கணவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி(வயது3).
சிறுமி கல்யாணி மட்டக்குழி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று வந்தாள். நேற்று அங்கன்வாடி மையத்துக்கு சென்றிருந்த சிறுமியை, தாய் சந்தியா அழைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வரும் வழியில் தனது மகள் திடீரென காணாமல் போய் விட்டதாக சந்தியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து சிறுமி கல்யாணியை தேடினர். மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டது. மேலும் சிறுமியை அழைத்துவந்த இடம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து சிறுமியின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக சில தகவல்களை தெரிவித்தாக தெரிகிறது. இதனால் சிறுமியின் தாய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இறுதியில் சிறுமியை சாலக்குடி ஆற்றுக்கு அருகே விட்டுவிட்டு வந்ததாக சந்தியா தெரிவிததுள்ளார்.
இதனால் சிறுமியை ஆற்றுக்குள் வீசியிருக்கலாம் என்று கருதி ஆற்றுக்குள் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. "ஸ்கூபா டைவிங்" வீரர்கள் வரவழைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 8 மணி நேர தேடு தலுக்கு பிறகு ஆற்றில் மூழ்கிக்கிடந்த சிறுமி கல்யாணியின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் தாய் சந்தியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தான் சிறுமியை ஆற்றுக்குள் வீசியது தெரியவந்தது. சந்தியாவும், அவரது கணவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்தநிலையில் தான் அங்கன்வாடி மையத்தில் இருந்து மகளை அழைத்து வந்த சந்தியா, ஆற்றுக்குள் மகளை வீசியிருக்கிறார். மேலும் தனது மகள் மாயமாகிவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். கணவர் மீதான ஆத்திரத்தில் அவர் தனது குழந்தையை ஆற்றில் வீசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் சந்தியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்தபிறகே, தனது மகளை சந்தியா எதற்காக ஆற்றில் வீசி கொன்றார்? என்பது தெரிய வரும். விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
- விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர்.
- தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை:
மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மழலையர் பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி பலியான விவகாரத்தில் மதுரை கே.கே. நகர் தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.
- விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
- தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மதுரை:
மதுரை கே.கே. நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பயின்று வருகின்றனர்.
தற்போது 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது.
இன்று காலை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அந்த பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதன் அருகி லேயே தண்ணீர் தொட்டி உள்ளது. போதிய பாதுகாப்பின்றி தண்ணீர் தொட்டி திறந்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆருத்ரா ஆபத்தை உணராமல் அதன் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட மழலையர் பள்ளி செயல் பட்டது குறித்து தெரிய வில்லை. விதிகளை மீறி செயல்பட்டதும், குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமி உள்ளிட்ட 6 பேரை கடித்த தெருநாய் அன்றைய தினம் இறந்துவிட்டது.
- நாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. அங்கு தெருநாய்களின் தாக்குதலுக்கு அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் தெருநாய் கடித்ததில் காயமடைந்த 6 வயது சிறுமி ரேபிஸ் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தேஞ்சிப் பாலம் பெருவள்ளூர் காக்கத்தடம் பகுதியை சேர்ந்தவர் சல்மானுல் பாரிஸ். இவரது மகள் சியா பாரிஸ். 6 வயது சிறுமியான சியா, கடந்தமாதம்(மார்ச்) 29-ந்தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.
அப்போது அந்த பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு தெரு நாய், சிறுமியை துரத்தி கடித்தது. சிறுமியின் தலை, கால் உள்ளிட்ட இடங்களில் தெருநாய் கடித்து குதறியது. சிறுமி மட்டுமின்றி அவரை காப்பாற்ற முயன்ற பெண் உள்பட 5 பேரையும் அந்த நாய் கடித்தது.
தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி, சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெறி நாய் கடிக்கான தடுப்பூசி போடப் பட்டது.
இந்தநிலையில் சிறுமி உள்ளிட்ட 6 பேரை கடித்த தெருநாய் அன்றைய தினம் மாலையில் இறந்துவிட்டது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வெறிநாய் கடிக்கு போடப்பட வேண்டிய அனைத்து டோஸ் மருந்துகளும் சிறுமிக்கு போடப்பட்டுள்ளது.
2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிறுமி சியா வீட்டுக்கு திரும்பினாள். டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வந்தாள். நாய் கடித்ததால் சிறுமிக்கு ஏற்பட்டிருந்த காயங்களும் குணமாகிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் வந்தது.
இதனால் சிறுமி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு ரேபிஸ் பாதித்திருந்தது தெரிய வந்தது. இதனால் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் சிறுமி சியா இன்று காலை பரிதாபமாக இறந்தாள். வெறிநாய் கடிக்கான அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்ட நிலையில் சிறுமி இறந்து விட்டது அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. வெறிநாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி பலியான சம்பவம் மலப்புரத்தில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
- இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.
இவர் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா (வயது 50). இவர்கள் குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்றனர்.
சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா மற்றும் கிளாடிஸ் ரேபேக்காவின் தங்கையான சென்னை நியூ பெருங்களத்தூரை சேர்ந்த ஸ்டெபி புஷ்பா செல்வின், அவரது கணவர் சரண், சிறுமி அவினா (5) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேர் ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிஸ் இறங்கினார். அவருடன், அவரது தங்கை மகளான அவினாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கினர்.
உடனே கரையில் இருந்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்து சென்றனர்.
இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காயமடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
- சந்தோஷ், முத்தையா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்
எட்டயபுரம் அருகே காதலிக்க மறுத்த சிறுமி மீது வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்தார். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுமி எட்டயபுரம் போலீசாருக்கு அளித்த அந்த வாக்குமூலத்தில், 'பாட்டியின் வீட்டில் தனியாக இருந்தபோது சந்தோஷ் தனது நண்பருடன் வந்தார். சந்தோஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்' என்று கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் சந்தோஷ், முத்தையா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வாலிபரால் மண்எண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி பலியானார்.
கடந்த 23-ந்தேதி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.
- அனிதா வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
- மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அனிதாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண தாயுடன் வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்ததில் காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயம் அடைந்தார்.
காயம் அடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண தாயுடன் வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் காவலாளி சம்பத் கேட்டை பூட்டுவதற்காக இரும்பு கதவை சாத்தினார்.
- வணிக வளாகத்துக்கு ஆசை ஆசையாக தந்தையை பார்க்க வந்த சிறுமி பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை நம்மாழ்வார்பேட்டை சிவகாமிபுரம் பரகாரோடு பகுதியில் வசித்து வருபவர் சங்கர். டிரைவரான இவர் கீழ்ப்பாக்கம் ஹர்லிக்ஸ் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
அடுக்குமாடிகளை கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தில் உள்ள தனியார் துணிக்கடைக்கு சொந்தமான அடுக்குமாடி வாகன நிறுத்தும் வசதியும் வணிக வளாகத்தில் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடத்தில் தான் சங்கர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
துணிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்களை அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்துக்கு கொண்டு சென்று விடுவது, பின்னர் அந்த கார்களை எடுத்து வந்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளை சங்கர் செய்து வந்தார்.
தினமும் வேலை முடிந்ததும் கணவர் சங்கரை அழைத்துச் செல்ல மனைவி வாணி, வணிக வளாகத்துக்கு வருவார். இதன்படி நேற்று இரவு 9 மணி அளவில் வாணி வந்தார்.
அப்போது தந்தையை பார்ப்பதற்காக 5 வயது மகளான ஹரிணியும் உடன் வந்திருந்தார். இருவரும் சங்கரை எதிர்பார்த்து வணிக வளாகத்தின் வாயிலில் இரும்பு கதவு அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் 65 வயது காவலாளி சம்பத் என்பவர் கேட்டை பூட்டுவதற்காக இரும்பு கதவை சாத்தினார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இரும்பு கதவு திடீரென கீழே விழுந்தது. இதில் சிறுமி ஹரிணி சிக்கிக்கொண்டாள்.
இதனை பார்த்த தாய் வாணி கூச்சல் போட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். இரும்பு கதவு வேகமாக விழுந்ததில் சிறுமி ஹரிணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதுபற்றி அறிந்ததும் சங்கரும் ஓடிவந்தார். மகளின் தலையில் இருந்து ரத்தம் பீரிட்டு வெளியேறியதை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஹரிணியை சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிணிக்கு டாக்டர்கள் தலையில் கட்டு போட்டு சிகிச்சை அளித்தனர். சிறுமியின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
நள்ளிரவு 1.15 மணி அளவில் சிறுமி ஹரிணி உயிரிழந்தார். இதுபற்றி கேள்விப்பட்டதும், தந்தை சங்கர், தாய் வாணி ஆகியோர் கதறி அழுதனர். வணிக வளாகத்துக்கு ஆசை ஆசையாக தந்தையை பார்க்க வந்த சிறுமி திடீரென பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 304 ஏ.ஐ.பி.சி. (விபத்து மரணம்) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இரும்பு கதவை சாத்திய காவலாளி சம்பத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இரும்பு கதவு விழுந்தது எப்படி? என்பது குறித்து வணிக வளாக பொறுப்பாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கட்டிட காவலாளி மற்றும் துணிக்கடையின் மேலாளர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமி செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது.
- மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்தார். சக்திவேல் என்பவரின் மகள் செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்ததை அடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவனையில் வெள்ளிக்கிழமை புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
நள்ளிரவு ஒரு மணிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மீண்டும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.






