என் மலர்
நீங்கள் தேடியது "Student dies"
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது.
- தினேஷ் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஜல்லுத்து பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தினேஷ் (வயது15). இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது. இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
- பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரியபுலியூர் அருகேயுள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரதீப் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.
இவர் கடந்த 16-ம் தேதி, கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், தங்களுக்கு சொந்தமான தறிகுடோனின் மேற்கூரையில் மழையால் பழுதான சிமெண்ட் அட்டையை சரி செய்வதற்காக குடோன் மேலே ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அவரது தந்தை வேலுசாமி அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கோவை,
திருப்பூரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது கல்லூரியில் படிக்கும் சவுரிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீஹரி (வயது 19) என்பவருடன் ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா செல்வது என முடிவு செய்தார். அதன்படி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார் ஓட்டிச் சென்றார்.
மோட்டார் சைக்கிள் காளப்பட்டி நால் ரோடு சந்திப்பில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஸ்ரீஹரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
- நேற்று இரவு இவர் மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கூடக்கோவில் போலீஸ் சரகம் சின்னஉலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் கார்த்திகைசெல்வி(வயது 12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.
காளிமுத்து சின்ன உலகாணி கிரா மத்தில் தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி உள்ளார். கட்டிட பணி முழுமை பெறாத நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு கார்த்திகை செல்வி மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.
அப்ேபாது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகை செல்வி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதையடுத்து மாணவி கார்த்திகை செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஊராட்சி பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஷ் அவரது வீட்டில் வளர்க்கும் காளை மாட்டுக்கு தண்ணீர் காட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவன் கீழே சரிந்து விழுந்தான். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் வீட்டில் வளர்த்து வரும் மாட்டினை எருது விடும் திருவிழாவுக்காக தயார்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்போது மாடு அவனை குத்தியதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே இது குறித்து தெரியவரும் என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:-
ஜெகதீஷ்க்கு சொந்தமான ஒரு மாட்டினை அவருக்கு சொந்தமான நிலத்தில் மேய்ப்பதற்காக கொண்டு செல்லும் வழியில் மாடு அவரை முட்டியது. அதில் காயமடைந்த சிறுவனை உடனே நாராயணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்வானது மாடு விடும் திருவிழாவால் ஏற்பட்டவில்லை. மாடு மேய்க்க கொண்டு செல்லும் போது சிறுவன் இறந்துள்ளான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே மேலபூஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 50). இவருடைய மகள் சாதனா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் அவர் திடீரென மாயமானார்.
இதையடுத்து பாய்ச்சல் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பே ரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தர்மலிங்கத் துக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் மாணவி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து செங்கம் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து மாணவி உடலை மீட்டனர்.
போலீஸ் விசாரணையில் கால்நடைகளை பிடித்து சென்ற போது கால் தவறி கிணற்றில் சாதனா விழுந்து இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
- இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் . அவரது மகன் அபுபக்கர்(வயது15). சித்தால் அரசு மாதிரி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அபுபக்கர் ஓட்டினார். அரியாந்தக்கா அருகே வந்தபோது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் அபுபக்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது. சாலமுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் காயம் அடைந்த மாணவன் உள்பட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுபக்கர் பரிதாபாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சஞ்சனா கொத்த புரிநத்தம் அரசு பள்ளியில் 3 -ம் வகுப்பு படித்து வந்தாள்.
- கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்துள்ள வனத்தாம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி நிஷாந்தினி. இவர்களது மகள் சஞ்சனா (வயது8). சஞ்சனா கொத்த புரிநத்தம் அரசு பள்ளியில் 3 -ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று தனது தோழிகளுடன் அருகில் உள்ள பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த சவுரி ராஜன் என்பவர் செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் பணிக்கு மண் எடுக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி இருந்த தண்ணீரில் சிக்கி உள்ளாள். உடன் சென்ற சஞ்சனாவின் தோழிகள் காப்பாற்றும் முயற்சியில் சத்தம் போட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சஞ்சனாவை மீட்டு அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி சஞ்சனாவின் பெற்றோர்கள் கண்டமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி சஞ்சனா செங்கல் சூளை பள்ளத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்வதை ஏற்படுத்தி உள்ளது.
- தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர், தொரப்பாடி யை சேர்ந்தவர் சரவணன். கார் டிரைவர். இவரது மகன் சுகந்தன் (வயது 21).
இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சுகந்தன் நேற்று இரவு 8 மணி அளவில் தனது நண்பர்களுடன் அரியூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இதனை கவனிக்காமல் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த சுகந்தன் ரெயில் அருகே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சுகந்தன் உள்ளிட்ட நண்பர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். அதற்குள் வேகமாக வந்த ரெயில் சுகந்தன் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த சுகந்தனை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுகந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பிளஸ்-1 படித்து வந்தார்
- கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே நொச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், விஷால் (வயது 16). ரித்திஷ் (12) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். பாஸ்கர் சவுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பெரம்பலூரில் தனியார் பள்ளி ஒன்றில் விஷால் பிளஸ்-1-ம், ரித்திஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று காலை சசிகலா அதே பகுதியில் உள்ள தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்க மகன் விஷாலுடன் சென்றுள்ளார். அங்கு மருந்தில் கலக்குவதற்காக குடத்தில் தண்ணீர் எடுத்து வர விஷால் கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது விஷால் கால் தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் விஷால் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாயார் கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றுமாறு கதறி அழுதவாறு வயலில் வேலை செய்தவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வயலில் வேலை செய்தவர்கள் கிணற்றில் குதித்து விஷாலை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் விஷால் கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சசிகலா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார்.
- சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 41).
இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் திருவாளி முத்து(14) என்ற மகனும், அனிதா(13) என்ற மகளும் உள்ளனர். அனிதா அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார். இதையடுத்து மானூர் போலீசார் அவரது உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் குளத்தில் அதிக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக, அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் அதிக அளவு வெளியேறி சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மணல் மூட்டைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு வெள்ள நிவாரண தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக அனிதாவின் உறவினர்கள் பள்ளமடை கிராமத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மானூர் தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
- 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கண்ணூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
இந்நிலையில், வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்பில் மோதி உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






