search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tractor collision"

    • தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • அய்யாசாமி மற்றும் செல்வி ஆகி யோர் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 67) விவசாயி, இவர் சம்ப வத்தன்று தனது மனைவி செல்வி (45) என்பவருடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பல்லகச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் இவரது பொபட் மீது மோதியது. இதில் அய்யாசாமி மற்றும் செல்வி ஆகி யோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தி னர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபாமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 23). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் ஐயம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கட்டளை அருகே வரும்போது எதிரே வந்த டிராக்டர் இவர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் ஜெகன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்கால் வரிச்சிக்குடி அருகே டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.
    • வேகமாக வந்த டிராக்டர், காத்த முத்து மீது பயங்கரமாக மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டு ச்சேரியை அடுத்த வரி ச்சி க்குடி பகுதியை ச்சே ர்ந்த வர் காத்தமுத்து(வயது60). இவர் கடந்த ஏப்ரல் 13-ந் தேதிவரிச்சிச்குடி பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மெயின் சாலையையை ஒட்டி உள்ள ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த டிராக்டர், காத்த முத்து மீது பயங்கரமாக மோதியது. இதில், காத்தமுத்து தலையில் பலத்த காயமடைந்தார்.உடனே அங்கிருந்தவர்கள், காத்தமுத்துவை, வரிச்சிச்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சை க்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டார்.

    அங்குள்ள டாக்டர்கள், புதுச்சேரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்குமாறு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு சிகிச்சையில் இருந்த காத்தமுத்து சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து அவரது உறவினர் கோவி ந்தசாமி, காரைக்கால் போக்குவரத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

    • ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). இவர் லாரி டிரவைர்.

    இவர் சொந்த வேலை காரணமாக பைக்கில் கருகத்தாங்கல் கிராமத்திற்கு சென்றார்.

    வந்தவாசியிலிருந்து ஆரணி நோக்கி விறகு ஏற்றி ெகாண்டு டிரைவர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து சண்முகம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

    தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்றும் சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார்,

    கள்ளக்குறச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 27). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கீழ்பாடி அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கத்தில் சத்தியராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
    • இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் . அவரது மகன் அபுபக்கர்(வயது15). சித்தால் அரசு மாதிரி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அபுபக்கர் ஓட்டினார். அரியாந்தக்கா அருகே வந்தபோது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் அபுபக்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது. சாலமுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் காயம் அடைந்த மாணவன் உள்பட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுபக்கர் பரிதாபாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
    • தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    சின்னசேலம், ஜன. 14-

    கள்ளக்குறிச்சி வி.ஓ.சி.நகரை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் கள்ளக்குறிச்சியில் உள்ள லேத்து பட்டறையில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று வேலையை முடித்துவிட்டு தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அக்ராய பாளையத்தில் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இரவு 10.30 அக்கரா பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில் முத்தையா மில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது புதுப்பல்லக் கச்சேரி ஊரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு கச்சிராயபாளையம் நோக்கி வந்து வந்தவர் எதிர்பாராத விதமாக சாகுல் ஹமீத் சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிப ட்டார் பின்னர் அடிபட்டு கீழே கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    ×