டிராக்டர் மோதி லாரி டிரைவர் பலி

ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை போலீசார் விசாரணை
டிராக்டர் மோதி லாரி டிரைவர் பலி
Published on

ஆரணி:

ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). இவர் லாரி டிரவைர்.

இவர் சொந்த வேலை காரணமாக பைக்கில் கருகத்தாங்கல் கிராமத்திற்கு சென்றார்.

வந்தவாசியிலிருந்து ஆரணி நோக்கி விறகு ஏற்றி ெகாண்டு டிரைவர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து சண்முகம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com