search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roof collapse"

    • திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
    • பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. 6 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்த நிலையில், ஒரு வாரத்திலேயே வகுப்பறையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியில் வராண்டாவில் மேற்கூரையிலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று 3-வது முறையாக வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.

    திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    நேற்று, பள்ளி வராண்டாவில் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், நல்வாய்ப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.

    பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • தேவாலயத்தில் ஞானஸ்னானம் எனும் சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது
    • இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள்

    மெக்சிகோ நாட்டின் வடக்கே உள்ள டமாலிபாஸ் (Tamaulipas) பகுதியில் உள்ள மெக்சிகோ வளைகுடாவின் கடற்கரையோர நகரம், சியுடாட் மடேரோ (Ciudad Madero). இங்கு சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 80 பேருக்கும் மேற்பட்ட கிறித்துவ மக்கள் அங்குள்ள சான்டா க்ரூஸ் தேவாலயத்தில் வழிபாட்டிற்காக கூடியிருந்தனர். அங்கு 'ஞானஸ்னானம்' எனும் கிறித்துவ மத சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 60-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள். காயமடந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இடிபாடுகளுக்கிடையே 80 பேர் இன்னமும் சிக்கி உள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க காவல்துறை மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் டமாலிபாஸ் கவர்னர் அமெரிக்கொ வில்லாரியல் (Americo Villarreal) தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    மீட்பு நடவடிக்கைக்கு உதவ தேவைப்படும் ஹைட்ராலிக் லிஃப்ட், மரங்கள், சுட்டி உட்பட பல உபகரணங்களை தந்து உதவ கோரி சமூக வலைதளங்களில் அப்பகுதி மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பிளாட்பார மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    ஈரோடு-சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னையில் இருந்து காலை 6.30 மணியளவில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. பயணிகள் இறங்கி சென்று கொண்டிருந்தனர். 4-வது பிளாட்பார்ம் மற்றும் 3-வது பிளாட்பார்முக்கு இடைப்பட்ட ‘சப்-வே’ வழியில் பயணிகள் வேகமாக இறங்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பிளாட்பார்மின் மேற்கூரை கான்கிரீட் தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது.

    அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஈரோடு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி (வயது 42) என்பவரது தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் மேற்கூரையின் கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்ததில் நடந்து சென்ற மேலும் 3 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு ஈரோடு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
    ×